சோதிப் பிரகாசம்
மாக்ஸ் முல்லர்
மாக்ஸ் முல்லரின் முடிவுகளில் சில மாறுபாடுகள் எனக்கு உண்டு என்ற போதிலும், அவரது அறிவாண்மைத் திறமையிலும் நேர்மையிலும் எனக்கு மாறுபாடு எதுவும் இல்லை.
இதற்கு ஓர் எடுத்துக் காட்டாக, fors fortuna என்னும் ஒரு தேவதையைப் பற்றிய அவரது ஆய்வினை நாம் குறிப்பிடலாம்.
Fors fortuna என்னும் தேவதையைப் பற்றிய மாற்றுக் கருத்துகளை வரலாற்று முறையாகவும் மொழி முறையாகவும் அவர் ஆராய்கிறார். கூடவே, இனி மேல் எழுந்து வந்திடக் கூடிய எதிர்க் கருத்துகளையும் கணக்கில் அவர் எடுத்துக் கொள்கிறார்.
இப்படி எடுத்துக் கொண்டு அவர் கூறுகிறார்—-
‘நன்மையை அல்லது தீய குறிகளைத் தினமும் கொண்டு வருகின்ற பரகாசமான டான் (dawn) என்பதற்கு ஃபார்ஸ் (fors) என்று பெயர் கொடுக்கப் பட்டு இருந்தது பொருத்தம்தான் ஆகும். ‘
‘ஏனென்றால், யாருக்கும் தெரியாதவள் இவள்—-என்ன தருவாள் இவள் என்று உறுதியாக யாரும் கூறி விடவும் முடியாது; வானத்தின் பரகாசமான ஆற்றல்களில் இருந்து முதலாவதாகப் பிறந்தவள் இவள்—-வானத்தின் மகளும் இவள்தான் ஆவாள்; அதே நேரத்தில், சூரியனின் தாய் இவள்—-இவளது பரகாசமான குழந்தையும் சூரியன்தான் ஆகும். ‘
‘ஃபார்ஸ் (fors) என்பதன் பொருத்தமான சொல் ஆய்வு இது. :கர் (ghar) என்னும் வேரில் இருந்து அல்லாமல், :பர் (bhar) என்னும் வேரில் இருந்துதான் இது பிறந்தது என்று எடுத்துக் காட்டுங்கள், எனது முடிவுகளை நான் மாற்றிக் கொள்கிறேன். ‘ என்று! (பார்க்க: F. Max Muller, Biographies of Words And The Home of the Aryas, Introduction (1987), pp.5-15, ஆரியர் வரலாறு: பாகம் இரண்டு (2003), பக்.211.)
இதுதான் ஆய்வுப் பான்மை என்பது! பகட்டுத் தனமோ வீண் பெருமையோ இல்லாத அறிவாண்மை நேர்மை என்பதும் இதுதான் ஆகும்.
உண்மையை உண்மத்தில் தேடிக் கொண்டு இருந்தவர் மாக்ஸ் முல்லர்!
இது பற்றிப் பின் வருமாறு நான் குறிப்பிட நேர்ந்து இருந்தது:
‘உண்மமான ஒரு சிறந்த அறிவாளர், மாக்ஸ் முல்லர்! எனவேதான், மாற்றுக் கருத்துகள் உருவாகிடத் தக்க வாய்ப்பினையும் நமக்குச் சுட்டிக் காட்டிக் கொண்டு அவர் செல்கிறார். ‘
‘ ‘உஷஸ் ‘ என்னும் சம்ஸ்க்ருதத் தெய்வம், தமிழின் ‘உதய ‘த் தெய்வம்தான் ஆகும். ‘உதி ‘ என்னும் வினைச் சொல்லில் இருந்து விளர்ந்து வந்து இருந்த ஒரு சொல் இது! ‘ஹுஜுஸ்ச :தையியி ‘ என்பதோ ‘உதயத் தெய்வம் ‘ என்னும் தமிழ்ப் பதத்தின் நேரடியான திரிபு!
‘அகைதல் ‘ என்னும் தமிழ்ச் சொல்லிற்குச் சுடர் விட்டு எரிதல் என்று பொருள். இதன் திரிபுதான் ‘அ:க்ரியா ‘ என்னும் சம்ஸ்க்ருதச் சொல்!
இனி, :கர் என்னும் வேரில் இருந்து அல்லாமல் :பர் என்னும் வேரில் இருந்து ஃபார்ஸ் என்னும் சொல்லின் விளர்ச்சியினைக் காட்டிட முடியுமா ? என்று மாக்ஸ் முல்லர் கேட்கின்ற கேள்விக்கு நாம் வருவோம்.
இந்தப் ‘:பர் ‘ என்னும் சொல்லிற்கு என்ன பொருள் ? என்று கூறிட அவர் முன் வந்திட வில்லை. ஆனால், ‘பர் ‘ என்னும் சொல்லில் இருந்துதான் ஃபார்ஸ் என்னும் சொல் விளர்ந்து வந்து இருக்க வேண்டும் என்று அவர் கூறி இருந்தார் என்றால் இன்னும் பொருத்தமாக அது இருந்து இருக்கும். எனினும், ‘பருதி ‘ என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து விளர்ந்து வந்து இருந்ததுதான் ஃபார்ஸ் என்னும் எலத்தின் சொல் என்பது அதை விட மிகவும் பொருத்தம் ஆனது ஆகும்.
ஆக, ‘பருதி ‘ என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து பிறந்து வந்து இருந்த ஓர் எலத்தின் சொல்தான் ஃபார்ஸ் என்பது தெளிவு. எனவே, ஃபார்ஸ் என்னும் தெய்வம் ஒரு ‘பருதித் தெய்வம் ‘தான் ஆவாள்.
அண்டத்து ஒளியின் குழந்தை இவள்; உலகத்து ஒளியின் தாயும் இவள்தான்! இவள்தான் ஒளியைத் தருகிறாள்; உயிரையும் கொடுக்கிறாள். ஒவ்வொரு நாளும் காலையில் வணங்கவும் படுகிறாள்.
ஆக, ஃபார்ஸ் ஃபார்ச்சுனா என்னும் ஈரோப்பியத் தேவதை திரவிடத்தின் பருதித் தேவதைதான் என்பது தெளிவு.
இல்லாத ஆரியப் பந்தவத்தை நிருபிப்பதற்கு ஆதாரமாக மாக்ஸ் முல்லர் எடுத்துக் கொண்டு இருக்கின்ற இந்தத் தேவதை, உண்மத்தில் ஒரு தமிழ்த் தேவதைதான் என்பதனால்தான், ஈரோப்பியர்தம் திரவிடக் கூறுகளை நிருபிப்பதற்கு நமக்கு இவள் துணை நின்று இருக்கிறாள் போலும்! ‘ (பார்க்க: ஆரியர் வரலாறு: பாகம் இரண்டு (2003), பக்.213-14.)
ஆக, தமது கூற்றினைப் பிழை படுத்திடக் கூடிய வழியினையும் மாக்ஸ் முல்லர் சுட்டிக் காட்டி இருக்கிறார் என்பது தெளிவு.
இப்படி, தனது தேற்றம் பிழை பட்டுப் போகின்ற இயன்மையினை அல்லது வாய்ப்பினை ஒவ்வொரு தேற்றக் காரனும் கருத்தில் கொண்டுதான் ஆக வேண்டும் என்றுதான் கார்ல் பாப்பர் கூறுகிறார் என்றால், அதற்கு எதிரீடு எதுவும் நமக்கு இல்லை. அதே நேரத்தில், சிறப்பாக இதில் எதுவும் இல்லவும் இல்லை.
காக்காய்-குருவிகள்
முந்திய தேற்றங்களின் பிழைகளைச் சுட்டிக் காட்டிய வண்ணம்தான் புதிய தேற்றங்கள் அனைத்தும் வளர்ந்து கொண்டு வந்து இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.
பிழையாக்கும் இயன்மையைப் பொறுத்த வரை, நமது காக்காய்-குருவிகளை விட நன்றாக அதனைப் புரிந்து கொண்டவர்கள் உலகில் யாரும் இருந்ததும் இல்லை எனலாம்! புவி ஈர்ப்புத் தேற்றம் கண்டு பிடிக்கப் படுவதற்கும் முன்னர் இருந்தே, விண்ணில் பறந்து-பறந்து அதனைப் பிழை படுத்திக் கொண்டு அவை வந்திட வில்லையா ?
உண்மையில், இயற்கைத் திறல்களை எப்படி நாம் பயன் படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான் பொருள்-பொதிவான ஒரு கேள்வியே அன்றி, ‘முற்றான உண்மை ‘ எது ? என்பது அல்ல!
ஏனென்றால், அரை-குறையான அறிவில் இருந்து முழுமையை நோக்கி நகர்கின்ற வகையில்தான் நமது அறிவின் வளர்ச்சி நிகழ்ந்து கொண்டு வந்து இருக்கிறது; நிகழ்ந்திடவும் முடிகிறது.
எனினும், நாம் முந்திக் கொள்ள வேண்டாம். எனவே, ஒப்புறுதியினை, அதாவது, cofirmation என்பதைப் பற்றிய கார்ல் பாப்பரின் கருத்துகளை இங்கே நாம் சற்றுப் பார்த்து விடுவோம்.
ஒப்புறுதி (confirmation)
7 கூறுகளாகத் தமது கருத்துகளை விளக்கிடற்கு முற்படுகின்ற கார்ல் பாப்பர், 1, 2 மற்றும் 6 ஆகிய கூறுகளில் ஒப்புறுதி பற்றிப் பேசுகிறார். இந்த மூன்றினையும் முதலில் நாம் பார்ப்போம்:
1. It is easy to obtain confirmations, or verifications, for nearly every theory – if we look for confirmations.
2. Confirmations should count only if they are the result of risky predictions; that is to say, if, unenlightened by the theory in question, we should have expected an event which was incompatible with the theory – an event which would have refuted the theory.
6. Confirming evidence should not count except when it is the result of a genuine test of the theory; and this means that it can be presented as a serious but unsuccessful attempt to falsify the theory. (I now speak in such cases of ‘corroborating evidence. ‘)
மாய்மை இல்லாமல் இம் மூன்றையும் நாம் புரிந்து கொள்ளத் தக்க வகையில், இவற்றை முதலில் நாம் சுருக்கிக் கொள்வதில் தவறு எதுவும் இல்லை.
(1) If confirmation is what we want, we can easily obtain it for almost every theory. (2) However, confirmation becomes important when a theory predicts certain events which we would expect to be incompatible with that theory in the absence of the enlightenment provided by the it. (3) A theory is therefore confirmed only when all the serious attempts to disprove it fail.
(1) ஒப்புறுதிதான் தேவை என்றால், ஏறக் குறைய எல்லாத் தேற்றங்களுக்கும் ஓர் ஒப்புறுதினை நாம் பெற்று விட முடியும். (2) எனினும், ஒரு தேற்றம் முற் கூறுகின்ற நிகழ்ச்சிகள் அத் தேற்றத்திற்கு ஏற்ப நிகழ்ந்திட முடியாது என்று நாம் கருதுகின்ற வேளைகளில், ஒப்புறுதி என்பது முக்கியம் பெறுகிறது. (3) எனவே, ஒரு தேற்றத்தினைப் பிழையாக்கிக் காட்டுகின்ற நமது முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போகின்ற பொழுதுதான், ஒப்புறுதியினை அது பெறுகிறது எனல் வேண்டும்.
கார்ல் பாப்பர் கூறுவது என்ன ?
ஒரு பக்கம், ஏறக் குறைய எல்லாத் தேற்றங்களுக்கும் ஓர் ஒப்புறுதினை நாம் பெற்று விட முடியும் என்று கூறி, ஒப்புறுதி என்பதை மிகவும் எளிமைப் படுத்திக் காட்டி விடுகிறார் கார்ல் பாப்பர்! மறு பக்கமோ, ஒரு தேற்றத்தைப் பிழையாக்கிக் காட்டுகின்ற நிகழ்ப்பாட்டில் நாம் தோற்று விடுகின்ற பொழுதுதான், அதற்கான ஒப்புறுதினை நாம் பெற்றிட முடியும் என்று கூறி, ஒப்புறுதி என்பதனை மிகவும் கடினப் படுத்தியும் அவர் காட்டி விடுகிறார்.
எனினும், ‘எளிமையான ஒப்புறுதி ‘ மற்றும் ‘கடினமான ஒப்புறுதி ‘ என்று இரண்டு வகைப்பாடுகளைக் கார்ல் பாப்பர் வகுத்துக் கொண்டு இருக்கிறார் என்று அவரை நாம் புரிந்து கொள்வதில் தவறு இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அதே நேரத்தில், கடினமான ஒப்புறுதி மட்டும்தான் அவருக்கு முக்கியம் என்பதும் நமக்குத் தெளிவு ஆகிறது.
பிறந்த நேரத்தின் அடிப்படையில் கோள் நிலைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நமது வாழ்க்கையைக் கணிக்கின்ற கோளியக் காரர்களின் முற் கூற்றுகளை இங்கே நாம் எடுத்துக் கொள்வோம்.
கோளியம் பற்றியும் கார்ல் பாப்பர் பேசுகின்ற காரணத்தால், கோளியக் காரர்களின் முற் கூற்றுகளை இங்கே நாம் எடுத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அதே நேரத்தில், எளிமையான ஒப்புறுதியின் பாற் பட்டவைதாம் இவையும் ஆகும்.
கோளியக் காரர்களின் முற் கூற்றுகள்
‘மகிழ்ச்சியான நாள் ‘ என்று ஒரு கோளகரின் தினப் பலனை முற் கூறுகின்ற கோளியக் கணிப்புகளுக்கு ஒப்புறுதி காண்பது மிகவும் எளிது. ஏனென்றால், மகிழ்ச்சி தருகின்ற ஏதேனும் ஒரு நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நடை பெற்றிடாமல் இருந்திட முடியாது.
எளிமையினும் எளிமையாகப் பலருக்கும் இது தோன்றிடக் கூடும் என்பதால், கோளியம் பற்றிய ஒரு சில கதைகளையும் இங்கே நாம் பார்த்து விடுவோம். பல வாறாகப் பலரின் தந்தை மார்களும் சொல்லி நம்மில் பலரும் கேட்டு இருக்கக் கூடிய கதைகள்தாம் இவை!
‘குரு ‘ என்னும் பெயரில் விண்ணில் ஒரு ‘கோள் ‘, அல்லது ‘கிரகம் ‘ சுழன்று கொண்டு வருகிறது என்பது நமக்குத் தெரியும். வியாழன் என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு!
இந்த வியாழன், அல்லது குருவின் பலன் நிறைந்து இருந்தால்தான் ஒருவருக்குத் திரு மணம் ஆகிட முடியுமாம்! காதல் மலர்வதற்கும் கூட இப்படி ஏதேனும் ஒரு பலன் தேவை என்று கோளியக் காரர்கள் கருதுகிறார்களா ? என்பது தெரிய வில்லை.
இந்தக் குருவிற்கு ஒரு மகள்! அவளுக்கு மணம் முடித்து வைப்பது என்று அவர் முடிவு செய்கிறார். அதே நேரத்தில், முதல் இரவின் பொழுது அவளோ அல்லது அவளது கணவனோ மடிந்து விடுவார்கள் என்று ஏற்கனவே கோளியக் காரர்கள் முற்கூறி இருந்ததும் அவருக்குத் தெரியும்.
இதற்காக, குரு பலன் கூடி இருக்கின்ற ஒரு நேரத்தில் யாருக்கும் திரு மணம் நடை பெற்றிடாமல் இருந்திட முடியுமா ?
திரு மணம் நடை பெற்று முடிந்து விடுகிறது. மகளின் முதல் இரவில் மனத்திற்குள் குமுறிக் கொண்டு இருக்கிறார் குரு!
இறுதியில், மகளையோ அல்லது மரு மகனையோ பறி கொடுத்து விடக் கூடிய ஒரு கையறு நிலையில், கதவின் துளை வழியாக அவர்களை அவர் பார்க்கிறார்; பார்த்துக் கொண்டே இருக்கிறார். கோளியக் காரர்கள் கணித்துக் கூறி இருந்தது போல அவர்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்து விட வில்லை.
மறு நாள், கோளியக் காரர்களின் முற் கூற்றுப் பிழை பட்டுப் போனது எப்படி ? என்று குருவிற்கும் அவர்களது கோளியக் காரர்களுக்கும் இடையே ஒரு விவாதம் நடை பெறுகிறது. அப் பொழுது, ஆணித் தரமாக ஒரு கோளியக் காரர் கூறினாராம்—- ‘குரு பார்க்கக் கோடி நன்மை ‘ என்று!
அதற்கு அவர் விளக்கமும் அளித்தாராம்—-குருவாகிய குருவே பார்த்துக் கொண்டு இருந்ததனால்தான், கோளியக் காரர்களின் முற் கூற்று பிழை பட்டுப் போய் விட்டது என்று; அதே நேரத்தில், குரு பார்க்கக் கோடி நன்மை என்ற கோளியக் கணிப்பு நிருபிக்கப் பட்டும் விட்டது என்று!
இன்னும் ஒரு கதையினையும் இங்கு நாம் பார்ப்போம். அரச யோகம் நிரம்பி இருந்த இருவரது கோளியக் கணிப்புகளைப் பற்றிய ஒரு கதை இது!
