தமிழநம்பி
விழுப்புரத்தில் 11-05-2008 ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் நிகழ்வாக நடைமபெற்ற ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு பற்றிய முழுமையான செய்திகளைத் தொகுத் தளிக்கின்றோம். செய்திகள் விடுபட் டிருப்பின் அறிந்தோர் தெரிவிக்க வேண்டுகிறோம்.
‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு 11-05-2008 ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் நிகழ்வாக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் கணிப்பொறிப் பயிற்றறையில் மிகவும் பயனுற நடந்து முடிந்தது.
இப்பயிலரங்கை விழுப்புரத்தில் நடத்துதற்கு அடிப்படையாக அமைந்த
சில செய்திகள் உண்டு.
2007ஆம் ஆண்டு திசம்பர் 9ஆம் நாள் புதுச்சேரியில் ‘சற்குரு’ விடுதியில் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் இதே தலைப்பிலான ஒரு பயிலரங்கை நடத்தியது. அப்பயிலரங்கில் கலந்துகொள்ள விழுப்புரத் திலிருந்து தமிழநம்பி, எழில்.இளங்கோ ஆகிய இருவரும் பெயர் பதிந்திருந்தோம். எதிர்பாராத சூழல்களால் எழில்.இளங்கோ புதுச்சேரி பயிலரங்கில் கலந்துகொள்ள முடியாத நிலையேற்பட்டது.
புதுச்சேரிப் பயிலரங்கில், இத்தகைய பயிலரங்குகள் சிற்றூர்ப்புறங்களி லெல்லாம் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தைத் தோழர்கள் இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன் ஆகிய இருவரும் சிறப்புரையாற்றிய பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பெருமதிப்பிற்குரிய பொன்னவைக்கோ ஐயா அவர்களும் வலியுறுத்தினர்.
பயிலரங்கின் பயன் வழுப்புரம் பகுதியிலுள்ள, கணிப்பொறியை இயக்கப் போதுமான அடிப்படைச் செயற்பாடுகளைத் தெரிந்த, தமிழ்தெரிந்த அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற அழுத்தமான எண்ணம் இருந்தது.
எனவே, புதுவை இரா.சுகுமாரன் அவர்களிடம் விழுப்புரத்தில் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு நடத்தவேண்டும் என்ற விழைவைத் தெரிவித்தோம். அவர் எவ்வகைத் தயக்கமுமின்றி இசைந்ததோடு எல்லா வகையிலும் உதவுவதாக உறுதிகூறினார். அத்துடன், அவருக்கு நன்கு அறிமுகமாயிருந்த விழுப்புரம்பகுதி ‘தினமணி’ நாளேட்டின் செய்தியாளரிடம் அவரே செய்தியைக் கூறியுள்ளார்.
இந்நிலையில், வழுப்புரம் பகுதி ‘தினமணி’ செய்தியாளர் திரு. செயப்பிரகாசு விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கிற்கான ஒருங்கிணைப்பாளர் தமிழநம்பியை நேர்கண்டு செய்திகளைத் தொகுத்து தினமணியில் எழுதினார். அச்செய்தி 6-4-2008ஆம் நாள் தினமணியில் ‘இணையத்தில் தமிழ் வளர்க்கும் வலைப்பதிவுகள் – விழுப்புரத்தில் புதிய அமைப்பு’ என்னும் தலைப்பில் ஒரு சிறிய செய்திக் கட்டுரையாக சிறப்புற வெளிவந்தது. அதற்காக, விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம் அச்செய்தியாளருக்கும், ‘தினமணி’ நாளேட்டிற்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
அந்தச் செய்திக் கட்டுரையில், ஏப்பிரல் மாத இறுதியில் விழுப்புரத்தில் இலவசமாகப் பயிலரங்கு நடத்தவிருப்பதைப் பற்றியும், பயிலரங்கு பற்றிய செய்திகளை அறியத் தொடர்பு கொள்ள வேண்டிய ஒருங்கிணைப்பாளரின் தொலைபேசி எண்களும் மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது.
