திலகபாமா
(படம் இடமிருந்து வலம்: அ. சிவக்கண்ணன், திலகபாமா, கே. நாகராஜன், சு.வேணுகோபால்,மு.செல்வா)
மதுரை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டமும் மதுரை மாவட்ட கலை இலக்கிய பெருமன்றமும் இணைந்து சென்ற புதன் கிழமை (1.2.06) புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கை சிம்மக்கல் மாவட்ட மைய நூலகத்தில் நடத்தின. ‘புதுமைப் பித்தனும் அவருக்குப் பிறகும் ‘ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மதுரை மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத் தலைவர் பேராசிரியர் அ. சிவக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நாலக அலுவலர் கே. நாகராஜன் முதல் நிலை நூலகர் ந. பாண்டுரங்கன் பேராசிரியர் தி.சு நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் எம்.ஜே. பிரபாகர் வரவேற்புரை நிகழ்த்தினார். புனைகதை எழுத்தாளர் சு. வேணுகோபால் கவிஞர் திலகபாமா ஆகிய இருவரும் திறனாய்வுரை வழங்கினர். சு. வேணுகோபால் தனது திறானாய்வுரையில் புதுமைப் பித்தன் கலகக் காரராக விளங்கியதையும் , தமிழ் மரபின் சாராம்சங்களை உள்வாங்கி வளர்ந்ததையும் , தமிழ்ச் சமூகத்தின் சிக்கல்களை அவற்றின் சகல பரிமாணங்களுடன் எடுத்துக் காட்டியதையும் சுட்டிக் காட்டினார்.
கவிஞர் திலகபாமா தனது திறனாய்வுரையில் ,புதுமைப் பித்தன் வாசகர் சமநிலையைக் குலைக்காதவர்.கதைகளுக்குள் பெண் மனமாக மாற முயன்றிருக்கின்றார்.அவரது கதை மாந்தரில்வாழ்வியல் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டார்
கவிஞர் அழகு பாரதி கருத்தரங்க உரைகளுக்கிடையே இசைப் பாடல்களைப் பாடினார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மண்டல மேளாலர் அ . கிருஷ்ணமூர்த்தி எழுத்தாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றச் செயலர் பேராசிரியர் முனைவர் பா. ஆனந்த குமார் திறனாய்வுரை வழங்கிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்து பாரதி , புதுமைப் பித்தன் எழுத்துக்கள் சமூக மேன்மைக்கும் இலக்கிய படைப்பாக்கத்திற்கு வழி காட்டுவதாகக் குறிப்பிட்டார். திருநகர் வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு. செல்வா நன்றி கூறினார்
mathibama@yahoo.com
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)
- கீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- முற்றும் இழத்தல்
- இப்போதாவது புரிகிறதா
- கவிதைகள்
- விண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]
- நான் கண்ட சிஷெல்ஸ் – 10. சேவை அமைப்புகள்
- மெட்டாபிக்சனின் ஆழ அகலங்கள்
- தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள்
- Looking for Comedy in the Muslim World – திரைப்படம்
- புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு
- நீங்க எப்படிங்க ? கொஞ்சம் சொல்லுங்க
- ஹெச்.ஜி.ரசூல் அவர்கலின் “வஹாபிசம்—- ‘ கட்டுரை மற்றும் விளக்கம் குறித்து
- கடிதம்- ஆங்கிலம்
- கடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2
- பெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- மனிதம்
- ப லா த் கா ர ம் ( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )
- விடுமுறையின் முதல் நாள்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8
- ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து….!
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்!
- எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…
- தர்கா பண்பாட்டு அரசியல்
- குருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்
- இளந்தலைமுறைக்குத் தலை வணக்கம்
- பாலாற்றில் இனி கானல் நீர்தானா ?
- மண்டைக்காடும் இந்து எழுச்சியும்
- சொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…
- அய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும்
- நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )