ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
************************************
தோளில் பச்சை குத்தப் போனவன்
************************************
*காஸ்வின் நகரத்தில்
நல் அதிர்ஷ்டம் வருமென
எதிர்பார்த்துப்
பார்சி மக்கள் முதுகிலோ
தோளிலோ அல்லது கரத்திலோ
பச்சை குத்திக் கொள்ளும்
பழக்கம் உண்டு
நீல மையில் அல்லது
கரிய நிறத்தில் !
நாவிதன் கடைக்குச் சென்று
தோள் பட்டையில்
நிமிர்ந்து நிற்கும்
நீல நிறச் சிங்கத்தைப்
பச்சை குத்தச் சொல்வான்
பாமரன் ஒருவன் !
“காலச் சக்கிர ஜோதி டத்தில்
உச்ச சிங்கம் எனக்கு ! ஆதலால்
கண்கவரும் முறையில்
வரைந்திடு
நீல நிறக் கோலத்தில் !”
++++++++++++++
ஊசி முதுகில் குத்தியதும்
‘ஓ வென’ அலறினான் பாமரன் !
“என்ன செய்தாய் இப்போது
எனக்கு வலிக்குது !
சிங்கத்தின்
எந்த உறுப்பை
வரையத் துவங்கினாய் ?”
“வாலை முதலில் வரைகிறேன்” என்று
நாவிதன் பதில் உரைப்பான் !
எலும்புச் சதைமேல் குத்தினால்
வலி உண்டாகும் !
வாலில்லாச் சிங்கத்தை
வரைந்திடு என்பான் !
நாவிதன் சொற்படிச் செய்தான் !
திரும்பவும் பாமரன் அலறி
“எந்த உறுப்பை வரைகிறாய்
இப்போது ?”
என்று வினவினான் !
“சிங்கத்தின்
செவிகளை” என்பான்
நாவிதன் ! “வேண்டாம்
காதிலாச் சிங்கத்தை”
வரையெனக்
கட்டளை இட்டான் பாமரன்.
+++++++++++++
ஊசி குத்திய உடன் மீண்டும்
ஆவென அலறி
ஓலமிட்டான் பாமரன் !
“எதனை வரைகிறாய்
இப்போது ?”
“வயிறை வரைகிறேன்,” என்றான்
நாவிதன் ! “வேண்டாம்
வயிறில்லா சிங்கத்தை
வரை எனக்கு,” என்பான்
பாமரன் !
விழித்தான் பச்சை குத்தும்
நாவிதன்
வழி தெரி யாமல்
கன்னத்தில் கைவைத்துச்
சிந்தித்தான்
கண நேரம் ! பிறகு
வீசி எறிந்தான் ஊசியை !
“எவரும் இதுவரை
இப்படி வரையக் கேட்டிலர் !
வாலில்லா, காதில்லா
வயிறில்லாச் சிங்கத்தை
வரைய விளித் திலார் !
படைத்த கடவுள் கூட
இப்படிப்
பச்சை குத்த முடியா தென
நகர்ந்தான் நாவிதன் !
+++++++++++++
*Qazwin or Ghazvin is the largest city and capital of the Province of Qazvin in Iran.
+++++++++++++
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 22, 2011)
- நாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)
- பாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை
- கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31
- புள்ளிகளும் கோடுகளும்.
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- மரத்தின் கௌரவம்
- இரண்டு கவிதைகள்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு
- மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3
- அதையும் தா
- அப்பாவின் வாசம்
- அதிகமாகும்போது
- நினைவுகள்
- பெண்ணே நீ …..
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)
- ‘மம்மி’ தாலாட்டு!
- மீள்தலின் இருப்பு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)
- தாங்கல்
- செம்மொழித் தமிழின் தனித்தன்மை
- ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை
- “நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்
- கல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4
- மரம் மறப்பதில்லை
- யட்சியின் குரல்
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்திரெண்டு
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)
- வெளியேறுதலுக்குப் பின்
- ப.மதியழகன் கவிதைகள்
- பதிவிறக்கக் கனவு
- சாளரங்கள்
- வெயில் நிலவு!
- அவள் நிறையும் கிறுக்கல்கள்
- அவள்
- முடிச்சு
- விடுபட்டவை
- இந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]
- சங்க காலக் குலக்குறி அடையாளங்கள்
- கொள்ளை..