மரபணு மாற்றப்பட்ட பருத்தி செடிகளும் பருத்திப் புழுவும் உலக விவசாய நிறுவனங்களின் ஆயுதங்களாகின்றன

0 minutes, 4 seconds Read
This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue


மரபணு பொறியாளர்களால் ஒரு அமைதியான போர் அமெரிக்காவின் அரிஜோனா மாநிலத்தின் பருத்தி வயல்களில் தொடங்கப்பட்டிருக்கிறது.

ஒரு ரகசிய இடத்தில், இங்கு, சிவப்பு போல்புழுக்கள் (pink bollworms Pectinophora gossypiella) மரபணு மாற்றப்பட்டு காட்டில் விடப்பட்டு, அவை எவ்வாறு நடந்துகொள்கின்றன என்பது ஆராயப்பட்டுவருகிறது.

இவைதான் முதன் முதல் மரபணு மாற்றப்பட்ட பூச்சிகள் காடுகளில் விடப்படுவது. இந்த பரிசோதனை வெற்றிகரமானால், இந்த பூச்சிகள் இன்னும் மாற்றப்பட்டு இவை பரந்த வெளிகளில் விடப்படும். இவைகள் குட்டிகளைப் போடும், ஆனால் எந்தக் குட்டியும் உயிர்வாழாது.

அதாவது, இந்த குலத்தை அழிக்க இவைகளையே மாற்றி அனுப்பியிருக்கிறார்கள். இங்கேதான் பொறியியலாளர்களுக்கு இடையேயான போட்டி வருகிறது.

இப்படிப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பூச்சி மாண்ஸாண்டோ நிறுவனத்துக்கு கெட்ட செய்தி. இந்த வேதிபொருள் நிறுவனம் ஏற்கெனவே மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை ஏராளமான விலைக்கு விற்றுவந்திருக்கிறது. பருத்தி விதைகள் ஏராளமான விலை என்று ஏற்கெனவே விவசாயிகள் புலம்பி வருகிறார்கள்.

மாண்ஸாண்டோ நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை போல்புழு சாப்பிடாது.

இந்த போல்புழுவின் லார்வா பருத்திக்குள் வளர்ந்து அதனை சாப்பிட்டு அழிக்கிறது. வளர்ந்த பூச்சி பட்டாம்பூச்சி போல பெரிதாக, சாம்பல் பழுப்பில் 15-20 செமீ நீளம் இறக்கையுடன் இருக்கும். இவைகள் எகிப்து, சீனா, பிரேசில் நாடுகளில் இருக்கும் பருத்திக்கு சுமார் 20சதவீதம் வரை நஷ்டம் உண்டுபண்ணுகின்றன.

ஆகவே, விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பூச்சியை ஆதரிக்கிறார்கள்.

இப்போதைக்கு, விவசாயிகள் வேதிப்பொருட்களை தூவுவதன் மூலம் பூச்சிகளைக் கொல்கிறார்கள். அல்லது இந்தப் பூச்சிகளை கதிரியக்கத்தில் வைக்கிறார்கள். கதிரியக்கம் இந்தப் பூச்சிகளை மலடாக்குகிறது.

ஆனால், இந்த வழிமுறைகள் விலை அதிகமானவை. இதைவிட விலை குறைந்த வழி, இந்த பூச்சியின் ஜீன்களை மாற்றி, இந்த பூச்சிகளை மலடாக்குவது. அரிசோனாவின் பீனிக்ஸ் நகரத்தில், இந்தப் பூச்சிகள் மாற்றப்பட்டு, வலைக்குள் விடப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன. அவை உயிர்வாழ்கின்றனவா, அப்புறம் அவை குட்டிகளை உருவாக்குகின்றனவா என்று பரிசோதிக்கப்படுகின்றது.

ஈயிடமிருந்து ஒரு ஜீனை இந்த போல்புழுவின் ஜீனுக்குள் அனுப்பி இவைகளை மலடாக்குவது. இந்த மரபணு மாற்றப்பட்ட இந்த பூச்சிகள் சாதாரண வாழ்க்கை வாழும், ஆனால் குட்டிகள் வராது.

இது வேலை செய்தால், விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை மாண்ஸாண்டோ நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டாம். இவை வேலை செய்தாலும், அவை பாதுகாப்பானதா ?

இந்த பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் அறிவியலாளர்கள், பாதுகாப்பானது என்றே கூறுகிறார்கள்.

இதை எதிர்ப்பவர்கள், இந்த பூச்சிகள் புழுக்கள் தங்கள் உடலில் இருக்கும் மாறுதலை மண்ணில் இருக்கும் பாக்டாரியாக்களுக்குச் செலுத்தலாம் என்றும், அப்படி பாக்டாரியாவும் மாறினால் எதிர்பாராத விளைவுகள் எதிர்பாராத வழிகளில் செல்லலாம் என்றும் எச்சரிக்கிறார்கள்.

கடினானது என்னவென்றால், எந்த வழிகளில் எந்த விளைவுகள் நடக்கும் என்று சொல்ல எந்த ஆதாரமும் இல்லை.

ஒரு புறம், விலை குறைந்த பருத்தியின் அபாரமான பலன்கள். அமெரிக்க விவசாயிகளுக்கு மட்டுமல்ல, மெக்ஸிகோ, இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் ஏழை விவசாயிகளுக்கும் இது பயன் தரும். மற்றும் இந்த பருத்தியை வாங்கும் ஏராளமான உலக மக்களுக்கும் இது பயன் தரும்.

மறுபுறத்திலோ, சுற்றுச்சூழல் இதனால் அழிந்தால் அந்த நஷ்டம் மிகவும் மிகவும் அதிகமானதாக இருக்கலாம்.

இதெல்லாம், எந்த வகையில் அமெரிக்க விவசாயத்துறை இதனை மேலாண்மை செய்கிறது என்பதையும், எப்படிப்பட்ட பரிசோதனைகளை வடிவமைக்கிறது என்பதையும் பொறுத்தது. அமெரிக்க விவசாயிகளிடமிருக்கும் அரசியல் பலம் காரணமாக இந்த பூச்சிகள் அனுமதிக்கப்படலாம்.

***

http://news.bbc.co.uk/hi/english/sci/tech/newsid_2053000/2053884.stm

Series Navigation

author

செய்தி

செய்தி

Similar Posts