கார்ல் பாப்பரின் வெங்காயம்-4

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

சோதிப் பிரகாசம்


முற்கூற்றுகளின் நிருபணம்

மகளுக்கு மணம் செய்து வைப்பது பெற்றவர்களின் கடமை மட்டும் அல்ல, தங்கள் சுமையினை அவர்கள் குறைத்துக் கொள்ளுகின்ற ஒரு வழியும் ஆகும். தங்கள் மகள்களின் திரு மணத்தினைப் பற்றி இப்படித்தான் நம் ஊர்ப் பெற்றோர்கள் நினைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது.

இந்த முயற்சியின் தொடர்ச்சியாகத் தங்கள் சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டு வருகின்ற அவர்கள், கோளியக் காரர்களையும் அணுகுகிறார்கள். வருகின்ற தை மாதத்தில் அவர்களின் மகளுக்குத் திரு மணம் நடந்தே தீரும் என்று கோளியக் காரர்களோ வருவது-உரைக்கிறார்கள்.

கோளியர்களது முற்கூற்றின் படியே அவர்கள்தம் மகளுக்குத் திரு மணம் நடந்து விடுகிறது என்று நாம் வைத்துக் கொள்வோம்.

கார்ல் பாப்பருக்கு உடனே கோவம் வந்து விடுகிறது; தங்கள் முற்கூற்றுகளைப் பரி சோதித்துப் பார்க்கின்ற இயன்மையினை அவர்கள் அழித்து விட்டார்கள் என்று ஓங்கிக் குரல் கொடுத்து அவர்களை அவர் பழிக்கிறார்; நம் ஊர்ப் ‘பகுத்தறிவுப் பகலவர்களும் ‘ அவருக்குக் கை தட்டுகிறார்கள்.

இங்கே, என்னத்தை அழித்து விட்டார்கள் கோளியர்கள் ? அழிப்பதற்கு அப்படி இதில் என்ன இருக்கிறது ?

ஒன்றும் புரிய வில்லை நமக்கு!

இப் பொழுது, கோளியக் காரர்களின் கணிப்பின் படி நமது பெற்றோர்களின் மகளுக்குத் திருமணம் நடை பெறாமல் போய் விடுகிறது என்று நாம் வைத்துக் கொள்வோம்.

கார்ல் பாப்பரின் மறு-வினை எப்படி இருந்திடக் கூடும் என்று நாம் எதிர் பார்ப்போம் ?

கார்ல் பாப்பர் மகிழ்ச்சி அடைவார் என்றுதானே! கோளியக் காரர்களை அவர் பழித்துத் தள்ளி விடுவார் என்றுதானே!

ஆனால், அதுதான் இல்லை!

கார்ல் பாப்பர் மகிழ்ச்சி அடைவார் என்பது உண்மைதான்; ஆனால், அவர்களை அவர் பழித்திட மாட்டார்; மாறாக, உண்மையான விஞ்ஞானிகள் என்று அவர்களை அவர் பாராட்டுவார்—-

4. A theory which is not refutable by any conceivable event is non-scientific. Irrefutability is not a virtue of a theory (as people often think) but a vice என்று!

அதாவது, a theory is scientific only if it is refutable (and is refuted!) என்று!

பிழையாக்கப் படுகின்ற பொழுதுதான், விஞ்ஞான முறையான ஒரு தேற்றத்தின் பாற் பட்டதாக, ஒரு முற் கூற்றினை நாம் கருதிட வேண்டும் என்றால், பலிக்காமல் போய் விட்ட காரணத்தினால்தான், நமது கோளியக் காரரின் கணிப்பு நிருபிக்கப் பட்டு இருக்கிறது என்று இங்கே பொருள் ஆகி விட வில்லையா ?

ஆனால், இப்படியே போனால் நமது கோளியக் காரர்களின் தொழில் படுத்து விடும் என்பதுதான் உண்மை. எனினும், அவர்களது நோக்கம் நிறைவேறி விட்டது; தங்கள் கட்டணத்தை அவர்கள் பெற்றுக் கொண்டும் விட்டார்கள்.

அதே நேரத்தில், இவ் அளவு எளிமையாகக் கார்ல் பாப்பரை நாம் புரிந்து கொள்ள முடியாது என்பதில் ஐயம் இல்லை. ஏனென்றால், அவர் கூறிடத் தவற வில்லை—-If observation shows that the predicted effect is definitely absent, then the theory is simply refuted என்று! அதாவது, ஒரு தேற்றத்தினால் முற்கூறப் பட்ட விளைவு ஏற்பட்டிட வில்லை என்கின்ற பொழுதுதான், அத் தேற்றம் பிழை படுத்தப் பட்டு நிற்கிறது என்று!

