வே.சபாநாயகம்
1. எழுத்தாற்றலை ஓரளவுக்குப் பயிற்சியால் வளர்த்துக் கொள்ள முடியும்.தமிழ் நன்றாகத் தெரியவேண்டும்.தமிழில் நிறையப் படிக்க வேண்டும். அதிகம் பேசாமல் நிறையக் கவனிக்க வேண்டும்.எழுத்து என்பது ‘Memory shaped by art’ என்று சொல்வார்கள். உண்மை எத்தனை? கற்பனை எத்தனை? அவற்றை எந்த அளவில் கலப்பது? நடந்ததைச் சொல்வதா? நடந்திருக்க வேண்டியதைச் சொல்வதா? – இந்த ரசாயனம் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நாளாகும். இதற்குக் குறுக்கு வழியே இல்லை. நிறைய எழுதிப் பார்க்க வேண்டும்.
2. பால்சாக் ஒரு நாளைக்குப் பனிரெண்டு மணி நேரம் எழுதினார். அத்தனை எழுத வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு ஒருபக்கம் எழுதினாலே வாழ்க்கையில் நூறு புத்தகம் எழுதி விடலாம்.
3. The image that fiction producesis purged of the distractions, confusions, and accidents of ordinarylife என்றதுபோல தின வாழ்க்கையி லிருந்து தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். தெரிந்த மனிதர்கள்,தெரிந்த சம்பவங்கள் பற்றி முதலில் எழுதுவது நல்லது. சொந்தக் கதை எழுதுவதை விட, மனதில் வந்த கதையைச் சொந்தப் படுத்திக் கொண்டு எழுதுவது சிறப்பு.
4. எழுதியதைச் சில தினங்கள் விட்டுப் படித்துப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு வாசகனின் கோணத்திலிருந்து அதை பார்க்க இயலும். கொஞ்சம் கூடக கருணயே காட்டாமல் அநாவசிய வார்த்தைகளையும் வாக்கியங்களையும் சிதைத்து விட வேண்டும். ‘நான் எழுதியதெல்லாம் மநிதிர போல; ஒரு வார்த்தையை நீக்க முடியாது; நீக்கக் கூடாது என்பதெல்லாம் மடத்தனம்.உனக்கே திருப்தி வரும்வரை திரும்பத் திரும்ப எழுதுவதிலுக் திருத்துவதிலும் நீக்குவதிலும் சேர்ப்பதிலும்தான் நல்ல எழுத்து ஜனிக்கிறது.
5. எழுத்தாற்றல் வந்துவிட்டது உங்களுக்கே புரியும். ஒரு ஜுரம் போல உணர்வீர்கள்.நீங்கள் சிருஷ்டித்த பாத்திரங்கள் உங்கலளை ஆக்கிரமிப்பார்கள். எழுதுவதில் உள்ள வேதனைகள் கழன்று போய் உங்களை எழுத ஆரம்பிக்கும். இந்த நிலை வருவதற்குச் சில தியாகங்கள் தேவை.
6. உருவம், உள்ளடக்கம் என்று பலர் ஜல்லியடிப்பதைக் கேட்டிருக்கிறேன். டெண்டர் நோட்டீக்சுகுக்கூட உருவமும் உள்ளடக்கமும் இருக்கிறது. பின்சிறுகதை என்பது தான் என்ன? கூர்ந்து கவனியுங்கள். சிறுகதை என்பது ஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கும் உரைநடை இலக்கியம்.
7. எழுதுகிறவனுக்குக் கவனம் முக்கியம். எலோரும் கவனிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்துப்பார்த்தால் நாம் கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம். கவனிப்பது என்பது உடல் நிலையையும், மனநிலையையும் பொறுத்தது. காண்கிற எல்லாவற்றையும் கவனிக்க எனக்குச் சில வருஷங்கள் ஆயின. கவனித்த அத்தனையையும் எழுதவேண்டுமென்பதில்லை.எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள் – முக்கியமாக மானுடம் வேண்டும்.
8. எழுதுவதற்கென்று ஏதாவது விதிகள் உள்ளனவா? நல்ல அப்சர்வேஷன் பவர்
வேண்டும்.ரெனது கண்களையும் காதுகளையும் எப்போதும் கவ்னமாகத் திறந்து
வைத்திருக்கிறேன். வாசிப்பது எழுதுவதற்குப் பெரிதும் துணை புரிகிறது.எதைப் பற்றித் தெலிவாகத் தெரியுமோ அதைப் பற்றியே எழுத வேண்டும்.
- மனிதர்கள் இல்லாத பொழுதுகள்
- கருணாகரன் கவிதைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ? (கட்டுரை: 7)
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்
- 2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது
- The Mighty Heart :இது இது தான் சினிமா:
- அடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்
- கானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7
- லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி
- ஆட்டோகிராப்
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா
- லா.ச.ரா.வின் பாற்கடலும் போர்க்களமும்
- நினைவுகளின் தடத்தில் – (3)
- ஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு
- எச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)
- இலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்
- பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை
- பாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்
- கோவிந்த் கடிதம் பற்றி
- உயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா
- லா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..
- பாற்கடலைக் கடைந்த விதம்
- வசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு
- மனம் மொழி மெய்
- இட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்
- பொண்ணுங்க மாறிட்டாங்க!
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2
- தைவான் நாடோடிக் கதைகள் 4
- வெள்ளிக் கரண்டி
- ஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்
- படித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்
- குறிப்பேட்டுப் பதிவுகள் -4!
- டபுள் இஞ்ஜின்
- ஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா
- முப்பெருவெளியின் சங்கமம்
- தாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி !
- நின்னைத் துதித்தேன்
- பாரதி இன்றிருந்தால்..?
- பாரதிக்கு அஞ்சலி!
- எனக்கென்று ஒரு கை
- அக்கினிப் பூக்கள் -4
- மாத்தா ஹரி – அத்தியாயம் 40