அரச யோகத்தில் பிறந்த ஒருவன் அரியணையில் அமர்ந்து ஆட்சி செலுத்திக் கொண்டு இருந்தானாம்; அவன் பிறந்த அதே நேரத்தில் பிறந்து இருந்த இன்னொருவனோ பிச்சைக் காரர்களின் நடுவில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தானாம்!
இதற்கும் விளக்கம் அளிப்பதற்கும் கோளியக் காரர்கள் தவற வில்லை—-ஒருவனின் அரச யோகம் அவனை மக்களின் தலைவனாக ஆக்கி இருந்தது என்று; மற்றவனின் அரச யோகம் அவனைப் பிச்சைக் காரர்களின் தலைவனாக ஆக்கி இருந்தது என்று!
இம் மாதிரியான கதைகளை எல்லாம் கார்ல் பாப்பர் போன்ற ஆய்வாளர்கள் கூட வினயமாக எடுத்துக் கொண்டு இருப்பது நமக்கு வேடிக்கையாகத் தோன்றிடலாம் என்ற போதிலும், அவருக்கு இவை முக்கியம்! ஏனென்றால், இம் மாதிரியான முற்கூற்றுகளை வீழ்த்தி விடுவதன் மூலம், அனைத்து வகையான முற்கூற்றுகளையும் அடித்து நொறுக்கி விட முடியும் என்று அவர் நம்புகிறார்.
இந்த நம்பிக்கையில்தான் அவர் கூறுகிறார்—-ஒப்புறுதிதான் தேவை என்றால் எப்படியும் அதனைப் பெற்று விட முடியும் என்று!
இப் பொழுது, கார்ல் பார்ப்பரின் கணிப்புகளுக்கு நாம் வருவோம்.
கோளியக் காரர்களும் கார்ல் பாப்பரும்
Astrology did not pass the test. Astrologers were greatly impressed, and misled, by what they believed to be confirming evidence – so much so that they were quite unimpressed by any unfavorable evidence. Moreover, by making their interpretations and prophesies sufficiently vague they were able to explain away anything that might have been a refutation of the theory had the theory and the prophesies been more precise. In order to escape falsification they destroyed the testability of their theory. It is a typical soothsayer ‘s trick to predict things so vaguely that the predictions can hardly fail: that they become irrefutable….
பெரிதாக எதையும் இங்கே கார்ல் பாப்பர் கூறி விட வில்லை.
இது இப்படி இருந்தால் அது அப்படி இருக்கும்; அது அப்படி இருந்தால் இது இப்படி இருக்கும்; என்று வெறுமனே கலங்கலாகத்தான் தங்கள் முற் கூற்றுகளைக் கோளியக் காரர்களால் கணித்திட முடிகிறதாம்; இதன் மூலம், தங்கள் முற் கூற்றுகளைப் பரி சோதித்துப் பார்க்கின்ற இயன்மையினை அவர்கள் அழித்தும் விடுகிறார்களாம்!
இதனைத்தான் கொஞ்சம் நீட்டி முழக்கி இருக்கிறார் கார்ல் பாப்பர்!
எனினும், இவ்வளவு எளிமையாக நம் ஊர்க் கோளியக் காரர்களைக் கார்ல் பாப்பரால் மடக்கி விட முடியும் என்று நமக்குத் தோன்ற வில்லை. அதே நேரத்தில், கோளியக் காரர்களுக்கும் கார்ல் பாப்பருக்கும் இடையிலான இந்த மோதலில் நம்மை இடைப் படுத்திக் கொள்வதற்கு நாம் விரும்பிடவும் இல்லை.
எனினும், தங்கள் முற் கூற்றுகளை மற்றவர்கள் பரி சோதித்துப் பார்க்கின்ற இயன்மையினைக் கோளியக் காரர்கள் அழித்து விடுகிறார்கள் என்று கார்ல் பாப்பர் கூறுகிறாரே, அது எப்படி ? என்பதுதான் நமக்குப் புரிய வில்லை.
ஏனென்றால், இங்குதான் குழப்பங்கள் அதிகம்—-கோளியக் காரர்களின் முற் கூற்றுகளை விட மிக மிக அதிகம்!
எனினும், தேற்ற முறையான நிருபணத்திற்கும் செயற்பாட்டு முறையான நிருபணத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றிய ஒரு கேள்விதான் இது!
ஆனால், செயற்பாட்டு முறையான ஒரு நிருபணத்த்ினை எப்படியும் நாம் பெற்று விட முடியும் என்று கூறி, அதனைக் கார்ல் பாப்பரோ புறக்கணித்து விடுவதற்கு முயல்கிறார்; முற்கூற்றுகளைப் பற்றிய பிரச்சனையாக மட்டும், தேற்றத்திற்கும் செயற்பாட்டிற்கும் இடையே உள்ள பிரச்சனையினைக் குறுக்கிக் கொள்வதற்கும் அவர் முற்படுகிறார்.
எனவே, ஒரு சில முற்கூற்றுகளை எடுத்துக் கொண்டு அவரை நாம் அணுகுவதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை.
(தொடரும்)
23-12-2004
sothipiragasam@yahoo.co.in
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-3
- ஒத்தை…
- அறிவியல் கதை – தக்காளித் தோட்டம் (மூலம் : சார்லஸ் டெக்ஸ்டர் வார்ட்)
- நீங்கள் தொலைவிலிருந்தபோதும் உங்கள் அருகிலிருக்கும் இணையப் புத்தகக் கடை
- கருமையம் அமைப்பின் நாடக விமர்சனக்கூட்டம்
- ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் பரிசு
- ‘சோ ‘ எனும் சந்தனம்
- மூன்றாவது மொழிப்போரும் கீறல் விழுந்த கிலுகிலுப்பைகளும்
- ‘பதிவுகள் ‘/ ‘தமிழர் மத்தியில் ‘ ஆதரவுச் சிறுகதைபோட்டி முடிவுகள் 2004!
- கல்லூரிக் காலம்!
- கவிமாலை (26/02/2005)
- நி ழ ல ற் ற வ னி ன் அ ல ற ல்
- யாழன் ஆதி கவிதைகள் – கண்ணீரும் தனிமையும்
- கதவு திறந்தது
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) – காட்சி நான்கு – அயோத்திய புரியில் ஆரம்பித்த அசுவமேத யாகம்
- பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை
- ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘
- கவிதை
- நாவில் கரைந்துகொண்டிருக்கும் கண்ணீர்
- மனிதச் சுனாமிகள்
- கவிதைகள்
- கவிதைகள்
- அவரால்…
- நிழல்களைத் தேடி….
- எனது முதலாவது வார்த்தை..
- அன்பின் வெகுமானமாக…
- எச்ச மிகுதிகள்
- கபீர் நெய்துகொண்டிருக்கிறார்…
- நிதி சால சுகமா ? மம்மத பந்தனயுத நர ஸ்துதி சுகமா ?
- நி ழ ல ற் ற வ னி ன் அ ல ற ல்
- வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும் – முன்னுரை
- சிந்திக்க ஒரு நொடி- அரசியலும் சராசரி மனிதனும்
- சீனா – துயிலெழுந்த டிராகன்
- தென்னகத்தில் இனக்கலப்பா ?
- திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள்
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! (தொடர்:3)
- மனக்கோலம்
- பிறந்தநாள் பரிசு
- தெப்பம் – நாடகம்
- மாங்கல்யச் ‘சரடு ‘கள்
- வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்
- இந்தியப் பெருங்கடல்
- பச்சைக்கொலை
- பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை
- பெரிய புராணம் – 33 – 19. அரிவாட்டாய நாயனார் புராணம்
- பாவம்
- ஒடுக்கப்பட்ட நுண்தரப்புகளிலிருந்து விடுதலை சாத்தியமா ?
- செல்வம் அருளானந்தம் எழுதிய எள்ளிருக்கும் இடமின்றி ஒரு கனதி வாய்ந்த கதை (திண்ணை, 2005-03-10)
- நூலறிமுகம்! – ‘மிஷியோ ஹகு ‘வின் ‘ஹைபர் ஸ்பேஸ் ‘!
- யுக யுகங்களாய்ப் பெயர்ந்த கண்டங்கள். மறைந்த விலங்கினங்கள். கண்டங்களை நகர்த்தும் அட்லாண்டிக் கடற்தட்டு. குறுகிச் சுருங்கும் பசிபி
- ராமானுஜனின் இன்னொரு கணக்கு புரிந்தது
- கவிதைகள்
- சுவாசத்தில் திணறும் காற்று
- மழை நனைகிறது….
- விரல்கள்
- கீதாஞ்சலி (16) – குழந்தைக்குப் போடும் கால்கட்டு! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கூ ற ா த து கூ ற ல் – கவிதைப் பம்பரம்
- அவரால்…
- து ை ண – 7 ( குறுநாவல்)