வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை
புதிய சட்டங்கள்!
—
வன்னி நகரில் நடந்த
வன்செயல்களின் கொடூரத்தில்…
இடம்பெயர்ந்தலைந்தேன்
தாங்காத சோகத்தில்!
போர் மேகங்கள் ஒன்றுசூழ்ந்து
பொழிந்தன அன்று
குண்டு மழைகள்..
ஈவிரக்கம் துளியுமின்றி
துண்டாடப்பட்டன
அப்பாவிகளின் தலைகள்!
தடுப்புக்காவலில்
தாளாத
சோகம் கண்டவர்கள்
இன்றும் கூட
என்ன ஆனார்களோ?
பதுங்குக் குழிக்குள்
பதுங்கியே
பாதி வாழ்க்கை முடிந்தாச்சு..
பயத்துடன் வாழ்ந்த காலம்
இப்போதுகளில் தான் முடிவாச்சு!
புருஷனையும்
புள்ளைகளையும் இழந்து
இந்த ஏழை படும் பாட்டை
யாரறிவார்…
எங்களைப் போன்றே வாழ்விழந்த
அனைவரும் தான்
இதை அறிவார்…
வேதனை வாழ்வு
வெறுத்த நிலையில்
கூடி வந்தன
மீள்குடியேற்றும் திட்டங்கள்…
சொல்லுங்கள் ஐயா!
எதுவென்றாலும்
என் குடும்பத்தை மீட்டித்தருமா
இந்த புதிய சட்டங்கள்???
வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை
(poetrimza@yahoo.com)
சங்கீதமிசைக்கும் சமாதானப் புறா!
அண்ணார்ந்து பார்த்தேன்..
அழுதபடி காட்சியளித்தது
அகல விரிந்த வானம்!
தினமொன்றிலே
பலதடவை கேட்கும்
வெடிகுண்டுச் சத்தத்தால்
அன்றெல்லாம்
ஊர்க்குருவிகளும்
உல்லாசம் மறந்தபடி!
ஷெல்வீச்சைக் கேட்டே
பழகிப்போயிருந்தாலும்
எங்கள் உயிர்மூச்சு
ஸ்தம்பித்துப்போனது
உண்மை தான்!
நாலாபுறமும் நோக்கினேன்
திட்டுத்திட்டாக
இரத்தம் உறைந்து
படிந்து கிடந்தது!
முட்டிமோதின
எதிலோ என் கால்கள்!
ஓ.. துண்டாடப்பட்ட யாரோ ஓர்
அப்பாவியின்
பாதங்கள் அவை!
அகோரமான இந்தக்காட்சியை
படமெடுத்திட இயலாமல்
ஒழிந்து கொண்டது
அப்போது என் இதயம்!
உயிர்பிழைத்த
அந்த சம்பவங்கள்
தற்போது இல்லாமல்
சங்கீதமிசைக்கிறது
சமாதான வெண்புறா!!!
வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை
(poetrimza@yahoo.com)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- விடுமுறை நாள் கல்லூரி
- முரண்பாடு
- சாகித்ய அகாதமி புத்தக கண்காட்சியும் இலக்கிய விழாவும்
- எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்
- சென்னையில் குறும்படப் பயிற்சிப்பட்டறை
- எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு விருது
- ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு
- இவர்களது எழுத்துமுறை – 31 ஜெயமோகன்
- சாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2
- மரணம் பயணிக்கும் சாலை!
- அந்தவொரு மழை நாள்..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -9)
- இருக்கை
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- ப மதியழகன் கவிதைகள்
- கைகளிருந்தால்…
- கொடிய பின்னிரவு
- இருக்கை…
- இரண்டு கவிதைகள்
- தேவைகள்
- அக்கறை பச்சை
- “புளிய மரத்தின் கதை” நூல் விமர்சனம்
- ‘‘காடு வாழ்த்து’’
- ஒரே ஒரு துளி – துப்பறியும் சிறுகதை
- நினைவுகளின் சுவட்டில் – 64
- விதியை மேலும் அறிதல்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3
- சாமியின் தந்தை..
- குமார் அண்ணா
- குருவிக் கூடு
- மழை ஏன் பெய்கிறது
- நாலுபேருக்குநன்றி
- விதை
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தொன்று
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)
- சட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]
- தன்னிலை விளக்கம்
- உயிர்ப்பு
- இரவின் தியானம்
- எங்ஙனம்?
- இடைவெளி
- கனவுகள் இனிதாகட்டும்!!
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- நீ….. நான்…. மழை….
- ஒற்றை மீன்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30