செய்தியைப் படித்தவர்கள் ஒவ்வொருவராகத் தொடர்பு கொண்டு நடைபெறவிருக்கும் பயிலரங்கில் பயிற்சிபெறத் தம் பெயரைப் பதிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளத் தொடங்கினர். அவ்வாறு பெயர் பதிந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பதானதும் பயிலரங்க ஏற்பாடு குறித்துப் பேச தோழர் இரா.சுகுமானை அடிக்கடி தொடர்புகொண்டு தொல்லை கொடுத்தோம். தோழர் கோ.சுகுமாரன் பல்வேறு பணிகளின் பொருட்டு தொடர்ந்து வெளியூர் சென்றதால் விழுப்புரம் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் குழு புதுவை சென்று பேசுவதாக இருந்த முடிவு மாறியது.
தோழர் இரா.சு. அவர்களே ஏப்பிரல் இறுதியில் ஒருநாள் மாலை விழுப்புரம் வந்தார். பயிலரங்கைத் தொலைபேசி நிலையத்தில் நடத்துவதென்றே முதலில் திட்டமிட்டோம். தோழர் இரவிக்கார்த்தி அரசு கலைக்கல்லூரி வசதியாக இருக்குமென்று கருதினார். தோழர் இரா.சு. இரவிக்கார்த்தி, எழில்.இளங்கோ, தமிழநம்பி முதலான ஒருங்கிணைப்புக் குழுத் தோழர்களுடன் கலந்து பேசிவிட்டு 11-5-2008 அன்று பயிலரங்கை நடத்துவதென்ற முடிவெடுத்தபின் இரவு பதுவைக்குத் திரும்பிவிட்டார்.
இரண்டு நாள்கள் கழித்துத் தொடர்பு கொண்டபோது, தோழர் இரா.சு., பயிற்சி தருகின்றவர்கள் வர இயலாதநிலை யிருப்பதால் பயிலரங்கை நடத்தும் நாளைத் தள்ளி வைக்க வேண்டு மென்றார். மே 11இல் நடத்த இயலாத நிலையி லுள்ளதாகவும் கூறினார். அதற்குள், இங்குக், கல்லூரியில் பயிலரங்கு நடத்த இசைவு பெற்றுவிட்டதையும், மே 11க்குப் பிறகுக் கல்லூரியில் மாணாக்கர் சேர்க்கை தொடர்பான வேலையழுத்தம் இருக்கு மென்பதால் கல்லூரியில் நடத்த இசைவதில் அவர்களுக்குத் தொல்லை இருப்பதாக அவர்கள் தெரிவித்ததையும் கூறினோம். மேலும், தோழர் இரா.சு. அவர்கள் ஒருவரே பயிற்றுவித்தாலும் கூடப் பயிலரங்கை நன்கு நடத்திவிட முடியும் என்ற நம் நம்பிக்கையைத் தெரிவித்தோம். ஆனால், இரா.சு. மனம் ஒப்பவில்லை.
இந்நிலையில், தோழர் கோ.சுகுமாரனைப் பெரு முயற்சிக்குப் பின் தொடர்பு கொண்டு சூழ்நிலைகளை விளக்கிக் கூறிப் பயிலரங்கை மே11இல் நடத்த வேண்டியிருப்பதை வலியுறுத்தினோம். அவரும் இரா.சு.வும் 4-5-08 அன்று விழுப்புரம் வருவதாகவும் அதைப்பற்றிப் பேசலாமெனவும் கோ.சு. கூறினார். அவ்வாறே, இரண்டு சுகுமாரன்களும் 4-5-08 முற்பகலில் வுழுப்பரம் வந்தனர். தமிழநம்பி, இரவிக்கார்த்தி, எழில்.இளங்கோ ஆகிய மூவரும் அவர்கள் இருவரோடும் கல்லூக்குச் சென்றோம். அங்கு எல்லா வற்றையும் பார்த்தும் கேட்டும் அறிந்த பிறகு, கோ.சு. 11-5-2008இலேயேப் பயிலரங்கை வைத்துக் கொள்ளலாமெனக் கூற, தோழர் இரா.சு. ஒருவாறு ஒப்பினார்.
புதுவை திரும்பியபின், இரா.சு. சென்னை புதுவையில் உள்ள பயிற்றுவிக்கும் தோழர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் மே11இல் பயிலரங்கிற்கு விழுப்புரத்திற்கு வருவதற்கான நிலையை உருவாக்கி இருக்கிறார். அதன்பின்பே அவருக்கு மனம் அமைதியாயிற்று. அப்புறம் தான் அவர் பேச்சில் பதற்றம் மறைந்து அமைதியைக் கண்டோம்.
பயிலரங்கிற்காக, 6-5-08 அன்றே அகலப்பட்டை இணைய இணைப்பை இயல்பாகக் கட்டவேண்டிய தொகையைக்கட்டி அரசு சார்ந்த தொலைத் தொடர்பு நிறுவனத்திடமிருந்து பெற்றோம். பின்னர், இருபத்தி இரண்டு கணிப்பொறிகள் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கிற்கென அணியப் படுத்தப்பட்டன. பயிலரங்க அழைப்பிதழும் செய்தி விளக்கத் துண்டறிக்கையும் ஒரே தாளில் அச்சிடப்பட்டன.
இதற்கிடையில், தோழர் இரவிக்கார்த்தி, பயிலரங்கைத் தொடக்கி வைக்க தமிழ்நாட் டரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு க.பொன்முடி அவர்களிடம் இசைவைப் பெற்றிருந்தார். பயிலுநர் பற்றிய குறிப்புகளை அவர்களே எழுதித்தரும் வகையில் பயிலுநர் பதிவுத் தாள்கள் ஒரு நூறு அணியப் படுத்தப் பட்டன. புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் வெளியிட்ட மலரிலிருந்து சில கட்டுரைகள் படப்படி எடுக்கப்பட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் பயிலுநர்க்கு அளிக்க சிறு தொகுப்பு நூல்கள் அணியப் படுத்தப் பட்டன.
பயிலரங்கு தொடர்பாக இரண்டு பெரிய விளம்பரப் பதாகைகளும் சிறிய அளவில் மூன்று பதாகைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவை தவிர, பகல் உணவிற்கும் இரண்டு முறை தேனீரும் ஈரட்டி(biscuit)யும் அளிக்கவும் குடிநீருக்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டன.
பயில்வோராகப் பதிந்து கொண்டோர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து நூறைத் தாண்டியது. 10-5-2008ஆம் நாள் வரையில் பதிவு செய்து கொண்டவர்கள் பட்டியல்: 1. எழில். இளங்கோ – விழுப்புரம் 2. கோ. பாபு
3. கார்த்திகேயன் 4. பா. சோதி நரசிம்மன் 5. தாமோதரன் 6. சிவச்சந்திரன்
7. இலலித் குமார் 8. கா.தமிழ்வேங்கை 9. துரை. செந்தில் குமார்
10. திருவாட்டி செந்தில் குமார் 11. இரா. பாலசுப்பிரமணியம்
12. ஆ.இரவிகார்த்திகேயன் 13. இரா.ச.சொக்கநாதன் 14. வே,நாகராசன்
15. அசோக்குமார் 16. சீ. விக்கிரமன் 17. அசாருதீன் 18. பேரா. மகாவிஷ்ணு
19. சா. மா. அறிவுக்கண்ணு 20. ந. சிவக்குமார் 21. இதயவேந்தன்
22. அ.ரஸ்கின்ஜோசப் 23. செ.த. க. கந்தன் 24. தமிழோசைப்பித்தன்
25. தி. பழநிச்சாமி 26. பேரா. மாதவி 27. பேரா. தமிழரசி 28. பேரா. கலைச்செல்வி 29. பேரா. வேலு 30. நன்மொழி 31. வைத்திலிங்கம்
32. பாலாஜி 33. பிரபாசங்கர் 34. சபாபதி – பெரியார் நகர் 35. சதாசிவம்
36. முருகப்பன் 37. செந்தில்முருகன் 38. உமாமகேசுவரி 39. எம். தேவி
40. எம். சத்தியா 41. டி.இளமதி 42. சுபலட்சுமி 43. ஜி.சத்தியா 44. வி.சத்தியா
45. சத்தியவாணி 46. பத்மினி. 47. சுபாஷிணி 48. இந்திரா 49.மேரி
50. ஸ்டெல்லா 51. சபாபதி –பொறிஞர் 52. இராசேந்திரன் 53. பூவராக மூர்த்தி 54. மாணிக்கம் 55. சண்முகம் 56. சிகாமணி 57. மாணிக்கமூர்த்தி
58. கி. இராதாகிருட்டிணன் 59. கே. இரவீந்திரன் 60. இரமேஷ் – கள்ளக் குறிச்சி 61. இராம்குமார் 62. வெற்றியரசு – காஞ்சி 63. தினகரன்
64. தமிழ்ப்பரிதி 65. அறிவுக்கனல் கோவிந்தன் 66. சிறிதரன். 67. சரவணன் – திண்டிவனம் 67. சபா. குப்புசாமி – புதுவை 68. அரிமா பாண்டியன்
69. கு. இளங்கோ 70. தமிழ்நாவன் 71. சண்முகம் – சங்கராபுரம்
