சோதிப் பிரகாசம்
மேல் தட்டு மற்றும் கீழ்த் தட்டுச்
சிற்றுடைமை யாளர்கள்
உணவு, உடை, உறையுள், கல்வி, முதலிய எவற்றிற்கும் பஞ்சம் இல்லாதவர்கள் மேல் தட்டுச் சிற்றுடைமை யாளர்கள்!
தொடர்ச்சியான வருமானம்—-தரமான கல்வி—-பொழுது-போக்குகளில் ஆர்வம்—-என வசதியான ஒரு மேல் தட்டு வாழ்க்கையினை அமைத்துக் கொண்டு இருப்பவர்கள் இவர்கள்!
தங்களை விடவும் அதிகமான வாழ்க்கைத் தரத்தினையும் வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு வருபவர்களைக் கண்டால் எப் பொழுதும் இவர்களுக்கு ஒரு பொறாமை! அதே நேரத்தில், பொறாமைப் படுவது சில்லரைத் தனமான ஒரு பான்மை என்பதும் இவர்களுக்குத் தெரியும்.
எனவே, ஒரு பொதுமைச் சமுதாயம் மலர்வதிலும் ஒரு பொதுமை வாதியாக ஒருவன் இருப்பதிலும் எந்தத் தவறும் இல்லை என்று அவ்வப் போது வசனங்களை உதிர்த்துத் தள்ளிக் கொண்டு இவர்கள் வருவார்கள். எனினும், ஸ்தாலினிசத்திற்கு அப்பால் இவர்களது பொதுமை வாதம் மலர்வது இல்லை; அத் தகைய தேடல்களும் இவர்களிடம் இருப்பது இல்லை; மார்க்சியம் இவர்களுக்குத் தேவையும் இல்லை.
சமுதாயத்தின் அதிகாரப் பீடங்களில் எல்லாம் வேண்டியவர்கள் என்று ஒரு சிலரேனும் இவர்களுக்கு இல்லாமல் இருப்பது இல்லை.
இவர்களுள், அதிகாரிகளாக இருப்பவர்கள் தங்கள் தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு எங்கும் எப் பொழுதும் மேல் மட்டங்களில் ஒரு கதவு திறந்தே இருக்கும்; எழுத்தாளர்களாக இருப்பவர்களுக்கு எல்லாப் பத்தரிகைகளிலும் எப் பொழுதும் ஓர் இடம் இருக்கும். அவரவர் வசதிகளுக்கு ஏற்ற பிற வாய்ப்புகளும் மற்றவர்களுக்குக் கிட்டாமல் இருப்பது இல்லை.
பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற திடிர் மாற்றங்களையோ ஏற்ற-இறக்கங்களையோ தாங்கிக் கொள்வதற்கு இவர்களால் முடியாது என்பதால், உலகச் சந்தைப் போட்டிகளை வெறுப்பவர்களாகவும் சமுகாண்மை என்பதை அரசு முதலாண்மையாகப் புரிந்து கொண்டு அதற்கு ஆதரவு அளித்துக் கொண்டு வருபவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள்.
ஆனால், கீழ்த் தட்டுச் சிற்றுடைமையாளர்களின் கதையோ முற்றிலும் வேறு ஆனது.
பஞ்சம் இல்லாமல் வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருபவர்கள் மேல் தட்டுச் சிற்றுடைமையாளர்கள் என்றால், எப் பொழுதும் பஞ்சத்தில் அடி பட்டுக் கொண்டே வருபவர்கள் கீழ்த் தட்டுச் சிற்றுடைமையாளர்கள்!
தமது சொந்த நிலங்களிலோ அல்லது கைத் தொழில்களிலோ தாங்களே உழைத்துப் பிழைத்துக் கொண்டு வருபவர்கள் இவர்கள்!
கூலிக்கு ஆட்களை அமர்த்தி வேலை வாங்குவதற்கு இவர்களால் முடியாது என்பதால், தங்களுக்குத் துணையாகத் தங்கள் மனைவி-மக்களை வேலைக்கு இவர்கள் அமர்த்திக் கொள்வார்கள்.