கார்ல் பாப்பரின் சிக்கல்

A theory which is not refutable by any conceivable event is non-scientific என்று கூறுகின்ற கார்ல் பாப்பர், If observation shows that the predicted effect is definitely absent, then the theory is simply refuted என்றும் கூறுகிறாரே, ஏன் ?

அதாவது, a theory is scientic only if it is refutable என்று கூறுகின்ற கார்ல் பாப்பர், a theory is proved only when the event predicted by it takes place என்றும் கூறுகிறாரே, ஏன் ?

ஒன்றில், ‘பிழையாக்கப் பட முடியாத எந்த ஒரு தேற்றமும் விஞ்ஞான முறையானது அல்ல ‘ என்னும் தமது கூற்றில் நிலைத்து அவர் நின்றிட வேண்டும்; அல்லது, ‘பிழையாக்கப் பட முடியாத ஒரு தேற்றம்தான் விஞ்ஞான முறையானது ‘ என்று அடித்துக் கூறுவதற்கு அவர் முன் வந்திட வேண்டும்.

அதை விட்டு விட்டு, ஓர் இரண்டும்-கெட்டான் கொள்கையாக தமது முடிவுகளை அவர் எடுத்து வைப்பது என்ன ஞாயம் ?

ஏனென்றால், பிழையாக்கப் பட்டு நிற்கின்ற ஒரு தேற்றம்—-விஞ்ஞான முறை ‘ஆனதா ? ‘ அல்லது ‘விஞ்ஞான முறை அற்றதா ? ‘ என்பதுதான் மையமான கேள்வி.

ஒரு வேளை, ‘பிழையாக்கம் ‘ என்பது வேறு; ‘பிழையாக்கும் இயன்மை ‘ என்பது வேறு; என்று அவர் கருதுகிறாரோ ? அல்லது, ‘தேற்றம் ‘ என்பதையும் அதன் அடிப்படையில் கணிக்கப் படுகின்ற ‘முற்கூற்று ‘ என்பதனையும் ஒன்றாகப் போட்டு அவர் குழப்பிக் கொள்கிறாரோ ?

ஒரு தேற்றத்திற்குள், அதனைப் பிழையாக்கிக் காட்டிடக் கூடிய இயன்மை அடங்கி இருக்கும் என்றால், அந்த இயன்மையினைப் பயன்படுத்தி அதனை நாம் பிழை ஆக்கிக் காட்டுகின்ற பொழுது, அந்தத் தேற்றத்தின் தன்மையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட்டு விடுவதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை. எனவே, இந்தக் கோணத்தில் கார்ல் பாப்பரை நாம் அணுகுவதற்கும் வாய்ப்பு இல்லை.

ஆனால், மறு வேளை, although a theory may be proved by the happening of the event predicted by it, it is still not scientific for, to be a scientific theory, it must be refutable at every point of time என்று கூறுவதற்குதான்—-ஒரு தேற்றம் முற்கூறுகின்ற ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்து முடிந்து விடுவதால் மட்டும், விஞ்ஞான முறையான ஒரு தேற்றமாக அது திகழ்ந்து விட முடியாது; ஏனென்றால், எந்தக் கணத்திலும் பிழையாக்கிடப் படக் கூடிய ஒரு தேற்றம் மட்டும்தான், விஞ்ஞான முறையான ஒரு தேற்றமாக விளங்கிட முடியும் என்று கூறுவதற்குதான்—-கார்ல் பாப்பர் முற்படுகிறாரோ ?

அப்படித்தான் என்றால் கூட, புதுமை என்று சொல்வதற்கு இதில் எதுவும் இல்லை—- புதிய பார்வையும் இல்லை; புதிய முயற்சியும் இல்லை!

முதலில், ‘முற் கூற்று ‘ என்பதன் முந்திய கட்டங்களைக் கொஞ்சம் நாம் எண்ணிப் பார்ப்போம்.

தேற்றம்-கணிப்பு-முற்கூற்று

முற்கூற்று என்பது ஒரு தேற்றம் அல்ல; ஒரு தேற்றத்தின் அடிப்படையில் கணித்துக் கூறப் படுகின்ற ஒரு முன்-மொழிவு மட்டும்தான் ஆகும்.

