ரேவதி மணியன்
இந்த வாரம் कथम् ? (katham ?) எப்படி ? (How ?)என்ற வினாச்சொல்லை எப்படி உபயோகிக்கவேண்டும் என்பதைப்பற்றி விரிவாகக் காண்போம்.
उदा – अश्वः कथं गच्छति ? (aśvaḥ katham gacchati ?)
अश्वः शीघ्रं गच्छति ! (aśvaḥ śīghraṁ gacchati !)
உதா – குதிரை எப்படிச் செல்கிறது ?
குதிரை வேகமாகச் செல்கிறது.
उदा – कूर्मः कथं गच्छति ? (kūrmaḥ kathaṁ gacchati ?)
कूर्मः मन्दं गच्छति ! (kūrmaḥ mandaṁ gacchati !)
உதா – ஆமை எப்படிச் செல்கிறது ?
ஆமை மெதுவாகச் செல்கிறது.
उदा – सिंहः कथं गर्जति ? (siṁhaḥ katham garjati ?)
सिंहः उच्चैः गर्जति ! ( siṁhaḥ uccaiḥ garjati !)
உதா – சிங்கம் எப்படி கர்ஜிக்கிறது ?
சிங்கம் சத்தமாக கர்ஜிக்கிறது.
उदा – बालिका कथं गायति ? (bālikā katham gāyati ?)
बालिका शनैः गायति ! (bālikā śanaiḥ gāyati !)
உதா – சிறுமி எப்படிப் பாடுகிறாள் ?
சிறுமி மெதுவாக (சப்தம் குறைவாக)ப் பாடுகிறாள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்களை உரத்துப் படிக்கவும். பின்னர் शीघ्रं , मन्दं , उच्चैः , शनैः ஆகியவைகளை உபயோகித்து கீழேயுள்ள கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்யவும்.
1. सः ———————- भोजनं करोति ? (saḥ ———– bhojanaṁ karoti |)
அவன் ————– சாப்பிடுகிறான்.
2. गोपालः ———— गायति ! (gopālaḥ ———— gāyati!)
கோபால் —————- பாடுகிறார்.
3. मम माता —————– कार्यं करोति ! (mama mātā ————- kāryaṁ karoti|)
என்னுடைய அம்மா ———— வேலை செய்கிறார்.
4. भवती ———————- सम्भाषणं करोतु ! (bhavatī ———– sambhāṣaṇaṁ karotu |)
நீர் (நீங்கள்) ———— பேசவும்.
5. न शृणोमि, कृपया किञ्चित् ———— वदतु ! (na śṛṇomi kṛpayā kiñcit ———— vadatu |)
எனக்குக் கேட்கவில்லை, ————- பேசு !
6. ————– प्रस्थानं करोतु , विलम्बः भवति ! (———- prasthānaṁ karotu vilambaḥ bhavati |)
—————– புறப்படு. தாமதம் ஆகிவிடும்.
7. इतोऽपि समयः अस्ति , ————- भोजनं करोतु ! (ito’pi samayaḥ asti —————– bhojanaṁ karotu |)
இன்னும் நேரம் இருக்கிறது. —————- சாப்பிடு.
8. एतत् लोकयानं सर्वदा ———– गच्छति ! (etat lokayānaṁ sarvadā ————- gacchati |)
இந்தப் பேருந்து எப்போதும் ————- செல்கிறது.
9. अत्र शिशु: निद्रां करोति , कृपया —————– वदतु ! (atra śiśuḥ nidrāṁ karoti , kṛpayā
————- vadatu |)
இங்கு குழந்தை தூங்குகிறது. ———— பேசு !
சாதாரணமாக நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? (भवान् कथम् अस्ति ?)என்று கேட்டால் நன்றாக , மிக நன்றாக இருப்பதாக பதில் சொல்கிறோம் அல்லவா. இதுபோல कथम् ? என்ற வினாச் சொல்லுக்கு கேள்வியின் தன்மையைப் பொறுத்து எவ்வாறெல்லாம் பதில் அமையும் என்று பார்ப்போம்.
उदा – आरोग्यं कथम् अस्ति ? (ārogyam katham asti ?)
आरोग्यं सम्यक् अस्ति ! (ārogyam samyak asti |)
உதா – ஆரோக்கியம் எப்படி இருக்கிறது ?
ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது.
उदा – वातावरणं कथम् अस्ति ? (vātāvaraṇaṁ katham asti ?)
वातावरणं समीचीनम् अस्ति ! ( vātāvaraṇaṁ samīcīnam asti !)
உதா – வானிலை எப்படி இருக்கிறது ?
வானிலை நன்றாக இருக்கிறது.
उदा – बालकः कथं धावति ? (bālakaḥ kathaṁ dhāvati ?)
बालकः सम्यक् धावति ! (bālakaḥ samyak dhāvati |)
உதா – சிறுவன் எப்படி ஓடுகிறான்?
சிறுவன் நன்றாக ஓடுகிறான்.
उदा – एतत् वस्त्रं कथम् अस्ति ? (etat vastraṁ katham asti ?)
एतत् वस्त्रं उत्तमम् अस्ति ! (etat vastraṁ uttamam asti ! )
உதா – இந்த துணி எப்படி இருக்கிறது ?
இந்த துணி நன்றாக இருக்கிறது .
उदा – भीमसेनजोशी कथं गायति ? (bhīmasenajośī kathaṁ gāyati ?)
भीमसेनजोशी सम्यक् गायति ! (bhīmasenajośī samyak gāyati !)
உதா – பீமசேனஜோஷீ எப்படிப் பாடுகிறார் ?
பீமசேனஜோஷீ நன்றாகப் பாடுகிறார்.
उदा – तेण्डुल्कर् कथं क्रीडति ? (teṇḍulkar kathaṁ krīḍati ?
तेण्डुल्कर् सम्यक् क्रीडति ! (teṇḍulkar samyak krīḍati !)
உதா – டெண்டுல்கர் எப்படி விளையாடுகிறார்?
டெண்டுல்கர் நன்றாக விளையாடுகிறார்.
இனி கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைக்கு வினாவைத் தொடுப்போமா?
उदा – उद्यानं सुन्दरम् अस्ति ! (udyānaṁ sundaram asti |)
उद्यानं कथम् अस्ति ? (udyānaṁ katham asti ?)
உதா – பூங்கா அழகாக இருக்கிறது .
பூங்கா எப்படி இருக்கிறது ?
இதுபோலவே மற்ற பதில்களுக்கும் கேள்வியை அமைத்து உரத்துப் படிக்கவும்.
1. भोजनम उत्तमम् अस्ति ! (bhojanam uttamam asti |) ———————————————————— ?
சாப்பாடு நன்றாக இருக்கிறது.
2. एतत् चलनचित्रं सम्यक् अस्ति ! ( etat calanacitraṁ samyak asti |) ———————————————–?
இந்த திரைப்படம் நன்றாக உள்ளது.
3. तत पुस्तकम् उत्तमम् अस्ति ! ( tat pustakam uttamam asti |) ———————————————–?
அந்த புத்தகம் நன்றாக உள்ளது.
4. सः सर्वं कार्यं सम्यक् करोति ! ( saḥ sarvaṁ kāryaṁ samyak karoti |) ———————————————-?
அவன் அனைத்துக் காரியங்களையும் நன்றாக செய்கிறான்.
5. रामायणं बहु विस्तृतम् अस्ति ! ( rāmāyaṇaṁ bahu visṛtam asti |) ————————————————-?
ராமாயணம் மிகவும் விரிவாக இருக்கிறது.
மீண்டும் இந்த வாரத்தின் புதிய வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொள்வோமா?
शीघ्रं (śīghraṁ) – விரைவாக
मन्दं (mandaṁ) – வேகம் குறைவாக
उच्चैः (uccaiḥ) – சத்தமாக
शनैः (śanaiḥ) – மெதுவாக
सम्यक् (samyak) – நலமாக, நன்றாக
समीचीनम् (samīcīnam) – நலமாக, மிகநன்றாக
उत्तमम् (uttamam) – சிறப்பாக, நன்றாக
सुन्दरम् (sundaram) – அழகாக
இவைகளை அன்றாட வாழ்வில் வீட்டிலும், நண்பர்களிடம் பேசும்போதும் உபயோகப்படுத்தக் கற்றுக்கொள்ளவும்.
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)
- தை மகளே வருக! தைரியமே தருக.
- ”கனவு” இலக்கிய கூட்டம்
- ” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட்டுரைகள் நூல்:
- இவர்களது எழுத்துமுறை – 23 நகுலன்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- கூப்பிட்டும் கேட்டிராத குரல்கள்..
- பீல்சமூக மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்
- கடவுளும் கண்ணீர்த் துளிகளும்
- கண்மலாரத கடவுள்
- தொழில் தெய்வம்..
- ஓர் குரல்
- தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்
- சலனமற்றுக் கரையும் துயரங்கள்
- சொல்லெறி
- கருவெட்டா தமிழ் அணுக்கள்!
- கவிதையுரை
- மௌனமாய் மரணிக்கும் கதைகள் ….
- மழை நிலை
- எந்த சாமியிடம்
- பிரசவ வைராக்கியம்…
- மாறித்தான் போயிருக்கு.
- வாள்
- நோன்பு
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -13
- தோழி
- எங்கே அது..?
- ஒரு கவிதை:
- குடியேறியவர்களின் தேசமா இந்தியா?
- நலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்
- அஞ்சலி : கலைஞன் மாசிலாமணி – மழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்
- பயணம்
- M.ராஜா கவிதைகள்
- நெருஞ்சி முள் தைக்கிறது
- தற்கொலைப் பறவைகளின் வானம்
- விதுரநீதி விளக்கங்கள் – 2
- சீன மரபு காட்டும் ஒருபால் உறவு – பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்
- ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக!
- நினைவுகளின் சுவட்டில் – (60)
- அகலப் பாதை!