ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உலகு முழுதும் சுற்றித் தேடி
ஓடாதே
ஒரு குகையைக் கண்டு
ஒளிந்து கொள்ள !
ஒளிந்திருக்கும் கடும் விலங்கு
ஒவ்வோர் குகையிலும் !
எலிப் பொந்தில் நீ வசித்தால்
ஒரு பூனைக் கால் நகம்
உனைப் பிறாண்டி விடலாம் !
உண்மை யான ஓய்வு
உனக்கு வருவது நீ இறையுடன்
தனியாய் உள்ள போது !
++++++++++++
உனக்கொரு முகவரி இங்கே
இருப்பினும்
உதித்து நீ வசித்த இடம்
ஒருவருக் கும் தெரியாது !
இரு தோற்ற மாய்த் தெரியுது
அதனால் நீ
எதை நோக்கினும் !
ஒரு சமயம்
உனக்குத் தெரியுது
ஒருவனை நீ நோக்கும் போது
சீறிப் பாய்ந்திடும் ஓர்
அரவம் என்று !
வேறு ஒருவன்
அருமைக் காதலன் என்று
கருதுவான் அவனை !
இருவர் நினைப்பதும் சரியே !
+++++++++++
ஒவ்வொரு மனிதனும்
நிறுத்துப் பார்ப்பதில் பாதி ! பாதி !
கருப்பு வெளுப்பு போல் !
ஆதாமைக் கண்டு
அழகீனன் என்பார் சோதரர் !
ஒப்பிலா அழகன் என்று
அப்பன் அழுத்திச் சொல்வான் !
கண்களை நம்பாதே
தூரத்தை நோக்கும் போது !
காரணம் உனது
கணிப்பு மிகையோ, குறைவோ ?
+++++++++++
இரு நோக்கு உள்ளது விழிக்கு !
இங்கும் அங்கும்
தாவி அலையும் அதற்கு !
பாய்ந்திட முயல்வாய் ஈர்த்திடும்
பயங்கர வலைக்குள் !
வற்றிடும் சிறிது சிறிதாய் !
சதுரங்கக் கட்டத்தில் ராஜாவை
இப்படி அடைப்பதா ?
அப்படி அடைப்பதா ?
நெஞ்சித் திறந்து வைத்திடு !
தூண்டில் விற்கப் போக
வேண்டாம் இனி !
சுதந்திர மாய் நீந்தும்
சுறாமீன் நீ !
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 9 , 2011)
- அன்புள்ள ஆசிரியருக்கு
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36
- இந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை
- பாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை
- கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் ! (கவிதை -35)
- ’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
- வெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து
- ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11
- தட்டுப்பாடு
- கடக்க முடியாத கணங்கள்
- தொடுவானம்
- பிராத்தனை
- பிராத்தனை
- ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்
- யார் அந்த தேவதை!
- அதிர்வு
- சந்திப்பு
- இன்றைய காதல்
- ஈழம் கவிதைகள் (மே 18)
- முடிவுகள் எனும் ஆரம்பங்கள்!
- வீட்டின் உயிர்
- விழி மூடித் திறக்கையில்!
- புழுங்கும் மௌனம்!
- சிதறல்
- கூடடையும் பறவை
- கனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு
- வெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்
- சூரியச் சிறகுதிர்ந்து..
- யாளி
- மகிழ்ச்சியின் வலிகள்
- ஒரு பூவும் சில பூக்களும்
- இனிவரும் வசந்தத்தின் பெயர்
- அரூப நர்த்தனங்கள்
- வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்
- பிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்
- என்ன வாசிப்பது..
- பம்பரக் காதல்
- நீ தானா
- சுடருள் இருள் நிகழ்வு-06
- l3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்
- ரியாத்தில் கோடை விழா – 2011
- வானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)
- செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி
- இவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10
- “யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்
- மூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்