கோட்டை பிரபு
இளைஞருக்கு வழிகாட்டும் தீப்பந்தமாக இருக்கவேண்டிய திரைப்படமானது அவனையே சுட்டெரிக்கும் சூனியமாகிறது!
சிங்கப்பூர் கேலாங்மேற்கு சமூகமன்றத்தின் இந்திய நற்பணிக்குழுவின் ஏற்பாட்டில் சிறப்புப் பட்டிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை உமறுப் புலவர் தமிழ்மொழி மையத்தில் முனைவர். ரத்தின வெங்கடேசன் அவர்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக அரங்கேறியது.
“இன்றையத் திரைப்படங்கள் இளையர்களை நல்வழிப்படுத்தவில்லை” – ஆம், எனும் தலைப்பில் திரு.ஸ்டாலின் போஸ் தலைமையில் திரு. மணிசரவணன், கண்டனூர்.திரு.சசிகுமார் அவர்களும்,’ இல்லை, எனும் தலைப்பில் திரு.இனியதாசன் தலைமையில் திரு. தமிழ்க்கோ, திரு.கோவிந்தராஜ் அவர்கள் அடங்கிய இரு குழுக்கள் சொற்போரிட்டனர்.
இந்த சொற்போருக்கு நடுவர் பதவி வகிப்பது சற்று சிரமமான காரியம், எனினும், சொல்லருவி திரு.சிவக்குமார் அவர்கள், அப்பதவிக்கு மிகச்சரியாகப் பொருந்தி நடுநிலைகாத்தார். மேலும், இந்நாள்வரை அணித்தலைவராக அனல் வீசிக்கொண்டிருந்த அவர், முதல்முறையாக நடுவர் பதவி ஏற்கிறார் என்பது சிறப்பம்சமாகும்.
சமூகத்தின் பிரதிபலிப்பே திரைப்படம். ஆனால், இன்றையத் திரைப்படங்கள் அதை சரியாகத்தான் செய்கிறதா? இன்றும் தரமான சமூகப்பார்வையுடனான படங்கள் வந்துகொண்டு தானே இருக்கின்றன, இத்தகைய கேள்விகளுக்கும்,பல சந்தேகங்களுக்கும், தெளிவான பதில்களை தங்களது சிறப்பான பேச்சுக்களால் எடுத்து வைத்தனர் பட்டிமன்ற பேச்சாளர்கள்.
பார்வையாளர்கள் அங்கத்தில் தமிழ்த்தொண்டர் திரு.புருஷோத்தமன் அய்யா அவர்கள் புதியதாக பதவிவகித்த நடுவருக்கும், அணித்தலைவருக்கும் வாழ்த்துக்களையும், தனது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.
ஓவ்வொருப் பேச்சாளரின் பேச்சுக்களையும் வரிசைப்படுத்தி, ஆய்ந்து தனது சிறப்புரையுடன், “இன்றையத் திரைப்படங்கள் இளையர்களை நல்வழிப்படுத்தவில்லை” – ‘ஆம்’ எனும் மிகச்சரியான தீர்ப்பை தனது அழகுத் தமிழில் பதியவைத்தார் நடுவர்.
உண்மைதான், அன்றைய திரைப்படங்கள் முதல், இன்றைய திரைப்படங்கள் வரை, தனிநபரை மையப்படுத்தியே சுழலும் கதையம்சங்கள் கொண்ட படங்கள் என்றுமே இளையர்களை நல்வழிப்படுத்த இம்மியளவும் முயலவில்லை.
தொடர்ந்து பேச்சாளர்களுக்கும், நடுவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. செவிக்கு சிறப்பான உணவை பரிமாறிய இப்பட்டிமன்றம், கவிஞர். இறைமதியழகன் அவர்களின் அன்பான ஏற்பாட்டில் மிகச்சிறப்பான சிற்றுண்டியையும் பரிமாறியது ,
வாழ்த்துக்களுடன்,
கோட்டை பிரபு
kottaiprabhu@yahoo.com
- விளம்பரக் கவர்ச்சியில் வந்த வேதனை ?
- கடிதம்
- தன் வினை
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 16,17)
- இருபதாம் நூற்றாண்டின் காப்பியப் போக்குகள்
- இளைஞர்களை சுட்டெரிக்கும் வெள்ளித் தீ ரை!!
- 1981-இல் தொடங்கிய ‘சுட்டி’: பெயருக்கேற்ற சிற்றிதழ்
- பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?
- படித்ததும் புரிந்ததும்..(7) குலுக்கல் முறையில் அமைச்சர் – சொல்லி மறந்த கதை;
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 33
- புறநானூறும் தமிழர் வரலாறும்
- சர்வைவல் ஆப் பிட்நெஸ்!
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22)
- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி.
- INTERNET BROADCASTING SCHEDULE – National Folklore Support Centre
- கடிதம்
- பம்பாய்த் தமிழ்ச் சங்கம் எஸ் ஷங்கரநாராயணனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
- துவாரகை தலைவனின் “பீங்கானிழையருவி’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா
- கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும்
- எனது துயரங்களை எழுதவிடு…!
- உனக்கும் எனக்குமான உரையாடல்
- தவறாமல் வருபவர்
- கால நதிக்கரையில்……(நாவல்)-29
- யாரோ அவர் யாரோ எங்கே போகிறாரோ?
- அலென் ராமசாமி உட்காரும் நாற்காலி
- தனிமையில் ஒரு பறவை
- சிவ சேனை பற்றிச் சில நினைவுகள்
- அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 5- வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள்
- கவிஞர் ரசூல் எழுத்தும் ஊர்விலக்கமும்
- காலத்தின் தழும்புகள்
- காதல் நாற்பது (44) உன் ஆத்மவேர் என்னுள்ளே !
- தேரோட்டி இல்லாது !
- கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்
- எல்லைகளற்று எரியும் உலகு!
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2 பாகம் 2