சோதிப் பிரகாசம்
கலை மனோ லயம்
ஏப்ரல், 2004 புதிய கோடாங்கியில் குடியரசு எழுதிய கட்டுரை ஒன்று வெளி வந்து இருந்தது—- ‘பலியர்களுடன் உரையாடல் ‘ என்னும் தலைப்பில்!
‘பலியர் ‘ என்னும் மலை வாசி மக்கள் இடையே சமுதாயப் பணி ஆற்றுவதற்காக—-தங்கள் வாழ்க்கையில் பலியர்கள் முன்னேறிடத் தக்க வழி-வகைகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக—-சென்று இருந்த தலித் தலைவர்களின் அனுபவங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்ற ஒரு கட்டுரை அது.
அதே நேரத்தில், சமுதாயப் பணி புரிவதற்காக மக்களைத் தேடி மலைகளுக்குச் செல்கின்ற தலைவர்களின் கருத்துகளுக்கும் தங்கள் வாழ்க்கையினைப் பற்றி அம் மலை வாசி மக்கள் கொண்டு இருக்கின்ற கருத்துகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளையும் வெளிக் கொணர்ந்து இருக்கின்ற ஒரு கட்டுரை என்கின்ற வகையில், மிகச் சிறந்தது ஒரு கட்டுரையாகவும் அது விளங்குகிறது.
தலித் மக்களின் ‘தனி மனித விடுதலை ‘யாகவும் ‘மனித மாண்பின் ‘ வீறு கொண்ட எழுச்சியாகவும் ‘தலித்தியம் ‘ என்பதைப் புரிந்து வைத்து இருக்கின்ற எழுத்தாளர்களான சிவகாமி, ப்ரதிபா ஜெயச்சந்திரன்(பெண் அல்லர்; ஆண்தான்!), நிகழ் அய்க்கன், குடியரசு முதலானவர்கள், கொடைக் கானல் மலைக்குச் சென்று பலியர்களைச் சந்திக்கிறார்கள்.
எத் தகையது ஓர் உறவினைப் பலியர்களுடன் ஏற்படுத்திக் கொள்வதற்காக அவர்களைத் தேடித் தலித் தலைவர்கள் சென்றார்கள் என்பது நமக்குத் தெரிய வில்லை; இவர்களது ‘கலை மனோ லயம் ‘ என்பதைத் தவிர வேறு காரணம் எதுவும் இதற்கு இருந்திட முடியுமா ? என்பதும் நமக்குப் புரிய வில்லை.
குடியரசுவின் அனுபவம்
மனைவியைக் குறிப்பதற்குப் ‘பெண்சாதி ‘ என்னும் சொல்லைக் குடியரசு பயன் படுத்த, குடியரசுவின் பின்னோக்கிய பார்வையைச் சுட்டிக் காட்டுகின்ற வகையில் ‘மனைவி ‘ என்னும் சொல்லைக் கந்தசாமி என்னும் பலியர் ஒருவர் பயன் படுத்த, ஒரு மோதலுடன் குடியரசுவின் உரையாடல் தொடங்குகிறது.
‘பண்ணையார் ‘களாகவும் ‘செட்டியார் ‘களாகவும் ‘சமுசாரி ‘களாகவும், அதாவது, ‘ஆதிக்கச் சாதிக் காரர் ‘களாகவும் சிவகாமியுடன் சென்று இருந்தவர்களைத் தாங்கள் மதிப்பதாகக் கந்தசாமி பலியர் கூறுகிறார்.
எம். ஜி. ஆர்., சிவாஜி கணேசன், ஜெயலலிதா, ஆகியோர் அழகானவர்கள் என்றும் அவர்களைக் காண்பதற்காக அவர்கள் வருகை புரிகின்ற இடங்களுக்கு எல்லாம் சென்று வருவது மலை வாசி மக்களின் வழக்கம் என்றும், ஆனால், சிவகாமியும் பிறரும் அவர்களைத் தேடி மலைக்கு வந்து இருப்பதாகவும் கந்த சாமி பலியர் குத்திக் காட்டி அவர்களைக் கொஞ்சம் கிண்டல் அடிக்கவும் செய்கிறார்.