இவர்களின் மனைவிமார்களுக்கோ இதனால் இரட்டிப்பு வேலை! வீட்டிலும் வேலை; வெளியிலும் வேலை! இவர்களது குழந்தைகளின் உழைப்பும் இவர்களுக்குத் தேவைப் படுவதால், அவர்களின் கல்வியைப் பற்றி இவர்கள் கவலைப் படுவது இல்லை.
வாழ்க்கையில் நிறைவு என்பது எப் பொழுதும் இவர்களுக்கு ஏற்பட முடிவது இல்லை. ஏனென்றால், முதலாண்மையின் வளர்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாகச் சீர் அழிந்து கொண்டு வருபவர்கள் இவர்கள்!
வாழ்க்கையில் எப் பொழுதும் இவர்களுக்கு ஒரு நெருக்கடி; பித்துப் பிடித்து விட்டது போன்ற ஒரு மன நிலை! மத வெறி, சாதி வெறி, போன்ற எல்லா வெறிகளுக்கும் விரைவில் இரையாகி விடுபவர்களும் இவர்கள்தாம்.
சரி, கதை எதற்கு ? விசயத்திற்கு நாம் வருவோம்.
(முதலாண்மையின் வளர்ச்சியில் சிற்றுடைமை யாளர்கள் இடையே ஏற்பட்டுக் கொண்டு வந்திடக் கூடிய மாற்றங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு விரும்புபவர்கள், லெனின் நூல் திரட்டு, தொகுதி ஒன்று முதல் மூன்று வரை படித்துப் பார்த்துக் கொள்ளலாம்; முக்கியமாக, ‘ருஷ்யாவில் முதலாண்மையின் வளர்ச்சி ‘ என்னும் நூல் முழுவதுமாக அடங்கி உள்ள மூன்றாவது தொகுதி!)
சுவனத் தரங்கள்
பூசி மெழுகி அழகு படுத்தப் பட்ட சிந்தனைகள் எல்லாம் சிற்றுடைமைச் சிந்தனைகள்தாம் ஆகும், குறிப்பாக, மேல் தட்டுச் சிற்றுடைமைச் சிந்தனைகள்தாம் ஆகும். மாயமான சிந்தனை யாளர்களாக மட்டும் இன்றிப் பகட்டுக் காரச் சிந்தனை யாளர்களாக இருப்பவர்களும் இவர்கள்தாம் ஆவர்.
புதுமை வாதிகளாக இருக்கின்ற இவர்களுக்குப் பழைமை எண்ணங்கள் எப்பொழுதும் நெஞ்சத்தில் கனன்று கொண்டே இருக்கும்; பெண் விடுதலை பற்றிப் பேசுகின்ற இவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும்—தங்கள் வீட்டுப் பெண்களுக்கு மட்டும் அது பொருந்தாது என்று!
முற்போக்கில் பிற்போக்கு; புரட்சியில் எதிர்ப் புரட்சி; நம்பிக்கையில் அவ நம்பிக்கை; என முரண் பட்ட போக்குகளின் மையமாக இருப்பவர்கள் இவர்கள்!
எனவே, வெற்றியில் முடிகின்ற கதைகளை விட—திரைப் படங்களை விட—-தோல்வியில் முடிகின்ற கதைகள்தாம்—-த்ிரைப் படங்கள்தாம்—-இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்; தத்துவங்களின் முழுமையினை விட அரை-குறைகள் மட்டும்தாம் இவர்களுக்குப் பிடிக்கும்; தெளிவினை விட மாயங்கள்தாம் பிடிக்கும்!
ஆனால், கீழ்த் தட்டுச் சிற்றுடைமை யாளர்களின் சுவனத் தரமோ இதற்கு நேர்-மாறானது; மூடத் தனமானது என்றாலும் மாயம் இல்லாதது; தெளிவு இல்லாதது என்றாலும் குழப்பம் இல்லாதது; சில சமயங்களில் இழிவும் ஆனது!
