கோட்டை பிரபு
அந்த முறுக்குமீசைக்காரனின் மிடுக்கான தமிழை மிக எடுப்பாக அரங்கேற்றிக்கொண்டிருக்கும் சிங்கை அமைப்புகளை தமிழ் சார்ந்து தலைவணங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
கடந்த வாரம் சிங்கை �கடற்கரைச்சாலை கவிமாலையில்� பாரதி தலைப்பில் கவியரங்கம் சிறப்பாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஹெண்டர்சன் சமூகமன்றத்தின் சிறப்பான ஏற்பாட்டில் இவ்வாரம் பட்டிமன்றம் அரங்கேறியது . அதில் �பாரதி பெரிதும் வலியுறுத்துவது� பெண்ணுரிமையே ! மொழியுணர்வே ! என்பதே தலைப்பு.
ஐயகோ என்ன இது தலைப்பு ? பாரதியை இவ்வகையில் எப்படி பிரித்துப்பார்ப்பது என குழப்பத்துடன் அந்நிகழ்வில் கலந்துகொண்ட எனக்கு அங்கு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது!
அங்கே நடுவராக மூத்த தமிழ்மாணவர் என்கிற தன் அறிமுகத்தில் அகம் மகிழும் அய்யா புருசோத்தமன் அவர்களும் , பெண்ணுரிமையே என முனைவர் இரத்தின வெங்கடேசன் , திருமதி ஜெயஸ்ரீ தாமோதரன், எம்.ஜே .பிரசாத் அவர்களும், மொழியுணர்வே என எதிர்வாதத்தில் சொல்லருவி சிவக்குமார், கவிஞர் கோவிந்தராஜ் , பிரவீன்குமார். ஆகிய அத்தனை பேரும் தமது சிரத்தையான பேச்சில், குழுமியிருந்த தமிழ் ஆர்வலர்களின் சிந்தை சிறக்கச்செய்தனர் .
மேலும், அவர்களின் பேச்சில் தான் எத்தனை வரலாற்றுத் தகவல்கள். அவர்தம் எடுத்துக்காட்டுக்களில் எடுத்தியம்பிய பாடல்வரிகள், கட்டுரைத்தகவல்கள் எல்லாம் என்னுள் பாரதியை மிக ஆழமாக அழுந்தச்செய்தது. இறுதியில் பாரதி மிகவும் வலியிறுத்துவது பெண்ணுரிமையே என தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாரதியின் நினைவு தின அஞ்சலியை முன்னிட்டு கவியரங்கங்கள் , அவனது சீற்றம் நிறைந்த எழுத்துக்களை மையப்படுத்தி பட்டிமன்றம் என ஒரு உயிர்ப்பான உலகக்கவியை உயர்த்திப்பிடிப்பதில் தனது உள்ளக்களிப்பை உறுதிசெய்துகொண்டிருக்கும் அமைப்புகளின் சேவை பாராட்டுதலுக்குரியது.
நன்றிகளுடன்
கோட்டை பிரபு
kottaiprabhu@yahoo.com
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 10 அத்தியாயம் பதின்மூன்று
- பிரதாப சந்திர விலாசம் (தமிழின் முதல் இசை நாடகம்), புத்தக மதிப்புரை
- காதல் நாற்பது -42 என் எதிர்காலத்தை எழுது !
- ஈகைத் திருநாள்!
- Letter
- ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள் – கோட்டை பிரபுவின் கட்டுரை
- நவகாளியில் காந்திஜி
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் 17.
- கொழும்பு புத்தகக் கண்காட்சி – ஒரு விசிட் !
- தர்மசிறி பண்டாரநாயக்கவின் விவரணப் படவிழா
- பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
- சிங்கை வீதிகளில் பாரதி !!!
- “தொல்காப்பியச் செல்வர் கு சுந்தர மூர்த்தி” : முனைவர் மு இளங்கோவன் கட்டுரை
- தமிழ்ப் பக்தி இலக்கியங்களும் இயக்கங்களும் உலகப் பண்பாட்டிற்கு வழங்கிய பங்களிப்பு – கருத்தரங்கம்
- சோதிப்பிரகாசம் : திண்ணையில் ஜெயமோகன் எழுதிய கட்டுரை
- என் இசைப் பயணம்
- ஆயிரம் பொய்யைச்சொல்லி…….
- பெங்களூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
- படித்ததும் புரிந்ததும்..(5) பதவிப் பிரமானம் (பதவிப் பரிமானம்
- டி.என். சேஷகோபாலன் என்ற புத்துணர்வு
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 31
- காதலினால் அல்ல
- மனசாட்சி
- கால நதிக்கரையில்……(நாவல்)-27
- நாய்கள் துரத்தும் போது…
- பனி விழும் இரவு
- ஹெச்.ஜி.ரசூல் படைப்புலகம்
- தொடக்க நிலையிலுள்ள சேது சமுத்திரத் திட்டம் தொடராமல் இருப்பதே நலம்
- பெண்ணியக் கோட்பாட்டின் தோற்றமும் ஆய்வு வளர்ச்சியும்
- நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 3 : மஹாநகரத்தில் வர்தா பாய்கள், ஸ்ரீதேவிகள்
- ஒலி இலக்கியச்செம்மல் திருவண்ணாமலை சி.மனோகரன்
- சவம் நிரம்பியபுத்தகபைகள்
- பாரத அணு மின்சக்தித் திட்டங்களும் அவற்றின் அமைப்புத் திறனும் – 6
- பட்டர் பிஸ்கட்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1 பாகம் 2