எனவே, ஒரு ‘முற்கூற்று ‘ பிழை பட்டுப் போய் விட்டது என்பதற்காக, அந்தத் ‘தேற்றமும் ‘ பிழை பட்டுப் போய் விட்டது என்று நாம் கூறி விட முடியாது. ஏனென்றால், பிழை பட்டு நிற்பது வெறும் ‘கணிப்பு ‘ மட்டும்தான் ஆகும்.

இப்படி, தேற்றம்—-கணிப்பு—-முற்கூற்று என்பதுதான் ‘கணிப்பு நிகழ்ப்பாட்டின் ‘ ஆதியும் அந்தமும் என்பதில் ஐயம் இல்லை.

இங்கே, ஒரு சில முற்கூற்றுகளை நாம் எடுத்துக் கொள்வோம்.

ஐன்ஸ்ட்டின்: ந்யூட்டன்

With Einstein ‘s theory the situation was strikingly different. Take one typical instance – Einstein ‘s prediction, just then confirmed by the finding of Eddington ‘s expedition. Einstein ‘s gravitational theory had led to the result that light must be attracted by heavy bodies (such as the sun), precisely as material bodies were attracted. As a consequence it could be calculated that light from a distant fixed star whose apparent position was close to the sun would reach the earth from such a direction that the star would seem to be slightly shifted away from the sun; or, in other words, that stars close to the sun would look as if they had moved a little away from the sun, and from one another. This is a thing which cannot normally be observed since such stars are rendered invisible in daytime by the sun ‘s overwhelming brightness; but during an eclipse it is possible to take photographs of them. If the same constellation is photographed at night one can measure the distance on the two photographs, and check the predicted effect.

கார்ல் பாப்பரின் கூற்று இது!

பருமையான உடலங்களைக் கனமான உடலங்கள் ஈர்ப்பது போலவே, அவற்றால் ஒளியும் ஈர்க்கப் படுகிறது என்பது ஐன்ஸ்ட்டானின் புவியீர்ப்புத் தேற்றமாம்! இதன் விளைவாக, சூரியனுக்கு அண்மையில் உள்ள ஒரு நட்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு வருகின்ற ஒளி, பூமியை அடைகின்ற பொழுது, அந்த நட்சத்திரம் கொஞ்சம் இடம் மாறி இருப்பதாக நமக்குத் தோன்றுமாம்! இந்தக் காட்சியை இருளில் படம் பிடித்துப் பார்த்து, இதனை நாம் தெரிந்து கொள்ளவும் முடியுமாம்! எடிங்க்ட்டனது பரிபயணத்தினால் ஒப்புறுதிப் படுத்தப் பட்டும் இது உள்ளதாம்!

சொ. கண்ணன்

ஐன்ஸ்ட்டானின் அணுக் கொள்கையைப் பற்றி முன்னர் ஒரு முறை எனக்கு இரண்டு மணி நேரம் பாடம் நடத்தி இருந்தவர் எனது நண்பர் சொ. கண்ணன்!

கார்ல் பாப்பரின் ‘திண்ணை ‘க் கட்டுரையைக் கையில் வைத்துக் கொண்டு திரு-திருவென நான் விழித்துக் கொண்டு இருந்த நேரம் பார்த்து, வெளியூர் சென்று இருந்த கண்ணன் சென்னை வந்து சேர்ந்தார். கார்ல் பாப்பரின் ‘திண்ணை ‘க் கட்டுரையைப் பற்றி அவரிடம் நான் கூறினேன்.

கார்ல் பாப்பர் குறிப்பிடுகின்ற ஈர்ப்புத் தேற்றம், ஐன்ஸ்ட்டானுக்கு மட்டும் உரியது அல்ல என்றும் ந்யூட்டனுக்கும் அது உரியது என்றும் கண்ணன் குறிப்பிட்டார்:

‘ஈர்த்தல் என்பது உண்மையா ? அல்லது விழுதல் என்பது உண்மையா ? என்பதுதான் மிகப் பெரிய கேள்வி! ‘

‘சரிதான், கண்ணன்! எனக்குத் தெரியாத விசயம் இது! எப்படி வேண்டும் என்றாலும் என்னை நீங்கள் குழப்பிக் கொள்ளலாம். ‘

