சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
சூடு காலம் வருகுது! புவிக்கு
கேடு காலம் வருகுது!
நாடு, நகரம், வீடு, மக்கள்
நாச மாக்கப் போகுது!
புயல டிக்கப் போகுது!
பூத மழை யிடிக்கப் போகுது!
நீரை, நிலத்தை, வளத்தை,
பயிரை, வயிறை, உயிரை
முடக்கிப் போட வருகுது!
கடல் மட்டம் ஏறப் போகுது!
மெல்ல மெல்ல ஏறி உஷ்ணம்,
மீறி மேலே போகுது!
வெப்ப யுகப் பிரளயம்,
தப்பாமல் வரப் போகுது!
உன்னை, என்னை அனைவர்
கண்ணைப் பிதுக்கப் போகுது!
தொழிற்சாலை விடும் புகைமூச்சால்,
சூடேறிப் போகும் பூமி!
துருவப் பனிப் பாறை உருகி,
கடல் மட்ட நீர் உயரும்!
பருவக் காலநிலை உருமாறிப்
புயல் வெடிக்கும், பேய்மழை அடிக்கும்,
நிலப்பரப் பெல்லாம் நீர்மய மாகி
புலப்பெயர்ச்சி நேர்ந்து விG ‘>
‘இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பூகோளச் சூடேற்றத்தால் சூழ்வெளிப் பாதிப்புகளால், உலக நாடுகளில் உயிர்ப் பயிரின வளர்ச்சிகள் முடக்கமாகிச் சேதமாகி நிதித் தட்டுப்பாடுகளும், தொழிற்துறை நொடிப்புகளும் நேரப் போகின்றன. ‘
ஆன்டிரூ ஸிம்ஸ் [Demand for Kyoto Tax on the USA (Dec 6, 2003)]
‘பூகோளக் காலநிலைச் சீர்கேடு பூதளத் துறைகளின் செம்மைப்பாடு நோக்கிச் செல்கிறது! அதைப் பறைசாற்றும் எச்சரிக்கைச் சங்குகள் உலக நாடுகளின் தலைநகர் எங்கணும் ஒலிக்க வேண்டும். ‘
ஜான் கம்மர் [John Gummer, British Environment Society (July 21, 1996)]
‘பல்வேறு பணித்துறைக் காலநிலை கண்காணிப்பாளர் உலக நாடுகளில் ஒன்றுகூடித் தமது நிதிவளம், நேரம், ஆக்க உணர்வு அனைத்தையும் திரட்டி, எவ்விதத் தடையின்றி நீண்டகாலப் போராட்டத்தைத் துவக்க வேண்டும். ஏனென்றால் நாமெல்லாம் காலநிலைக் கோளாறு நரகத்தின் வாயிலை வெகு சீக்கிரத்தில் தொட நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ‘
ராஸ் கெல்பிஸ்பான் [Ross Gelbspan (July 31, 2002)]
‘கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விடத் தற்போது பூமண்டலம் சூடேறி விட்டதென்று, ஆழ்ந்து செய்த காலநிலை வரலாற்று ஆராய்ச்சிகள் எடுத்துக் கூறுகின்றன! அதற்குக் காரணம் ஓரளவு இயற்கைச் சம்பவங்களே தவிர, மனிதரியக்கும் தொழிற்சாலை வெளியேற்றும் துர்வாயுக்கள் அல்ல என்று கூறும் மறுப்புவாதிகள் கொள்கைக்கு எதிர்ப்புத் தரும் முறையில் பறைசாற்றப் படுகிறது. ‘
இயான் ஸாம்பிள் [Ian Sample, ‘Not Just Warmer: It ‘s the Hottest for 2000 Years ‘ Guardian Unlimited *(Sep 1, 2003)]
’20 நூற்றாண்டின் கடைசிக் கால வேளைகளில் விரைவாக ஏறிய வெப்பச் சூடேற்றத்துக்கு வேறெந்தக் காரணத்தைக் காட்டுவது ? பூகோளச் சூழ்வெளியில் கண்ணாடி மாளிகை முறையால் [கிரீன்ஹெளஸ் வாயு விளைவு] வாயுச் சூடேற்றச் சேமிப்பால் உண்டான விளைவு என்றுதான் கூற வேண்டும். ‘
பேராசிரியர் ஃபிளிப்ஸ் ஜோன்ஸ் [Philip Jones Director, Climatic Research, University of East Anglia]
பூகோளக் காலநிலை யந்திரத்தை இயக்கும் பரிதி
பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது! வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது! அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகையாகிறது! வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் ‘கிரீன்ஹெளஸ் விளைவு ‘ அல்லது ‘கண்ணாடி மாளிகை விளைவு ‘ [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது. அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது! அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும். அல்லது சி.எஃப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.
பூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது! பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது. அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது. பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது. நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன! பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித்தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன! அவ்விதமாக காலநிலை யந்திரமானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது!
பனி யுக, வெப்ப யுக விளைவுகள்
சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கடைசிப் பனியுகம் உலகைத் தொட்டுக் கடந்து போனது. நமது பூமியின் காலநிலை வரலாறு கடும் பனிப்பாறைப் படுகையிலும், பிறகு சுடும் வெப்பப் பாலை வனங்களிலும் எழுதப் பட்டுள்ளன! மனித நாகரீகத் தொடக்கமே 10,000 ஆண்டுகளுக்குப் பின்னால்தால் வளர்ச்சி அடைந்து வந்திருப்பதாக அறியப்படுகிறது! ஒவ்வொரு காலநிலை யுகமும் தனது வரலாற்றுத் தடங்களைக் கடற்படுகை ஆழத் தட்டுகளில் பதிவு செய்திருப்பதைத் தற்போது மாதிரிகள் எடுத்து ஆராயப் பட்டுள்ளது. பனிப்பாறையில் பதுங்கிக் கிடக்கும் ஆக்சிஜென் வாயுவின் அளவு, பனிப்பாறை உருவான காலத்து உஷ்ணத்தைக் காட்டுகிறது. பனிபடிந்து பாறையாகும் சமயத்தில் உஷ்ண ஏற்றத் தணிவுக்கு ஏற்ப ஆக்ஸிஜென் அளவு பாறையில் சேமிக்கப் படுகிறது. கீரின்லாந்தின் பூர்வீகப் பனிப்பாறைகளைத் துளையிட்டு மாதிரிகளை எடுத்து, உயரப் பகுதித் துண்டுகளில் உள்ள ஆக்ஸிஜென் அளவைக் கணக்கிட்டு கடந்த 100,000 ஆண்டுகளாகப் பூமியில் காலநிலை வேறுபாடு வரலாறுகளை எழுதி யுள்ளார்கள்!
கிரீன்ஹெளஸ் விளைவுகளால் பூகோள வெப்பம் ஏறும் போது, கொந்தளிக்கும் கடல் நீர் உஷ்ணம் அதிகமாகி கடல் வெள்ளத்தின் கொள்ளளவு மிகையாகிறது [Volumetric Thermal Expansion]. அடுத்து துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தின் உயரத்தை மேலும் உயரச் செய்கிறது! பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது. அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத்தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும். கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 செ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது! பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது! பனிமண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது! மீதமான 4-13 செ.மீ. கடல் வெள்ளக் கொள்ளளவு நீட்சியாக எடுத்துக் கொள்ளலாம். 21 ஆம் நூற்றாண்டில் மானிடரியக்கும் தொழிற் துறைகளில் உண்டாகும் கிரீஹெளஸ் வாயுக்கள் வெளியாக்கம் பூகோளக் காலநிலைப் பாதிப்புகளைப் பேரளவில் விளைவிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது!
****
தகவல்கள்:
Picture Credits: Time, National Geographic Magazines.
1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate ? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming
****
jayabarat@tnt21.com [April 6, 2006]
- ரா கு கே து ர ங் க சா மி -4
- கவிதைகள்
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- ரிகர்சனிசம்:பின்நவீனத்தின் இன்னொரு முகம்
- மாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து
- கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்
- ரஜினி வாய்ஸ் ! ஒரு கற்பனை
- கடிதம்
- வகாபிகளின் நவீன தீண்டாமை
- உயிர்நிழல் கலைச்செல்வன் நினைவு-கூடல்
- இஸ்லாமியப் பெண்ணியம் – ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளிவந்துவிட்டது
- ‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்
- கடிதம்
- சன் டிவி
- கவிதைகள்
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்
- தண்டனை
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-15) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15
- என் கணவரின் மனைவி!
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1
- ஷரீஅத் குற்றவியல் – ஒரு மறுவிவாதம்
- ரஃபீக் ஜகாரியா எழுதிய ‘நல்லிணத்துக்கான பாதை : எங்கே வழி தவறினர் இந்திய இசுலாமியர் ? ‘ – நூல் அறிமுகம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் – வசதிகளும் வாய்ப்புகளும்
- மகாத்மாவை இனி பரமாத்மா என்றே அழைப்போம்
- உள்ளுணர்வில் பலரும் ஹிந்துக்களே
- கீதாஞ்சலி (67) வானும் நீ! கூடும் நீ! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- அந்தக் கணம்
- கவிதைகள்
- பெரியபுராணம் – 83 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- அவுரங்கசீப்…. ? !!!