சுவிஸ் நண்பர்கள்.
மனதை உலுக்கும் மரணச் செய்தியாய் நண்பன் கலைச்செல்வன் எழுதப்பட்டவிட்டான். 45 வயதேயான, வாழ்வின் நடுப் பகுதியைத் தொட்டிருந்தபோது இவன் காவுகொள்ளப்பட்டு விட்டான். சிாித்த முகம், கலகலப்பான பேச்சு, அரவணைப்பு எல்லாம் அவனது குறும்தாடியை இழக்க மறுத்த முகத்தையும் தாண்டி வந்து அவனது தோற்றத்தை எம் நினைவில் எழுதிச்செல்லும்.
புலம்பெயர் வாழ்வின் ஆரம்பகாலங்களில் அதாவது 80 களின் ஆரம்பங்களிலிருந்தே இலக்கியம் அரசியல் என பணியாற்றத் தொடங்கியவர்களில் அவனும் ஒருவன். ஒரு கவிஞனாக நடிகனாக விமர்சகனாக செயற்பாட்டாளனாக அவன் பல முகங்களைக் காட்டியவன். எக்சில் சஞ்சிகையின் ஆரம்பகாலத் தோற்றத்துக்குக் காரணமானவர்களில் ஒருவனாக இருந்து பின் உயிர்நிழல் சஞ்சிகையின் ஆசிாியர்களில் ஒருவனாக தனது உழைப்பைத் தொடர்ந்துகொண்டேயிருந்தான். பரீசில் வெளிவந்த முழுநீளத்
திரைப்படமான ~முகம்~ படத்தில் முக்கிய பாத்திரத்தில் வந்து தன்னில் நடிப்பாற்றல் புதைந்திருப்பதை வெளிப்படுத்திக் காட்டினான். புகலிடத்தின் இலக்கியச் சந்திப்புகளில் ஆர்வமுடன் காணப்பட்ட அவன் பாிசில் சந்திப்புகளை நடத்துவதிலும் முன்னின்றான்.
தமது வலுவுக்கு எட்டியளவு தமது உழைப்பையெல்லாம் கரைத்து அவனும் அவன் துணைவி லக்சுமியும் உயிர்நிழல் சஞ்சிகையையும் சில வெளியீடுகளையும் வெளிக்கொணர்ந்தார்கள். புலம்பெயர் இலக்கியத்தின் தோற்றத்தில் பன்முகக் கருத்துகளுடன் எழுத்தின் வலிமையை நிலைநாட்டிவந்த சஞ்சிகைகளில் எக்சில் உயிர்நிழல் என்பவற்றுக்கும் முக்கிய பங்குண்டு. விடாமுயற்சியோடு சொந்த உழைப்பில் அண்மைக்காலம்வரை உயிர்நிழல் சஞ்சிகையைக் கொண்டுவந்து தனது பாதையைத் தொடர்ந்துவிட்டு இன்று எம்மைவிட்டு நிரந்தரமாய் விடைபெற்றுவிட்டான்.
நம்பமுடியவில்லை. எம் நினைவில் அவன் மரணத்தை இருத்தமுடியவில்லைத்தான். ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும் என்றானபோது எழுகிறதே வலி, இங்கு அவன் எம்முடனே வாழ்ந்துகொள்கிறான். திரட்சியான அனுபவங்களுடனும் பின்னணிபாடா அரசியலுடனும் அவன் எம்மில் இணைந்துகொண்டதால் மெல்ல நெளிகிறதே ஒரு கனம், இங்கு அவன் எம்முடனே வாழ்ந்துகொள்கிறான். அவன் வாழ்ந்துகொள்வான் எம்முடன். துணைவியாக
ஒரு நண்பியாக தோழியாக அவனுடன் வாழ்ந்த லக்சுமிக்கும் மகன் கபிலனுக்கும், அவனது சகோதரன் திருமாவளவனுக்கும் எமது கரங்களின் மெல்லப் பற்றுதலாய்… அவர்தம் துயருள் எம் இணைவாய்…
எமது கண்ணீர் அஞ்சலி!
– சுவிஸ் நண்பர்கள்
- திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள் -விரைவில்
- பால் பத்து
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-2
- சென்னை இலக்கிய நிகழ்வு
- மழை ஆடை (Rain Coat)
- கலைச்செல்வனின் மரணச்செய்தி. துயருறு பொழுதுடன் நாம்
- எள்ளிருக்கும் இடமின்றி
- நூல் அறிமுகம்: ம.வெங்கடேசன் எழுதிய ‘ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ‘
- சென்னை இலக்கிய நிகழ்வுகள் -`எழுத்தாளர் மா. அரங்கநாதனின் படைப்புலகம்
- தொடரும் கவிதைக் கணம்
- டாக்டர் ராமதாசும் இசைப்பாடமும்
- கடிதம் பிப்ரவரி 11,2005
- ரெ.கார்த்திகேசுவின் இரு நூல்கள் வெளியீடு 12 மார்ச் 2005 (சனி)
- பெரியபுராணம் – 32 (18. மானகஞ்சாற நாயனார் புராணம் – தொடர்ச்சி )
- கீதாஞ்சலி (15) அன்போடு அளிப்பதை ஏற்றுக்கொள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கீதாஞ்சலி (14) உன் ஆடம்பர ஒப்பனைகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கடிதம் – பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை – இடமாற்றம்
- கருமையம் வழங்கும் நாடகங்கள்
- மறுமலர்ச்சியை வரவேற்கிறேன்
- கடிதம் பிப்ரவரி 11 ,2005 – சின்னக் கருப்பன் , நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன்
- கடிதம் பிப்ரவரி 11, 2005
- மனவெளி நாடக விழா
- தளப்பரப்பில் ஒலிகடத்தும் கருவிகளும் செல்பேசிகளும்
- பூகோள வடிவத்தின் பூர்வீக நாடகம்!யுக யுகங்களாய்ப் பிணைந்து பிரிந்த கண்டங்கள் (4)
- சிந்திக்க ஒரு நொடி : தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழிபோயிற்று
- சிந்திக்க ஒரு நொடி : நடிப்பு சுதேசிகள்
- சிந்திக்க ஒரு நொடி : தமிழகத்துப் பிரதான திராவிடக் கட்சிகளுக்குள் ஜனநாயகம் சாத்தியமில்லை
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி மூன்று: ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு)
- ஓணான்கள்
- நினைப்பும்.. பிழைப்பும்..
- து ணை – 6
- திரை
- அறிவியல் கதை – விளையாட்டுப் பிள்ளை (மூலம் : மைக்கேல் ஸ்வான்விக்)
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பரெல்லாம் பாடையிற்போவர்! ( பாகம்:1 )
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! (பாகம்:2)
- பாகிஸ்தானில் விற்கப்படும் இரானியப் பெண்கள்
- கூ ற ா த து கூ ற ல்
- இடையினம்
- மெளனவெளி
- பிரிய மனமில்லை
- பேசி பேசி…
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட் )
- நிஜங்களையும் தாண்டி…
- ‘இக்கணம் ‘
- மோகமுள்
- வெறுப்பு வர்ணம்