மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“நீதி மன்றங்களுக்குச் சென்று நேர்மையற்றுக் கைக்கூலி வாங்கிப் பொய்ச் சாட்சி கூறும் மனிதரைப் பார் ! பூனை எலியுடன் விளையாடுவது போல் எப்படி எளிய மனிதரின் உள்ளத்தையும், சிந்தனைகளையும் தம் வசம் வளைக்கிறார் என்பதைப் பார் ! பொய்யும் புரட்டும், சூதும், வஞ்சகமும் உள்ள செல்வந்தர் இல்லத்துக்குச் சென்று பார்”
கலில் கிப்ரான். (Decayed Teeth)
++++++++++++
நித்திய ஞானி
++++++++++++
பூமிக்கு எதிரி பல்லடுக்குத்
தளத்தின் கீழ்
ஒளிந்திருக்கும் மனிதனே !
ஈதர் ஆவிக் கிடையே உள்ளவன் !
அழுதிடும் அன்னையர் அலறலில்
பசித்திடும் மதலையர் குரல்தனில்
பங்கெடுப்பது பூமி !
தனிமச் சிதைப்பும்
மனித அற்பமும் எண்ணும் !
நேற்றைய தினம்
இங்கெல்லாம் குழந்தைகள்
நிம்மதி யாய்த் தூங்கியதை
நினைத்துக் கொள்ளும் !
இல்லமற்று இன்று நகரங்களில்
அல்ல லோடு மாந்தர்
அழுது கொண்டு நிற்பதை
அப்பால் வெறித்து நோக்குவதை
அவ நம்பிக்கை யோடு
கவலை யோடு,
போர் வாழ்வில்
புரண்டு வாழ்வதைக் கண்டு
பூமி மனம் உடையும் !
++++++++++++
நின்று கொண்டி ருக்கும் ஆத்மா
நிலையற்ற சிந்தனையில்
கொன்றழிக்கும் கவலை யோடு
உலக சக்தி களை
ஆட்டிப் படைக்கும்
தெய்வ நியதியின் நீதியைச்
சந்தேகித்து
பூமி முணு முணுக்கும் :
“இந்தப் படைப்புக்களை எல்லாம்
உந்தச் செய்யு மந்த
நித்திய ஞானி
சீறிச் சினந்து
சீரழிவை விளை விக்கும் !
அத்துடன் எதிர் பாரா
பேரெழிலும் உருவாக்கும் !
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 15, 2011)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- விடுமுறை நாள் கல்லூரி
- முரண்பாடு
- சாகித்ய அகாதமி புத்தக கண்காட்சியும் இலக்கிய விழாவும்
- எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்
- சென்னையில் குறும்படப் பயிற்சிப்பட்டறை
- எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு விருது
- ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு
- இவர்களது எழுத்துமுறை – 31 ஜெயமோகன்
- சாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2
- மரணம் பயணிக்கும் சாலை!
- அந்தவொரு மழை நாள்..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -9)
- இருக்கை
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- ப மதியழகன் கவிதைகள்
- கைகளிருந்தால்…
- கொடிய பின்னிரவு
- இருக்கை…
- இரண்டு கவிதைகள்
- தேவைகள்
- அக்கறை பச்சை
- “புளிய மரத்தின் கதை” நூல் விமர்சனம்
- ‘‘காடு வாழ்த்து’’
- ஒரே ஒரு துளி – துப்பறியும் சிறுகதை
- நினைவுகளின் சுவட்டில் – 64
- விதியை மேலும் அறிதல்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3
- சாமியின் தந்தை..
- குமார் அண்ணா
- குருவிக் கூடு
- மழை ஏன் பெய்கிறது
- நாலுபேருக்குநன்றி
- விதை
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தொன்று
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)
- சட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]
- தன்னிலை விளக்கம்
- உயிர்ப்பு
- இரவின் தியானம்
- எங்ஙனம்?
- இடைவெளி
- கனவுகள் இனிதாகட்டும்!!
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- நீ….. நான்…. மழை….
- ஒற்றை மீன்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30