‘என்ன பிரகாசம், நானா குழப்புகிறேன் ? விஞ் ஞானிகள் குழப்புகிறார்கள்! ‘

‘எப்படி ? ‘

‘பூமிக்கு வெளியே நிற்கக் கூடிய ஒரு தளத்தைக் காட்டுங்கள்; நெம்பு கோலால் பூமியை உருட்டிக் காட்டுகிறேன் என்றார் ந்யூட்டன்! ‘

‘ஏன் ? நிலவில் நின்று கொள்ள வேண்டியதுதானே ? ‘

‘ந்யூட்டன் கேட்டது பூமிக்கு அருகில் ஒரு தளம். ‘

நான் சிரித்தேன்: ‘விண் வெளியைக் கூறு போட்டு விற்று விடலாம் என்னும் நினைப்புப் போலும் அவருக்கு! ஆனால், நிற்பதற்கு இடம் கிடைத்தால் மட்டும் போதாது; நெம்பு கோலின் மறு முனையை ஊன்றிக் கொள்கின்ற வகையில் பூமிக்கு அடியிலும் ஒரு தளம் வேண்டும்! ‘

‘தேறி விட்டார்கள், பிரகாசம்! ‘

‘சரி, கண்ணன்! ஈர்த்தலா ? விழுதலா ? அதைப் பற்றிச் சொல்லுங்கள்! ‘

‘பருமையான உடலங்களைப் பருமையான உடலங்கள் ஈர்க்கின்றன என்று ந்யூட்டன் கூறுகிறார். அதே நேரத்தில், கோள் மண்டலங்களின் வளைவுகளுக்குள் பருமை உடலங்கள் விழுந்து விடுகின்றன என்பதுதான் ஐன்ஸ்ட்டானின் கருத்து என்று கருதுபவர்களும் உண்டு! ‘

‘கடவுளே! ‘

‘கிண்டல் அடிக்கின்ற விசயம் அல்ல இது! ‘

‘கோள்களின் எடையினால் கோள்களைச் சுற்றி உள்ள மண்டலங்களில் ஒரு வளைவு ஏற்படுகிறது. இந்த வளைவிற்குள் பருமை உடலங்கள் விழுந்து விடுகின்றன. ‘

‘விண் வெளியில் வளைவு! அப்படி என்றால், விண் வெளி என்பது ஒரு பருப் பொருளா ? ‘

‘அதுதான் கேள்வி!

‘நல்ல கேள்வி! மேல் இருந்து பார்த்தால் கீழே வளைவு; கீழ் இருந்து பார்த்தால் மேலே வளைவு! ‘

‘இந்தக் கீழ்-மேல் கதை எல்லாம் விண் வெளிக்குப் பொருந்தாது. ‘

‘சரி! விழுதல் என்பதும் ஓர் ஈர்ப்புதானே! ஈர்ப்பு இல்லாமல் விழுதலுக்கு அவசியம் என்ன ? ‘

‘நல்ல கேள்வி! இம் மாதிரியான ஆய்வுகளில் கேள்விகள்தாம் முக்கியம்! கேள்வி—-விடை—-கேள்வி என்றுதான் விஞ் ஞானம் வளர்ந்து கொண்டு வந்து இருக்கிறது. ஏங்கெல்ஸின் இயற்கையின் முரண் இயக்கத்தினைப் படிப்பது இல்லை என்று முன்னர் நீங்கள் முடிவு செய்து இருந்தீர்கள். இனியாவது படியுங்கள்! ‘

‘என்ன கண்ணன், கார்ல் பாப்பரை எப்படி நான் அணுகுவது ? ‘

‘நம் ஊர் எழுத்தாளர்களுக்கு இணைய தளம் என்றால் பெரிய விசயம்! ஏதாவது ஒரு புத்தகத்தைப் பற்றி யாராவது அதில் விளம்பரம் செய்து இருப்பார்கள்; அதைப் பற்றிச் சில குறிப்புகளையும் எழுதி இருப்பார்கள்! இதைப் படித்து விட்டு வாசகர்கள் இடையே பந்தா பண்ணுபவர்கள்தாம் இங்கே தீவிரமான எழுத்தாளர்கள், அவ் அளவுதான்! ‘

‘எழுத்தாளர்களை விடுங்கள் கண்ணன்! விசயத்திற்கு வாருங்கள்! ‘

‘எந்த விசயத்திற்கு, பிரகாசம் ? வேலைக்கு என்ன வழி ? சாப்பாட்டுக்கு என்ன வழி ? என்று அவனவன் திண்டாடிக் கொண்டு இருக்கிறான். இதில் சாதிச் சண்டை; மதச் சண்டை என்று வெறி பிடித்துப் போன மன நோயாளிகள் வேறு! இதுதான் இன்றைக்கு விசயம்! ‘

‘வசனத்தை விடுங்கள் கண்ணன்! கார்ல் பாப்பரின் கேள்விக்கு விடை என்ன ? ‘

‘கார்ல் பாப்பர் என்ன, விஞ் ஞானியா ? அவனவனுக்குத் தெரிந்த வேலையை அவனவன் பார்த்தால் போதும்! விஞ் ஞானத்தை விஞ் ஞானிகள் பார்த்துக் கொள்வார்கள். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்! ‘

கண்ணன் கூறுவதும் சரிதானே; நம் வேலையை நாம் பார்ப்போம்.

கடல் கோள்

26-12-2004 அன்று நிகழ்ந்த கடல் கோளினை நாம் எடுத்துக் கொள்வோம்.

கடல் கோள் நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகியும் கூட அந்தமானில் பூமி அதிர்வுகள் ஓய்ந்தபாடு இல்லையாம்! செங்குத்தாகவும் பக்க வாட்டிலும் இந்த அதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றனவாம்! பக்க வாட்டில் ஏற்படுகின்ற பூமி அதிர்வுகள் இமய மலைத் தொடரிலும் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்திடக் கூடுமாம்! விஞ் ஞானிகளுக்கோ இது திகைப்பாகவும் இருக்கிறதாம்—-தினத் தந்தி கூறுகிறது.

இதனைக் கார்ல் பாப்பர் நம்புவாரா ?

கடல் கோள் ஏற்படுவதற்கும் முன்னரே சென்னைக் கடற் கரைக் குடியிருப்புகளைக் காலி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து இருந்தால், அதனை மக்கள் நம்பி இருந்து இருப்பார்களா ? குடியிருப்புகளைக் காலி செய்துதான் இருப்பார்களா ?

நிச்சயமாக இல்லை!

மாறாக, போராட்டத்தில் அவர்கள் குதித்து இருப்பார்கள். கடற் கரைப் பகுதிகளைக் காலி செய்வதற்கு அரசாங்கம் செய்கின்ற சூழ்ச்சி என்றும் கூக் குரல் எழுப்பி இருப்பார்கள்.

இது மட்டுமா, கண்ணகி சிலையை அகற்றி விட்ட அரசாங்கம் குடியிருப்புகளையும் அகற்றுவதற்கு முயற்சி செய்கிறது என்று கூறி பல் வேறு கட்சிகளும் அமைப்புகளும் தமிழ்ப் புலவர்களும் ஆர்ப்பரித்திடவும் தொடங்கி இருந்து இருப்பார்கள்.

நமது கார்ல் பாப்பரோ, பிழை ஆக்கும் இயன்மை இதில் இருக்கிறதா ? இல்லையா ? என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கி இருப்பார். துணிவமான ஒரு முற் கூற்று என்றும் இதனை அவர் கணித்து வைத்து இருப்பார்.

எனினும், ஐன்ஸ்ட்டானின் தேற்றத்தைப் பற்றிப் பின் வருமாறு அவர் கூறி இருந்தது போல,

Now the impressive thing about this case is the risk involved in a prediction of this kind. If observation shows that the predicted effect is definitely absent, then the theory is simply refuted. The theory is incompatible with certain possible results of observation, in fact with results which everybody before Einstein would have expected. This is quite different from the situation I have previously described, when it turned out that the theories in question were compatible with the most divergent human behavior, so that it was practically impossible to describe any human behavior that might not be claimed to be a verification of these theories.

26-12-2004 அன்று மாலையிலும் அவர் கூறி இருந்து இருப்பார்—-

Confirming evidence should not count except when it is the result of a genuine test of the theory; and this means that it can be presented as a serious but unsuccessful attempt to falsify the theory; என்று!

மக்களோ மடிந்து மண்ணாகிப் போய் இருந்து இருப்பார்கள்!

இப் பொழுது, ஐன்ஸ்ட்டான் நிருபித்து இருப்பதாகக் கார்ல் பாப்பர் கூறுகின்ற கருத்துகளுக்கு நாம் வருவோம்.

(தொடரும்)

29-01-2004

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

author

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்

Similar Posts