72. சனார்த்தனம் 73. கோதண்டம் 74. மாரிமுத்து – பழனி 75. முத்துவேல் – கல்பாக்கம். 76. வள்ளலார் அடிமை – வடலூர் 77. மருத்துவர் கோவிந்தராசன் – அறந்தாங்கி 78. இராமச்சந்திரன் – திருவாண்டார்கோவில்
79. குமரேசன் 80. இராஜ்மோகன் 81. இத்ரிஷ்கான் 82. ஏழுமலை
83. சம்பத்து 84. இர. கதிரவன் 85. இலாடமுத்து – புதுவை
86. இலா. அருள்மொழி 87. இலா. தத்தை 88. கு.அ. தமிழ்மொழி
89. நாகராசன் 90. இராஜேஷ் –விழுப்புரம் 91. தமிழோசைப்பித்தன்
92. ச.இரவிவர்மன் 93. மருத்துவர் கோவிந்தராசன் –அறந்தாங்கி
94. மாகிர் – அதிராம்பட்டினம் 95. கதிரவன் – ‘ஆவின்’
96. குணசேகரன் 97. ச.அனுரேகா 98. கு.அ. தமிழ்மொழி
99. த. நிலவரசி 100. இரா. முருகன் 101. எம்.ஜாபர் சாதிக் அலி
102. செ. நீலமேகம் 103. வெற்றிச்செழியன் 104. வி. முருகன் – பாப்பனப்பட்டு 105. கோ. செந்தில்குமார்
(எதிர்பார்த்த வாறே, பெயர் பதிந்தவர்களில் சிலர் வரவில்லை; பதியாமல் வந்த கொஞ்சம் பேரும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்)
— பயிலரங்கச்செய்திகள் தொடர்ந்து எழுதப்படும் —
—
தமிழநம்பி
- பிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையம்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -6
- அதிசய மனைவி லட்சுமியும், மோகன்லாலின் இரு படங்களும்
- லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமின் தமிழ் சேவைக்கு இயல் விருது.
- ” நாளை பிறந்து இன்று வந்தவள் ” மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 20 ஏழையின் காதலன் !
- தாகூரின் கீதங்கள் – 31 உன் உன்னத அழைப்பு !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 8 (சுருக்கப் பட்டது)
- புரண்டு படுத்த அன்னை
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 21 மகாகவி பாரதியார்
- தெய்வ மரணம் – 2
- National Folklore Support Centre announces Sir Dorabji Tata Fellowships For North Eastern India
- அன்புள்ள விலங்குகள் : என்.எஸ்.நடேசனின் “வாழும் சுவடுகள்”
- கடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்
- உள்ளூர் கோயபல்ஸ்கள்!
- அகரம்..அமுதாவின் வெண்பாக்கள்!
- கடிதம்
- மலர் மன்னனுக்கு பதில்!
- திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் கவிதை நூல் விமர்சன நிகழ்ச்சி
- முஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லை
- மலர்மன்னன்
- கடிதம்
- விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு
- ‘திருக்குர்ஆனும் நானும்….’ – சுஜாதா : அஞ்சலி
- போதி மரம்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 12
- மனிதம் நசுங்கிய தெரு !
- மீட்சி
- தேயும் தமிழ் நேயம் (இந்நூற்றாண்டின் தமிழ்க்கவலை)
- மும்பை விசிட்-சில தகவல்கள்
- நிகழ்கால குறிப்புகள் – மே 2008 -1
- நிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2
- தனிமை
- செப்புவோம் இவ்வன்னை சீர்
- தாஜ் கவிதைகள்
- வானம்
- துவம்சம்” அல்லது நினைவறா நாள்
- நீளக்கூந்தல்கா¡¢யின் அழகானச் செருப்பு
- உலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள்
- எவ்வித ஆதாரமும் சொல்லாமல்