ஒரு ‘கலெக்டர் ‘ என்பதாகவும் அந்தக் கலெக்டரைத் தொட்டுப் பார்த்து விட்டதே பெரும் பேறு என்பதாகவும் கருதித்தான் சிவகாமிக்கு மலை வாசிப் பெண்கள் மதிப்பு அளித்து இருக்கிறார்கள் என்பதும் கூட பலியர்களுடன் குடியரசு நடத்திய உரையாடலில் இருந்து நமக்குத் தெரிய வருகிறது.
தங்களின் ஆடல்-பாடல்களைப் பார்த்து சிவகாமி அடைந்த மகிழ்ச்சிக்காகத் தாங்களும் மகிழ்ந்து கொண்டு இருந்த மலை வாசிப் பெண்கள் இடையே சிவகாமி பேசினாராம்—-தங்கள் பாடல்களை மலை வாசி மக்கள் மறந்து விடக் கூடாது என்று; காடுகள்தாம் அவர்களின் தெய்வம் என்று!
வானொலியின் மூலம்தான் தங்களுடன் சிவகாமி முதலியனர் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கந்த சாமி பலியர் கூறி இருந்த
போதிலும்—-2,000 பேர் அடங்கிய பலியர்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் என்பது தெரியாத நிலையிலும்—-அவர்களுக்குப் பத்தரிகை ஒன்று தேவை என்று குடியரசு நினைக்க, அந்த நேரம் பார்த்து, பலியர்களின் பத்தரிகைக்கு 1,000 ரூபாய் நன்கொடை வழங்குவதாக சிவகாமி அறிவிக்க, சரியான தலைமையின் கீழ்தான் தாம் இயங்கிக் கொண்டு வருவதாகக் குடியரசு பூரித்துப் போக, ஒரு தலைவர்-தொண்டர் நாடகமே கொடைக் கானல் குளிர்ச்சியில் நடந்து முடிந்து இருக்கிறது.
முற்போக்குத் தனமான விழிப்பு
பலியர்களை வாழ வைப்பதற்கு என்று வெளி நாடுகளில் இருந்து நிதிகளைப் பெற்றுக் கொண்டு இருந்த—பெற்றுக் கொண்டு வருகின்ற—தன்னார்வக் குழுவினர் அனைவரும் பெரும் பாலும் அவர்களை ஏமாற்றிக் கொண்டுதான் வந்து இருந்தனர்—-வருகின்றனர்—என்று பலியர்கள் ஏன் கருதிக் கொண்டு இருந்தனர் என்பது முக்கியமான ஒரு விசயம்தான் என்ற போதிலும், இங்கே நமக்கு அது வேறு ஒரு விசயம்!
ஆனால், தாங்கள் உழைத்துச் சம்பாதித்த தங்களின் சொந்தப் பணத்தினைச் செலவு செய்து, கதைஞர் சிவகாமி, கவிஞர் ப்ரதிபா ஜெயச் சந்திரன், செய்தித் தொகுப்பாளர் நிகழ் அய்க்கன், எழுத்தாளர் குடியரசு, முதலியனர் பலியர்களைச் சென்று சந்தித்து, காடுகள்தாம் அவர்களின் தெய்வம் என்பன போன்ற பழைமையான—- ‘பிற்போக்குத் தனமான ‘—-வாதங்களை நிகழ்த்தி, ‘முற்போக்குத் தனமான ‘ ஒரு விழிப்பினை அவர்கள் இடையே ஏற்படுத்துவதற்கு முயன்று இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் என்ன என்பதுதான் யாரும் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிர்!
‘தலித்துகள் ‘ என்னும் அடையாளத்துடனும் தங்கள் விடுதலை முயற்சிகளில் பழங் குடி மக்களின் முன்னேற்ற முயற்சிகளையும் இணைத்துக் கொள்ளலாம் என்னும் உத்தியுடனும், பலியர்களைத் தேடி இவர்கள் சென்று இருந்தார்கள் என்றால்—-இத் தகையது ஓர் உத்தியாகத்தான், தலித் இளைஞர்களின் வழி காட்டியாக நின்று அவர்களை அங்கே சிவகாமி அழைத்துக் கொண்டு சென்று இருந்தார் என்றால்—அதற்காகச் சாதி-ஒழிப்பாளர்கள் மகிழ்ந்து கொள்ளலாம்.
