இசை நடனம்

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

ரவிஉதயன்


சின்னக்குழந்தை

தன் சின்னச்சின்னப் பாதங்களை

இப்பூமியல் எடுத்துவைக்கிறது

வைக்கிற ஒவ்வொரு அடிக்கும்

அதன் பாதணியிலிருந்து

சீழ்கையொலி எழும்புகிறது

பிஞ்சின் நடை பதற்றம் கண்டு

தாயன்பு தவிக்கிறது

சின்னக்குழந்தை

சிரித்தபடி நடக்கின்றது

சங்கீதத்தின் மீது.

ரவிஉதயன்

Series Navigation

author

ரவிஉதயன்

ரவிஉதயன்

Similar Posts