மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“பிதற்றுபவரைப் பார்த்து அவரது பிதற்றலைக் கேட்டு நான் சலிப்படைந்து விட்டேன். அவரை வெறுக்கிறது எனது ஆத்மா. காலை எழுந்து தினச் செய்தித் தாளையோ கடிதங்களையோ படிக்கப் போனால், அவை முழுவதிலும் வெறும் வம்பளப்புகளைத்தான் காண்கிறேன். தொங்கிக் கொண்டிருக்கும் பொருளற்ற வாசகம் அவற்றில் வஞ்சகம் கலந்து எழுதப் பட்டுள்ளன.”
கலில் கிப்ரான். (Mister Gabber)
++++++++++++
காரணம் (Reasoning)
++++++++++++
கவனமாய்க் கேள் !
காரணம்
உதவி யின்றிப் போகும்
உன் கையில்
அறிவின்றிப் போனால் !
உடன் பிறப்புச் சகோதரி
அறிவு இல்லாமை
காரணத் துக்கு
வீடில் லாத வறுமை !
அறிவுக்குக்
காரணம் இல்லாமை
கதவில் லாத வீடாகும் !
காரணம் இல்லாமல் போயின்
காதல், நீதி, நேர்மைக்கு
ஆதார மின்றி முறியும் !
+++++
நீதி, நெறி இல்லாத
கல்வி கற்ற மனிதன்
நிராயுத பாணியாய்ப்
போருக்குச் செல்லும்
வீரனுக்கு ஒப்பா வான் !
போர்ச் சினம்
வாழ்க்கையில் வீணாகும்
அவன் இனத்துக்கு !
தூய்மை யான
நீர்க் குடத்தில் கலந்த
கத்தாழை வித்துப் போலாகும் !
காரணங் களோடு
கல்வி கற்பது
உடலும் ஆத்மாவும்
உறவாடல் போலாகும் !
உடல் இல்லா விட்டால்
ஆத்மா வுக்கு
ஒன்று மில்லை !
வெறும் காற்றாய்ப் போகும் !
ஆத்மா இல்லா விடில்
உணர்வற்ற கூடாகும்
உடம்பு !
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 19, 2011)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -8
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -7
- புத்தகம் பேசுது மாத இதழ்
- நியூஜெர்ஸி சிறுவ சிறுமியர்களுக்கு சமஸ்கிருத கேம்ப் பாணினி
- தாகூர் இலக்கிய விருது பெறும் எஸ் ராமகிருஷ்ணன்
- விஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங்கள்
- மலர்மன்னன் எதிர்வினைக்கு நன்றியுடன்
- சூர்ப்பனகை என்றும் தவறானவள் தானா ?
- மதுரை அருகே மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மையம்; சோக்கோ அறக்கட்டளை துவங்கியது
- 57ஆவது சிறப்பு பட்டிமன்றம்
- திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை வேண்டுகோள்
- போதுமானது
- சுழற்புதிர்
- 4 குறுங்கவிதைகள்..
- விருட்சம்
- தமிழ்ப் புதினங்களில் சுற்றுச் சூழல் பதிவுகள் – சில அறிமுகக் குறிப்புகள்
- ‘இவர்களது எழுத்துமுறை’ – 35 எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33
- டைரியின் கடைசிப்பக்கம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தாறு 76
- மகாகவி பாரதி விரும்பிய பாரதம்
- ஜனநாயகமும் இஸ்லாமும்-ஒரு ஒப்பீடு பகுதி இரண்டு (2)
- அந்த வார்த்தை ……….
- பகடை
- மழை விரும்பும் மழலை
- விபத்துநேர தீர்மாணங்கள்!
- காதல்
- மிருக தேவதை
- பாதிக்கப்பட்டவன்!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் ! (கவிதை -32 பாகம் -3)
- கதைக்கும் சுவர்ப்பூச்சுகள்
- 2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1 (ஜூலை 16, 2007)