கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் !(கவிதை -32 பாகம் -1)

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


****************************
நெருப்பே என் பிள்ளை !
****************************

ஒயின் அளிக்க வேண்டாம்
இனிமேல் எனக்கு !
செந்நிற ஒயினையும் தூய
வெண்ணிற ஒயினையும்
உட் கொண்டு
ஓய்ந்து விட்டேன்
உவப்பினில் சலித்துப் போய் !
என் குருதி மீதே
எனக்குத் தாகம் மிகுந்தது
இப்போது !
ஏனெனில் எனக்கது
இயக்க அரங்கை அளிக்குது !
கூரிய வாளை எடுத்துப்
போரிடு !
உருளட்டும் பல தலைகள்
உடல்களைச் சுற்றிக் கொண்டு !
மண்டை ஓடுகள்
குன்று களாய்க் குவியட்டும் !
துண்டாக்கு என்னையும்
இரண்டாய் !
வாய் அருகில் நிறுத்திடாய் !
நான் உரைப்பதைக் கேளாய் !
நடு நெருப் பிடையே
நான் நுழைய வேண்டும் !
நெருப்பே என் பிள்ளை !
நானும்
நெருப்பாக வேண்டும்
எரிக்கப் பட்டு !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 5, 2011)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts