பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் 17.

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

கரு.திருவரசு


பிழைதிருத்தம் – பிழைத்திருத்தம்

1970ஆம் ஆண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் அச்சேறிவந்த நூல்கள் பெரும்பாலும் பிழைகளே இல்லாத பதிப்புகளாக வந்தன. அதன்பிறகு வரும் பல நூல்களின் இறுதிப் பக்கங்களில் வரிசை வரிசையாக அச்சுப்பிழைக்கான திருத்தங்கள் இடம்பெறுவதைக் காணமுடிகிறது.

முதல் வரிசையில் பிழையான சொற்கள், அடுத்த வரிசையில் திருத்தமான சொற்கள் என அமைந்த பக்கத்தின் தலைப்பு “பிழைதிருத்தம்” என்றும் “பிழைத்திருத்தம்” என்றும் இருவகையாக அச்சிடப்பட்டுள்ளது.

இதில் எது சரி?

பிழையைத் திருத்தும் பக்கத்தின் தலைப்பிலேயே பிழை. இதைக் கொடுமை என்று சொல்வது கடுமையான சொல்லன்று.

பிழை + திருத்தம் = பிழைதிருத்தம்.

பிழை என்பது தவறு, குற்றம், தப்பிப் பிழைப்பது என்றெல்லாம் பொருள்தரும். அப்பொருள்களில் நாம் இங்கே தவறு என்பதைமட்டும் எடுத்துக்கொள்வோம்.

திருத்தம் என்றால் ஒழுங்கு, மாற்றம், திட்டம், பிழை திருத்துகை என்றெல்லாம் பொருள்படும். இங்கே திருத்துகையை மட்டும் அதாவது பிழை திருத்துகையை மட்டும் கொள்வோம்.

நூலில் ஏற்பட்ட எழுத்துப்பிழை, சொற்பிழை போன்ற அனைத்துப் பிழைகளுக்குமான திருத்தம் போடுவோர் அதைப் ‘பிழைத்திருத்தம்’ என்று எழுதக்கூடாது. அப்படிப் போட்டால் செய்த திருத்தமும் பிழையென்றாகும்.

பிழையைத் திருத்துவது பிழைதிருத்தம்.

பிழைதிருத்தம் = பிழைக்குத் திருத்தம்.
பிழைத்திருத்தம் = பிழையாகிய திருத்தம்.


thiruv36@yahoo.com

Series Navigation

author

கரு.திருவரசு

கரு.திருவரசு

Similar Posts