கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் ! (கவிதை -32 பாகம் -2)

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


******************
ஆன்மாவுக்குப் போர்வை
*******************

ஏன் அங்கு புகை உள்ளது ?
சடசட வெனும்
வெடிப் பொலியும் கேட்குது ?
காரணம்
நெருப்பும் விறகும்
போராடிக் கொண் டுள்ளன
ஆரவார மாய்ப் பேசி :
“போ வெளியே புகையே !
அடர்த்தி யாய்த் திரண்டு நீ
அலை மோது கிறாய் !
திட முள்ளவன் நான் !”
இருட்டினில் அவ்விரு தோழரும்
தருக்கம் செய்து
வருகிறார் முகமற்ற
தெருச் சுற்றிகள் போல் !
பாரினில் உள்ள
பராக்கிரமப் பறவை போல்
மரக் கிளையில் அமர்ந்து அவை
பறக்க மறுக்கும் !

++++++++++++

நானென்ன சொல்ல முடியும்
நேசத்தை வெறுத்து
நகர மறுத்துப்
படுத்துக் கொள்ளும்
நபர் மீது ?
உன்மதுக் கிண்ணத்தைப் பாறையில்
உடைத் தெறி !
கடலைத் துண்டாக்கி
எல்லாத் திக்கிலும் வீசி
எறிந்திட
வேண்டிய தில்லை !
பேராண்மை விளக்கம் தவிர்த்து
தீரச் செயலை
விட்டு விட்டு வெகு
தூரம் செல்ல வேண்டும் !
மணமகள் தன்
கணவனை உடற் கணப்புக்கு
அணைப்பது போல்
ஆன்மாவும் கீழே படுத்து
உடலைத் தன் மீது
இழுத்துக் கொள்ளும் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 12, 2011)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts