ரேவதி மணியன்
இந்த வாரம் यदि – तर्हि ( yadi – tarhi)அதாவது If – then (ஆல் – பிறகு) என்ற நிபந்தனைக்கு உட்பட்ட (Conditional) வாக்கியங்களைப் பற்றிப் பார்ப்போம். உதாரணமாக “यदि समयः अस्ति तर्हि अहम् आगच्छामि ! ” (yadi samayaḥ asti tarhi aham āgacchāmi |) ” நேரம் இருந்தால் பிறகு நான் வருகிறேன் “ என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். இதில் இரண்டு பாகங்கள் இருக்கின்றன.
1. समयः अस्ति ! (samayaḥ asti ) – कारणवाक्यम् (kāraṇavākyam)
2. अहम् आगच्छामि ! (aham āgacchāmi ) – कार्यवाक्यम् (kāryavākyam)
இதுபோல ஒரு வாக்கியத்தில் காரணம் மற்றும் செயல் இரண்டும் இருக்குமேயானால் ”यदि – तर्हि” (yadi – tarhi)உபயோகிக்கவேண்டும்.
’यदि – तर्हि’ க்கு பதிலாக ‘चेत् , नोचेत्’ (இருந்தால், இல்லையென்றால் )உபயோகப்படுத்தலாம். அர்த்தம் மாறாது. எப்போதும் வாக்கியத்தில் ‘यदि’ என்பதை உபயோகித்தால் கண்டிப்பாக ‘तर्हि’உபயோகிக்க வேண்டும். அதே வாக்கியத்தில் ‘चेत्’ என்பதை உபயோகிக்கக்கூடாது. இதுபற்றிப் பிறகு விரிவாகப் படிப்போம்.
अभ्यासः 1 (abhyāsaḥ 1) பயிற்சி 1
अत्र वाक्यद्वयं लिखितम् अस्ति ! ‘यदि – तर्हि’ इति योजयित्वा एकं वाक्यं कृत्वा लिखतु : – (atra vākyadvayaṁ likhitam asti | yadi – tarhi iti yojayitvā ekaṁ vākyaṁ kṛtvā likhatu !)
இங்கு இரண்டு வாக்கியங்கள் எழுதப்பட்டு இருக்கிறது. ‘ஆல் – பிறகு’ என்பதுடன் இணைத்து ஒரே வாக்கியமாக எழுதவும்.
उदा : (udā) உதாரணம் –
विद्युत अस्ति ! दीपः ज्वलति ! (vidyut asti | dīpaḥ jvalati |)
மின்சாரம் இருக்கிறது . விளக்கு எரிகிறது.
यदि विद्युत अस्ति तर्हि दीपः ज्वलति ! (yadi vidyut asti tarhi dīpaḥ jvalati |)
மின்சாரம் இருப்பதால்(இருந்தால்) விளக்கு எரிகிறது.
1. स्नानं न करोति ! शरीरं मलिनं भवति ! (snānaṁ na karoti | śarīraṁ malinaṁ bhavati |)
குளிக்கவில்லை. உடல் அழுக்கடையும்.
2. कार्यालयस्य विरामः अस्ति ! चलनचित्रं पश्यामि ! (kāryālayasya virāmaḥ asti | calanacitraṁ paśyāmi |)
அலுவலக விடுமுறை. திரைப்படம் பார்க்கிறேன்.
3. आत्मविश्वासः अस्ति ! सर्वं सुलभं भवति ! (ātmaviśvāsaḥ asti | sarvaṁ sulabhaṁ bhavati |)
தன்னம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் சுலபமாக அமையும்.
4. सर्वे सत्कार्यँ कुर्वन्ति ! देशस्य उन्नतिः भवति ! (sarve satkāryaṁ kurvanti | deśasya unnatiḥ bhavati |)
அனைவரும் நல்ல காரியங்களைச் செய்கிறார்கள். நாட்டின் முன்னேற்றம் ஏற்படும்.
5. मूल्यं न्यूनम् अस्ति ! फलानि क्रीणामि ! (mūlyaṁ nyūnam asti | phalāni krīṇāmi |
விலை குறைவாக இருக்கிறது. பழங்கள் வாங்குகிறேன்.
6. भवति विपणिं गच्छति ! अहमपि आगच्छामि ! (bhavati vipaṇiṁ gacchati | ahamapi āgacchāmi |)
நீங்கள்(பெண்பால்) கடைக்குச் செல்கிறீர். நானும் கூட வருகிறேன்.
7. भवान् न पठति ! परीक्षायाम् उत्तीर्णः न भवति ! (bhavān na paṭhati | parīkṣāyām uttīrṇaḥ na bhavati |)
நீங்கள் (ஆண்பால்) படிக்கவில்லை. தேர்வில் வெற்றியடைய முடியாது.
8. छात्राः न सन्ति ! कथं पाठं करोमि ? (chātrāḥ na santi | kathaṁ pāṭhaṁ karomi ?)
மாணவர்கள் இல்லை. எப்படி பாடம் எடுப்பேன் ?
9. लोकयानं वेगेन न गच्छति ! समये तत्र न प्राप्नुमः ! (lokayānaṁ vegena na gacchati | samaye tatra na prāpnumaḥ |)
பேருந்து விரைவாகச் செல்லவில்லை. சரியான சமயத்தில் அங்கு சென்றடையமாட்டோம்.
अभ्यासः 2 (abhyāsaḥ 2) பயிற்சி 2
अधः शब्दद्वयं निर्दिष्टम् अस्ति ! पूर्वार्ध प्रथमशब्दम् , उत्तरार्ध द्वितीयशब्दं च प्रयुज्य ‘यदि – तर्हि’ युक्तानि लिखन्तु !
adhaḥ śabdadvayaṁ nirdiṣṭam asti | pūrvārdha prathamaśabdam uttarārdha dvitīyaśabdaṁ ca prayujya ’yadi -tarhi’ yuktāni likhantu |
கீழே இரண்டு வார்த்தைகள் உள்ளன. முதல் வார்த்தை, இரண்டாவது வார்த்தை இரண்டையும் ‘ஆல் – பிறகு’என்பதுடன் இணைத்து வாக்கியங்களை அமைக்கவும்.
उदा – निद्रा – शयनम् (nidrā – śayanam)
यदि निद्रा आगच्छति तर्हि शयनं करोतु ! (yadi nidrā āgacchati tarhi śayanam karotu |)
தூக்கம் வந்தால் படுத்துறங்கு.
1. ज्वरः – औषधम् (jvaraḥ – auṣadham) காய்ச்சல் – மருந்து
———- ———— अस्ति ———— ————– पिबतु !
2. बुभुक्षा – भोजनम् (bubhukṣā – bhojanam) பசி – சாப்பாடு
———- ———— ———- —————– ————— करोतु !
3. पिपासा – जलम् (pipāsā – jalam) தாகம் – தண்ணீர்
—————– —————– ————— ————- ———— पिबतु!
4. धनम् – उद्योगः (dhanam – udyogaḥ) பணம் – வேலை
———— —————- आवश्यकं ———— ————- करोतु !
5. शान्तिः – आश्रमः (śantiḥ – āśramaḥ) மன அமைதி – ஆசிரமம்
———– ————— आवश्यकी ——— ————– गच्छतु !
6. चाकलेहः – आपणः (cākalehaḥ – āpaṇaḥ) சாக்கலேட் – கடை
————- ———— आवश्यकः ——– ————– गच्छतु !
7. तृप्तिः – समाजसेवा (tṛptiḥ – samājasevā) மனநிறைவு – சமூக சேவை
————– ———— आवश्यकी ———– —————- करोतु !
அடுத்த வாரம் சமஸ்கிருதத்தில் சாதாரணமாக பேச்சு வழக்கில் உபயோகப்படுத்தக்கூடிய ‘ च, एव, इति, अपि’ ஆகியவைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
- நாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)
- பாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை
- கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31
- புள்ளிகளும் கோடுகளும்.
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- மரத்தின் கௌரவம்
- இரண்டு கவிதைகள்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு
- மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3
- அதையும் தா
- அப்பாவின் வாசம்
- அதிகமாகும்போது
- நினைவுகள்
- பெண்ணே நீ …..
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)
- ‘மம்மி’ தாலாட்டு!
- மீள்தலின் இருப்பு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)
- தாங்கல்
- செம்மொழித் தமிழின் தனித்தன்மை
- ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை
- “நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்
- கல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4
- மரம் மறப்பதில்லை
- யட்சியின் குரல்
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்திரெண்டு
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)
- வெளியேறுதலுக்குப் பின்
- ப.மதியழகன் கவிதைகள்
- பதிவிறக்கக் கனவு
- சாளரங்கள்
- வெயில் நிலவு!
- அவள் நிறையும் கிறுக்கல்கள்
- அவள்
- முடிச்சு
- விடுபட்டவை
- இந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]
- சங்க காலக் குலக்குறி அடையாளங்கள்
- கொள்ளை..