ஒரு தன்னார்வக் குழுவாகவோ அல்லது கூலிக்கு மாரடிப்பதற்காகவோ மலைகளைத் தேடி இவர்கள் சென்று இருந்தால் கூட, நமக்குத் தேவை இல்லாத வேறு ஒரு விசயம் போலும் அது! என்று நாம் ஒதுங்கிக் கொள்ளலாம்!
ஆனால், இவர்களோ மலை வாசி மக்களின் பழைய வாழ்க்கை முறைகளையும் அவர்களின் ஆடல்-பாடல்களையும் சுவனித்துப் பார்த்து விடுகின்ற ‘கலை மனோ லயத்தில் ‘ மலைக்குச் சென்று இருக்கிறார்கள்—ஜெய மோகனின் ‘காடு ‘ கதையை நமக்கு நினைவு ஊட்டுகின்ற வகையில்!
எனினும், ஈகின்ற வள்ளலாக ஒருவன் இருந்திட வேண்டும் என்றால், ஏற்கின்ற இரவலர்களாகப் பலரும் இருந்திட வேண்டும் என்பது போல, மலை வாழ் மக்களின் கட்டற்ற வாழ்க்கையினையும் கலை-களிப்புகளையும் எப்பொழுதாவது சென்று இவர்கள் கண்டு களித்திட வேண்டும் என்பதற்காக, இருண்டு போன பழைமையிலேயே மலை வாசி மக்கள் என்றும் இருந்திட வேண்டுமா, என்ன!
வரலாற்றின் இயக்கம் பற்றியோ பொருளாதார வளர்ச்சியின் விதிகள் பற்றியோ தெரிந்து கொள்வதற்குக் கொஞ்சமும் முயலாமல், கதைகளையும் கவிதைகளையும் எழுதுவதற்குத் தெரிந்து வைத்து இருந்தாலே போதும், அனைத்தும் தமக்குத் தெரிந்ததாகி விடும் என்று கருதிக் கொள்கின்ற ‘கலை மனோ லயத்தின் ‘ செயல் முறையான வெளிப்பாடு இது!
இதில், நமது ஜெய மோகனின் சித்தரிப்புதான் கொஞ்சம் வேற்றுமை ஆனது. ஃப்ரான்ஸ் நாட்டின் வண்ணக் கலவையுடன் கீழ்-மேல் நாடுகளின் ஒரு தத்துவச் சிதறலாகத் தமது ‘கலை மனோ லயத்தினை ‘ அவர் சித்தரித்து விடுவார். தத்துவம் என்னும் சொல்லைத் தவறாகப் பயன் படுத்துபவர்களை ஹே:கல் விட்டு வைத்திட மாட்டார் என்பது இங்கே வேறு விசயம்!
ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ கதையில் ஒரு காட்சி:
தமது ‘விஷ்ணு புரம் ‘ கதையை வெளியிடுகின்ற வாய்ப்பிற்காக ஜெய மோகன் காத்துக் கொண்டு இருந்த நேரம் அது. ரிஷி என்னும் ஒரு ‘மார்க்சிய ‘ அறிஞரைச் சந்தித்து அவர் உரையாடிக் கொண்டு இருக்கிறார். மேலை நாட்டுத் தத்துவங்களின் நுனிப் புல்களைக் கொஞ்சம் அவர்கள் மேய்ந்து பார்க்கிறார்கள்.
பெருங் கதையாடல், சிறுங் கதையாடல், என்று எல்லாம் தொடர்கின்ற அவர்களது உரையாடலின் இறுதியில் ஜெய மோகன்
கூறுகிறார்—- ‘பொதுக் கனவுகள் ‘ தேவை இல்லை; மக்களின் ‘தனிக் கனவுகளில் ‘ யாரும் தலையிடாமல் அவற்றின் போக்கில் அவற்றை விட்டு விடுவதுதான் நல்லது என்று!
விட்டு விடாமல் என்னத்தைதான் இவர் செய்து விடுவார் ? என்பது ஒரு புறம் இருக்க, ‘பொதுக் கனவு ‘ என்பதனை எப்படி இவர் புரிந்து கொள்கிறார் ? அதையும் ‘கனவு ‘ என்று இவர் ஏன் குறிப்பிடுகிறார் ? என்பதுதான் முக்கியமான கேள்வி. எனினும், ஜெய மோகனின் ‘கலை மனோ லயத்தின் ‘ எல்லையை விட்டு நீங்கி மண்ணுக்கு இறங்கி வந்து இந்தக் கேள்வியினைச் சற்றே நாம் அலசிப் பார்ப்போம்.
அதே நேரத்தில், நெருக்கமான தொடர்புகளுடன் கூடிய மனிதர்களின் சமுதாய வாழ்க்கையினைப் ‘பொதுக் கனவு ‘ என்றும் மலை வாசி மக்களைப் போலச் சற்றுத் தொலைவில் ஒதுங்கிப் போய் மனிதர்கள் நடத்துகின்ற வாழ்க்கையினைத் ‘தனிக் கனவு ‘ என்றும், கலைத் தனமாகக் குறிப்பிடுவதற்கு ஜெய மோகன் விரும்புகிறார் என்பதையும் ஈண்டு நினைவில் நாம் கொள்வோம்.
****
பொதுக் கனவு
பொருளாதார நலன்களின் நிலவரங்களுக்கு ஏற்பத்தான் மனிதர்களின் கருத்துகளும் கொள்கைகளும் உள்ளப் போக்குகளும் இங்கே நிலவிட முடிகிறது என்றால், சிவகாமியோ, ஜெய மோகனோ, அல்லது அவர்களைப் போன்ற பிற கதை-கவிஞர்களோ அதனைச் சிந்தித்துப் பார்ப்பதற்குக் கூட முன் வந்திட மாட்டார்கள் என்பது அன்றாடம் நாம் கண்டு வருகின்ற ஒரு மெய்மை!
மேம் போக்கான ஓர் அறிவுத் தேட்டத்தில் நிறைவு அடைந்து விடுபவர்கள் என்றோ, மூளையை நோக வைக்கின்ற முயற்சிகளில் ஆர்வம் இல்லாதவர்கள் என்றோ, தங்கள் பிறவி ஞானத்திற்கு அப்பால் வேறு ஞானம் எதுவும் தேவைப் படாத பிறவிகள் என்றோ இதற்குப் பல் வேறு காரணங்கள் இருக்கலாம்.
ஆனால், முழுமையான வாழ்க்கையினையும் மொத்தமாக நாம் பார்த்திட வேண்டும் என்றால், மனிதர்களின் பொருளாதார நலன்களில் இருந்து தொடங்கித்தான் நமது பார்வையினை நாம் செலுத்திட வேண்டும் என்பது ‘இராம கி-யின் பாடம் ‘ (திண்ணை, 20-05-2004) அல்ல என்ற போதிலும் ஒரு பாலப் பாடம்!
தங்களுக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தையும் தாங்களே உற்பத்தி செய்து நுகர்ந்து கொள்ளுகின்ற ஒரு குடும்பத்தினர் அல்லது ஒரு குழுவினரின் பொருளாதாரம், ‘இயற்கைப் பொருளாதாரம் ‘ என்றும் தங்கள் உற்பத்திகளை எல்லாம் சரக்குகளாகச் சந்தையில் விற்றும் தங்கள் தேவைகளை எல்லாம் சரக்குகளாகச் சந்தையில் இருந்து வாங்கியும் மனிதர்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டு வருகின்ற ஒரு பொருளாதாரம், ‘சரக்குப் பொருளாதாரம் ‘ என்றும் வகைப் படுத்தப் பட்டு இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும்.
உற்பத்தி, நுகர்ச்சி, ஆகிய இரண்டு நிகழ்ப்பாடுகளிலும், சரக்குகளது கைமாற்றின் மூலமாகத்தான் மனித உறவுகள் நிலை நிறுத்தப் பட்டு வருகின்றன என்பதாலும் சரக்குகளின் கடவுளாக நின்று கைமாற்றினை ஒழுங்கு படுத்திக் கொண்டு வருவது பணம்தான் என்பதாலும், பணத்தின் சுற்றோட்டம்தான்
மனித உறவுகளின் ஆழ-அகலங்களைச் சுட்டிக் காட்டுகின்ற ஓர் அளவு கோலாக விளங்குகிறது. எப்படியும், சமுதாயம் என்பது இன்று ஒரு சந்தைதானே!
இப்படி, வட்டாரச் சந்தை முதல் உலகச் சந்தை வரை தொடர்பு கொண்டு இருப்பவர்கள், சமுதாயத் தன்மை மிகுந்தவர்களாகவும் தங்கள் வட்டாரத்தின் எல்லைக்குள் மட்டும் தங்கள் சந்தைத் தொடர்புகளைக் குறுக்கிக் கொண்டு இருப்பவர்கள், சமுதாயத் தன்மை குறைந்தவர்களாகவும் நிலவிக் கொண்டு வருகிறார்கள்.
அதாவது, சமுதாயத் தன்மை மிகுந்தவர்கள், பொதுத் தன்மை மிகுந்தவர்களாகவும் சமுதாயத் தன்மை குறைந்தவர்கள், தனித் தன்மை மிகுந்தவர்களாகவும் நிலவுகிறார்கள்.
இந்தப் பொதுத் தன்மையினைத்தான் ‘பொதுக் கனவு ‘ என்றும் தனித் தன்மையினைத்தான் ‘தனிக் கனவு ‘ என்றும் ஜெய மோகன் குறிப்பிடுகிறார்.
மலை வாசி மக்கள் இடையே இன்றும் காணப் படுகின்ற இந்தத் தனித் தன்மையின் ‘கலை வடிவ ‘ வெளிப் பாட்டினைத்தான் அவர்களின் ஆடல்-பாடல்களில் சிவகாமியும் காண்கிறார்; அவை பாது காக்கப் பட வேண்டும் என்றும் கருதுகிறார்.
ஆனால், பழங் கலைகளை எல்லாம் கடந்து வந்து இருக்கின்ற இன்றைய கலைகள் எல்லாம், பழங் கலைகளின் வளர்ச்சிகள்தாம் என்கின்ற பொழுது, பழங் கலைகளைப் பாது காத்திட வேண்டும் என்று சிவகாமி ஆசைப் படுவதில் என்ன ஒரு வரலாற்று ஞாயம் இருந்திட முடியும்—-அவ் வப்போது அவர்களைப் போய்ச் சந்தித்து அவர்கள் நடுவே ஒரு ‘பெரியவாளாக ‘ (பெரிய + ஆள்)த் தம்மைக் காட்டிக் கொள்வதற்கு அவர் ஆசைப் படுகிறார் என்பதைத் தவிர ?
யாரும் போய்த் தலையிடாமல் அவர்களை அப்படியே விட்டு விட வேண்டும் என்று—-ஒரு பெரியவாள் என்கின்ற முறையில்—-கருத்துக் கூறுவதற்கு ஜெய மோகனும் முன் வரலாம்.
ஆனால், வணிகர்கள் விடுவார்களா ? பாதாளம் வரை பாய்ந்து சென்றிடுகின்ற ஆற்றல் படைத்த பணம் விடுமா ?
பலியர்களைப் பொறுத்த வரை, அவர்களோ ‘கூலி உழைப்பாளர்கள் ‘; வட்டாரம், தேசம், உலகம், என எல்லாச் சந்தைகளையும் கொஞ்சமேனும் சார்ந்து இருப்பவர்கள்!
உழைப்பாளர் வருக்கம் என்கின்ற முறையில் தங்களை அவர்கள் அணி திரட்டிக் கொள்வதில்தான் அவர்களது எதிர் காலம் வளப் பட்டிட முடியுமே ஒழிய, சிவகாமி போன்றவர்களின் கலைத் தனமான வள்ளல் தனத்தில் அல்ல! தங்களுக்குத் தேவையான கலை வடிவங்களைத் தாங்களாகவே உருவாக்கிக் கொள்வதற்கு அவர்களால் முடியாதா,என்ன!
மதுரை சண்முக சுந்தரம்
கதை-கவிதைகளைப் பற்றி அதிகம் பேசுகின்ற ஒரு நாட்டில் அறிவு வளர்ச்சி ஏற்படுகின்ற வாய்ப்பு மிகவும் குறைவு என்று நான் எழுதி இருந்ததைப் படித்து விட்டு, மதுரை நண்பர் சண்முக சுந்தரம் என்னுடன் பேசினார். நண்பர் ஜெய மோகனின் கதைகளில் அதிகமான ஈடுபாடு கொண்டு இருப்பவர் அவர்!
கதைகளைப் படிப்பதனால் அறிவு வளர்ச்சி ஏற்படுவது இல்லை என்று நான் கருதுவது தவறு என்று வாதிட்டு, மாவிலைத் தோரணங்களைக் கூட காசு கொடுத்துக் கடைகளில் வாங்கிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கின்ற மாற்றத்தைப் புதுமைப் பித்தனின் ஏதோ ஒரு கதையைப் படித்துதான் தாம் தெரிந்து கொண்டதாகவும் என்னிடம் அவர் கூறினார்.
இதனைத் தெரிந்து கொள்வதற்குக் கூட மதுரை சண்முக சுந்தரத்திற்கு ஒரு புதுமைப் பித்தன் தேவை பட்டு இருந்து இருக்கிறார் என்பது ஒரு புறம் இருக்க—-அனுபவ அறிவின் பரவலைப் பற்றித்தான் அவர் பேசிக் கொண்டு இருந்தார் என்பது மறு புறம் இருக்க—-சரக்குப் பொருளாதாரத்தின் விரிவினைக் குறித்துதான் அவர் வாதிட்டுக் கொண்டு இருந்தார் என்பது வெளிப்படை! எனினும், அதனைப் புரிந்து கொள்வதற்குதான் அவர் முயன்றிட வில்லை. ஆனால், கிராமத்து மக்களுக்கோ எளிதில் புரிந்து விடக் கூடிய ஒரு விசயம் இது!
அவரை நான் கேட்டேன்—-பணத்தின் ‘தன்மை ‘க்கும் ‘அளவு ‘க்கும் இடையே உள்ள வேறுபாட்டினை இதனால் நீங்கள் புரிந்து கொள்ள முடிந்ததா ? பணமோ, பணம்! என்று மனிதர்கள் அலைந்து திரிந்து கொண்டு வருகிறார்களே, அதற்கு இந்த வேறுபாடுதான் காரணம் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள முடிந்ததா ? என்று!
சண்முக சுந்தரத்தின் முழு முயற்சியும் எனது கேள்விகளைத் தவிர்ப்பதிலேயே வீண் ஆகிக் கொண்டு இருந்தது. அனுபவ அறிவின் எல்லையினை விட்டு நீங்கிக் காரண அறிவின் எல்லைக்குள் நுழைவது என்பது நமது மூளையை நோக வைத்திடக் கூடிய ஒரு கடினமான வேலைதானே!
விற்கப் படுகின்ற எந்தப் பொருளையும் பணம் இருந்தால் வாங்கி விட முடியும்; பணத்தின் பரமான(யுனிவர்சல்)—-எல்லை இல்லாத—- ‘தன்மை ‘ இது; ஆனால், நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ அவ்வளவுக்கு உரிய சரக்குகளைத்தாம் நாம் வாங்கிட முடியும்; பணத்தின் வரம்பான—-ஓர் எல்லைக்கு உட்பட்ட—- ‘அளவு ‘ இது! என்று அவருக்கு நான் விளக்கம் அளித்தேன்.
அவ்வளவு ஏன், பணத்தின் சுற்றோட்டம் பற்றிய விளக்கங்களை மிகவும் அருமையாகத் தந்து இருக்கின்ற இராம கி கூட, அந்தச் சுற்றோட்டத்திற்கு அடியில் அமைந்து கிடக்கின்ற உள்ளோட்டத்தினை வினயமாக எடுத்துக் கொண்டு இருப்பதாக நமக்குத் தெரிய வில்லையே!
குறிப்பிட்ட விகிதங்களில் கைமாற்றிக் கொள்ளப் படுகின்ற சரக்குகளுக்கு அடியில்—-கைமாற்றின் சமன்மையினை அளவிடுகின்ற வகையில்—- அமைந்து கிடப்பது எது ? என்பதனைக் கணக்கில் அவர் எடுத்துக் கொண்டு இருந்து இருக்க வேண்டாமா ?
அரிஸ்ட்டாட்டிலும் இராம கி-யும்
தாம் உற்பத்தித்த 5 கட்டில்களைக் கொடுத்து, அவற்றிற்குக் கைமாற்றாக ஒரு சிறிய வீட்டினைப் பெற்றுக் கொண்டு இருந்தாராம் ஒருவர். 5 கட்டில்களையும் 10,000 ரூபாய்க்கு விற்று விட்டு, அந்தப் பணத்தினை கொடுத்து ஒரு வீட்டினை ஒருவர் வாங்கிக் கொண்டு இருந்தார் என்றும் இதனை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், விசயம் அது வல்ல!
இந்தக் கைமாற்று நடவடிக்கையினைப் பார்த்துக் கொண்டு இருந்த அரிஸ்ட்டாட்டில் கூறினாராம்: இப்படி ஒரு கைமாற்று நடந்திடவே முடியாது என்று; ஏனென்றால், இந்த இரண்டு சரக்குகளுக்கும் இடையே சமன்மை எதுவும் இல்லை என்று; எனினும், இது நடக்கிறது, ஆனால், எப்படி என்றுதான் புரிய வில்லை என்று! கார்ல் மார்க்ஸ் கூறுகிறார்.
இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அரிஸ்ட்டாட்டிலுக்கு ஏற்பட்டு இருந்த ஐயப்பாட்டினைக் கூட தீர்த்து வைத்திட முயலாமல், பணத்தினப் பற்றி மேலோட்டமாக இராம கி இன்று எழுதிக் கொண்டு இருப்பது, கடந்த காலத்துச் சிந்தனை வளர்ச்சிகளை அவர் புறக்கணித்து விட்டு இருக்கின்ற ஒரு பொருட் குற்றம் ஆகிடாதா ? இதற்கு விளக்கம் அளித்திட வேண்டிய பொறுப்பு இராம கி-க்கு உண்டு; வரவேற்பதற்கு என் போன்ற வாசகர்களும் உண்டு.
குறிப்பிட்ட அளவுகளில் கைமாற்றிக் கொள்ளப் படுகின்ற சரக்குகளுக்கு இடையே ‘அளவு முறையான ஒரு சமன்மை ‘ இருந்திட வேண்டும் என்றால், அந்தச் சமன்மையின் ‘அளவை ‘ என்ன ? என்பதுதான் முக்கியமான கேள்வி.
சிவகாமியின் கலை மனோ லயம்
‘கலை மனோ லயம் ‘ என்னும் சொல்லாட்சியினைக் கம்பர் பயன் படுத்தி இருப்பதாகத் தமிழ் லெக்சி:கன் கூறுகிறது. ஆனால், அவருக்கு முன்னர் வேறு யாரேனும் இதனைப் பயன் படுத்தி இருந்து இருக்கக் கூடுமா ? என்பது நமக்குத் தெரிய வில்லை.
எனினும், சம்ஸ்க்ருதம் போல் தோன்றுகின்ற இந்தச் சொல்லாட்சி, ‘கலை ‘ + ‘மனம் ‘ + உல்லாயம்–உல்லாசம் என்னும் சொற்களுடன் தொடர்பு உடைய ‘உலயம் ‘ என்னும் தமிழ்ச் சொற்களின் ஒரு கூட்டாக்கம்தான் ஆகும்.
அக்டோபர், 2003 புதிய கோடாங்கியின் பின் அட்டையில் ஓர் ஓவியம் வெளி வந்து இருந்தது:
ஓர் ஆடு; அதன் வயிற்றிற்குள் ஓர் இலை!
இதில் வியப்பு என்ன வென்றால், அந்த இலையோ முழுமையாக
—-கொஞ்சமும் சிதையாமல்—-இருந்தது.
ஆடு-மாடுகளின் வளர்ப்பில் தொடர்பே இல்லாதவர்கள் இந்த ஓவியத்தை எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்பது நமக்குத் தெரியாது.
ஆனால், இந்த ஆடும் உருப்படாது; இதை வளர்ப்பவனும் உருப்பட மாட்டான்; என்றுதான் ஆடு வளர்ப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்வார்கள்.
இரை ஆகாத இலை; வயிறு நிரம்பாத ஆடு!
வேறு எப்படித்தான் இதனை யாரும் புரிந்து கொள்ளவும் முடியும் ?
ஆனால், மனிதர்கள் என்னவோ பல் வேறு வகையான உணவினை உண்டு கொண்டும் உண்ட உணவு செரித்திட வில்லை என்றால் அதற்காகக் கவலைப் பட்டுக் கொண்டும்தாம் வருகிறார்கள். ஆனால், இதற்கு சிவகாமி அளிக்கின்ற விளக்கம் என்ன தெரியுமா ?
இலைக்குச் சேதம் எதுவும் ஏற்படாமல் அதனை உண்டு ஆடு உயிர் வாழ்ந்து விடுகிறதாம்!
மேல் தட்டுச் சிற்றுடைமைச் சிந்தனையின் உச்சக் கட்டம் இது எனலாம்!
இத் தகு கற்பனைகளில் உள்ளம் உறைந்து போய் விடுகின்ற கதை-கவிஞர்கள் எல்லாம், பாமர மக்களின் மேல் தாங்கள் கொண்டு இருக்கின்ற அன்பினை வெளிப் படுத்திப் பெரியவாளாகத் தங்களை உயர்த்திக் கொள்வதற்காக, தங்கள் ‘கலை மனோ லயங்களை ‘ அவிழ்த்து விடத் தொடங்கி விடுவதுதான் இதில் வேடிக்கை!
வெறுங் கதைகளினாலும் ஆடல்-பாடல்களினாலும் ஆக்கப் பட்டு இருப்பது அல்லவே, வாழ்க்கை!
இனி, ஜெய மோகனின் ஆசிரியருக்கு நாம் வருவோம்.
(தொடரும்)
(ஜெயமோகனின் கடிதம் பற்றிய ஒரு விமர்சனத் தொடர்)
- தன்னம்பிக்கை
- தெற்காசியத் திரைப்பட விழா – படங்களை அனுப்ப வேண்டுகோள்
- கடிதம் ஜூன் 17,2004
- ஆட்டோகிராஃப் ‘தலை சாய்ந்து போனால் என்ன செய்யலாம் ‘
- சேதி கேட்டோ..
- பஞ்சத்தின் உண்மை பேசும் புல்லர்களை பொசுக்கிட பொங்கி எழு தோழா, புறப்படு
- வெங்கட் சாமிநாதனுக்கு டொராண்டோ பல்கலைக்கழத்தின் இயல் விருது விழா
- என் பொழுதுகளில் இதுவும்..
- தமிழுக்குப் பெருமை
- நிழல் யுத்தம் பற்றி
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4
- திரைகடல் நாடியும் தேடு மின்சக்தி! [Energy from The Ocean Waves, Tides & Thermal Power]
- பிறந்த மண்ணுக்கு.. – 6 (கடைசிப் பகுதி)
- விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும்
- அவர்கள்
- கவிதைகள்
- ஆயுட் காவலன்
- வீடு திரும்புதல்
- நிழல் பாரங்கள்
- நிகழ்வெளியின் காட்சிகள்
- உறங்கட்டும் காதல்
- கவிக்கட்டு – 11 : எங்கே மனிதம் ?
- கடலைக்கொல்லை
- அன்புடன் இதயம் – 21 – பிரிகின்றேன் கண்மணி
- மின்மினி பூச்சிகள்
- செல்பேசிகளைத் தெரிந்து கொள்வோம்!
- டயரி
- சித்திரவதை
- பாசமா ? பாசிசமா ?
- மலை (நாடகம்)
- தனக்கென்று வரும் போது..!
- மஸ்னவி கதை — 10 :அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- வெற்றுக் காகிதங்கள்
- தென்னையும் பனையும்
- சாயம்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 24
- அஞ்சலைப் பாட்டி
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)
- வாரபலன் – ஜூன் 17,2004 – டில்லிக்குப் போன கவுன்சிலரு , ஆயிரம் இதழ் கண்ட கலா கெளமுதி , வாத்துக்களின் வட்டார வழக்கு , அஞ்சலி : காச
- கவிதைகள்
- நம்பிக்கை
- குழந்தை மனது
- உடன் பிறப்பு…
- தமிழவன் கவிதைகள்-பத்து
- தீர்மானம்
- இல்லம்
- தூரம்
- அப்பாவுக்கு…!!!
- மிராண்டாவைப் பார்த்து மிரண்டவர்கள்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9
- நெய்தல் நிலத்துக்காாி!