ஜெய மோகனின் தமிழ்ச் சூழல்
ஜெய மோகன் எதிர் பார்க்கின்ற தமிழ்ச் சூழல், மேல் தட்டுச் சிற்றுடைமைப் பான்மைகள் மேவி நிற்கின்ற ஒரு பான்மைச் சூழல்; அதே நேரத்தில் இதுவோ தமிழ் நாட்டில் இல்லாத ஒரு சூழல்!
மேல் தட்டுச் சிற்றுடைமையாளர்களிடம்—-
மத வெறி நிறைந்து இருக்கும்; ஆனால், வெளியில் அதனை அவர்கள் காட்டிக் கொள்ள மாட்டார்கள்; தக்க சமயங்களில் மறைவாக அதனை ஆதரித்து நிற்பதற்கும் அவர்கள் தயங்கிட மாட்டார்கள்!
இவர்களுள், கடவுள் மறுப்பாளர்களிடம் கூட சாதி வெறி நிறைந்து இருக்கும்; வெளியில் அதனை அவர்கள் காட்டிக் கொள்வது இல்லை என்ற போதிலும், தக்க நேரங்களில் அதற்காகத் தந்திரமாகக் குரல் கொடுப்பதற்கு அவர்கள் தயங்குவது இல்லை.
இம் மாதிரியான ஒரு சூழல் மலையாளத்தில் அல்லது வேறு பிற மொழிகளில் இருக்கலாம்; ஃப்ரான்ஸ் போன்ற பிற ஈரோப்பிய நாடுகளிலும் இருக்கலாம்; ஆனால், தமிழில் இல்லை!
ஏனென்றால், தமிழ்ச் சூழலோ கீழ்த் தட்டுச் சிற்றுடைமையாளர்கள் மேவி நிற்கின்ற ஒரு சூழல்!
மத வெறி, சாதி வெறி, என்று எந்த வெறியாக இருந்த போதிலும், வெட்கம் இல்லாமல் அதனை இவர்கள் வெளிக் காட்டிக் கொள்வார்கள்.
இவர்களுள், பார்ப்பனியத்தால் சூத்திரர்களாக வரையறுக்கப் பட்டு இருக்கின்ற சிலருக்குத் தலித் மக்கள் மீது எப் பொழுதும் ஒரு பொறாமை; வெறியும் கூட!
கற்பழிப்பு என்பது இழிவானது என்பதால் பெண்களைக் கேவலப் படுத்துவதற்கு அதனைத்தான் ஆயுதமாக இவர்கள் பயன்படுத்துவார்கள்; அதற்காகத் தங்களுக்குள் இவர்கள் பெருமைப் பட்டும் கொள்வார்கள்!
மலத்தை உண்பது இழிவானது என்பதால், தலித்துகளைக் கேவலப் படுத்துவதற்கு அவர்கள் வாயில் மலத்தைதான் இவர்கள் திணிப்பார்கள்; அதன் மூலம், மலத்தை விட இவர்கள் இழிந்தவர்கள் என்பதை வெட்கம் இல்லாமல் வெளிக் காட்டியும் கொள்வார்கள்!
தமிழ்ச் சூழலில்—-
ராணி, தேவி, முதலிய பத்தரிகைகளைப் படிப்பவர்கள் அதிகம்;
கருணா நிதியாரின் கதை-வசனங்களைச் சுவனிப்பவர்கள் அதிகம்;
ஏமாற்றுபவர்களை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்—-உரிய வசனங்களுடன் ஏமாற்றுபவர்களாக அவர்கள் இருந்தால்!
ஊழல் காரர்களையும் இவர்களுக்குப் பிடிக்கும்; உல்லாசமாக வாழ்ந்து காட்டுபவர்களாக அவர்கள் இருந்தால்!
கூடவே, ஆலை உழைப்பாளர்களின் சமுதாயத் திறலும் தமிழகத்தில் சற்று அதிகம் என்பதால், மாய்மையான—-குழப்பமான—-அவ நம்பிக்கையான—-கதை-கவிதைகளுக்குத் தமிழகத்தில் அவ்வளவாக வரவேற்பு இருப்பது இல்லை.
