நாகர்கோவில்-என்.எஸ்.பி
இலக்கியம்
இலக்கியம் ஒரு கலை.
கலையின் நோக்கம் அழகிய அநுபவப் பகிர்வு
சிற்பம் கல்லில் அழகாக அநுபவத்தை வெளியிடுகிறது
ஓவியம் வரை கோடுகளிலும் வண்ணங்களிலும்
நடனம் மெய்ப்பாடுகளில்
இசை ஓசையில்
இலக்கியமோ மொழியில்
அநுபவ வெளியீடு இலக்கியத்தின் உயிர்ப்பு அதுவும் அழகாக
கருத்து-உணர்ச்சி-கற்பனை-வடிவம் என்னும் நான்கும் ஒருங்கியைந்து பின்னிய கூட்டமுதாக அனுபவ வெளியீடு அமையும். மொழிப்பயிற்சி-நன்மதிப்பு-பொழுது போக்கு-இன்ப ஆக்கம்-துன்ப நீக்கம்-சமூக உணர்வு-வரலாற்றுத்துணை-அறநெறிப்போதனை- பண்பாட்டுப் பேழை-வழிகாட்டும் ஒளி விளக்கு என்னும் பன்முகப்பயன்பாடுகளை உடையது இலக்கியம்.
-விவேகவாணி [அக்டோபர்-2000]
இனிய காண்க…
‘இன்னாதம்ம இவ்வுலகு இனிய காண்க
இதன் இயல்புணர்ந்தோரே ‘ – என்கிறது புறநானூறு
ஒரு ஸென் ஞானியிடம் சீடன் மீண்டும் மீண்டும்
உலகின் அவலங்கள் பற்றி வினவிக் கொண்டே
உடன் நடந்தானாம்.
பதில் கூறாது அவனுடன் நடந்த ஞானி
சந்தையில் நுழைந்தாராம்.
சந்தையில் –
மரக்கடையில் சில மரத்துண்டுகளும்,
தோல் விற்கும் இடத்தில் சில நரம்புகளும்
இரும்புக்கடையில் சில ஆணிகளும்
எடுத்து வந்தார் அவர்.
சிறிது நேரத்தில் ஓர் இசைக்கருவி அவர் கரங்களில் தயாரானது.
மீட்டினார்.
மெல்ல மெல்ல
அந்த அழுக்குச் சந்தை
ஓர் அற்புத சொர்க்கம் ஆயிற்று
அனைவரும் அவரை சூழ்ந்தனர்;
மெய்ம்மறந்தனர்.
உலகிலும் நாம் செய்யவேண்டியது இதுதான் என உணர்த்தினார் ஞானி.
திக்-நாட்-ஹான்ஹ் எனும் வியட்நாம் துறவி உவமை தருவார்: தொலைக்காட்சியில் சேனல்கள் பல; நமக்கு வேண்டியதைத் தேர்வு செய்வது நம் கையில்தானே!
-விவேகவாணி [ஏப்ரல்-2000]
[இவை விவேகானந்த கேந்திரத்தின் மாத இதழான ‘விவேகவாணி ‘ யில் கடைசிப்பக்கக் கட்டுரைகளாக வெளிவந்துக்கொண்டிருப்பவை. என்.எஸ்.பி தெ.தி.இந்துக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி துறைத்தலைவராக ஓய்வுபெற்றவர்.]
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-2) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- தனுஷ்கோடி ராமசாமி நினைவரங்கு
- ஜோஜ் ஓர்வெலின் விலங்குப் பண்ணை
- வியாக்கியான இலக்கியம்
- நெய்தலின் மெய்யியல்:ஜோ டி குரூசின் ‘ ‘ஆழிசூழ் உலகைச் ‘ ‘ சிறப்பித்து!
- ‘நிலாக்கீற்று ‘ தொகுப்பு-2
- பாரதிதாசன் காட்டும் குடும்ப மகளிர்துயரம்
- சிருங்காரம்: தமிழ்த்திரைப்படம் – மலையாளிகளின் சிம்மாசனங்களுக்கு மத்தியில்….
- நான் கண்ட சிஷெல்ஸ் – 3.வரலாறு
- படிக்க என்ன இருக்கு ?
- கடிதம்
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. க நினைவரங்கு
- துவக்கு இலக்கிய அமைப்பு -கவிதைப் போட்டி- இறுதி நாள்: 15. ஜனவரி .2006
- ‘ஈ வே ரா – ஒரு முழுமையான பார்வை முயற்சியில் ‘ – எதிர்வினை
- சுந்தர ராமசாமியின் படைப்புகளின் நாடகமாக்கம் – 25-12-2005 மாலை 6:30
- நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காணவந்த பிரெஞ்ச் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 11
- பூகோள இடநிலை உணர்த்தும் GPS அமைப்பின் மற்றுமொரு பயன்பாடு
- ஆறாம் விரலும் அர்த்தமான இரவும்
- முருகனும் சிம்ரனும்..
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 1
- சம்மதம்
- சிதறும் நினைவுகள்
- நியு யார்க் நிறுத்தம்
- இதையும் அவசியம் அறிந்து கொள்வோம்
- எடின்பரோ குறிப்புகள் – 4
- இலவச வெளிச்சம்
- 70.பெரியபுராணம்
- கீதாஞ்சலி (54) – கடற்கரையில் கூடும் பாலகர்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- இறைவா நீ இறந்துவிட்டால் ?
- உணர்வும் மனசும்
- இப்போது ?
- பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு [GPS]: வாசகர் எதிரொலி
- கடிதம் ( ஆங்கிலம் )