‘அவன் சொல்கிறான்; இவன் செய்கிறான்; ‘ என்று மூட நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு வந்து இருக்கின்ற கதை-வசனங்களைச் சில காலம் பொறுத்துக் கொண்டு வந்து இருந்த திரைப் படச் சுவனர்கள், தனது வேலைக் காரனாக அவனை இவன் காட்டுவற்கு முற்பட்டு விட்ட உடன், இவனால் உருவான அனைத்து மூடங்களையும் இமய மலையின் உச்சிக்கே விரட்டி அடித்து விட வில்லையா ?
ஆக, ஜெய மோகன் விரும்புகின்ற ஒரு சூழலாகத் தமிழ் சூழல் என்றும் இருந்திட முடியாது என்பது தெளிவு. தமிழகத்து வீதிகளிலே புதியது ஒரு சூழலினை மேடையாக அமைத்து, தமது நாடகங்களை அதில் நடத்திக் காட்டுவதற்கு ஜெய மோகன் முயல்வார் என்றால், அவர் எதிர் பார்க்கின்ற விளைவுகளை எதிர் பார்க்கின்ற அளவுக்கு அவர் அடைந்து விட முடியாது என்பதும் நிச்சயம்!
இனி, ஜெய மோகனின் பிற வாதங்களுக்குள் நாம் நுழைவதற்கு முன்னர், ‘கலை மனோ லயம் ‘ என்பதனைச் சற்றே அனுபவித்து நாம் பார்த்து விடுவோம்.
22-5-2004
(தொடரும்)
sothipiragasam@lycos.com
- இந்தியாவில் பூச்சிக்கொல்லிகள்
- கடிதம் ஜூன் 10, 2004
- கடிதங்கள் – ஜூன் 10,2004
- ஆட்டோகிராஃப் ‘மூத்தவள்(ன்) நீ கொடுத்தாய் ‘
- நியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா
- நியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3
- வண்ணாத்திக்குளம்-குறுநாவல்-ஒரு வாசகாின் கண்டோட்டம்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)
- இசை கேட்டு…
- சமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா
- கடிதம் ஜூன் 10, 2004
- உலகத் தமிழ் குறும்பட/ஆவணப்பட விழா-கனடா டோரோண்டோவில்
- நஞ்சில் விளையும் பருத்தி
- பூச்சிக்கொல்லி பாதிப்புகள்
- வாழ்வைப் பறிக்கும் பூச்சிக்கொல்லிகள்
- மல மேல இருக்கும் சாத்தா.
- கவிதைகள்
- எலக்ட்ரான் எமன்
- வண்ணத்துப்பூச்சி விளையாட்டு….
- கடிதம் – ஜூன் 10,2004
- கடிதம் ஜூன் 10 ,2004
- கடிதம் ஜூன் 10,2004
- அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்
- புதிய உயிரினம் பிறப்பதை அறிவியலாளர்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்
- சென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)
- வாரபலன் – ஜூன் 10,2004 – தெருவில் மலரும் கலைகள் , மறந்துடுங்க வேறே கூட்டணி , வேட்டி போச்சு வேகம் வந்துச்சு
- மனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார்
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23
- பெண் ஒன்று கண்டேன்
- பூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்
- போர்வை
- முகமிருக்கையில் முகமூடி எதற்கு ?
- சூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்
- கடிக்காமல் விடுவேனோ ?
- தாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை
- தேனீ – அடை கட்டுமானமும் தற்காப்பும்
- பாரதத்தில் முன்னேறி வரும் பூதக் காற்றாடி யந்திர மின்சக்தித் துறைகள் [Giant Wind Power Development in India]
- நிழல்
- பறத்தல் இதன் வலி
- கவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே !
- நாத்திக குருக்கள்
- அம்மாவின் கடிதம்!
- தீந்தழல் தோழியொருத்தி…!!!
- தமிழவன் கவிதைகள்-ஒன்பது
- பிறந்த மண்ணுக்கு – 5