தேனம்மை லஷ்மணன்
9. பங்கேற்பு.:-
*******************
பின்புறமிருத்தல்
சௌகர்யமாய் இருக்கிறது
மஞ்சள் வெளிச்சங்கள்
ஆக்கிரமிக்காத
மெல்லிய இருட்டு.
இருக்கிறோம்
ஆனால் இல்லை..
எல்லா ஆட்டங்களிலும்
பங்கேற்பாளராக
பரிசுக் கோப்பையை
நூலிழையில்
தவறவிட்டு.
மேடையில் ஒலிக்கும்
சங்கீதங்கள் சில
சோக ராகத்தோடு..
கரைந்து போகிறது
குளிர்பான பனிக்கட்டியாய்
இயலாமையோடு
துப்பு இருக்கிறது
உரித்தெரிந்து விட்டு
மேடையேறி
எல்லாவற்றையும்
கைப்பிடிக்குள் சுழற்ற..
காலடியில் அடக்க..
பின் தொடரப் போகிறதா
ஊத்தி மூடப் போகிறோமா
பித்தம் தெளியாமல்
என முற்றும் தெரியாமல்
எல்லையற்ற ஆட்டத்தில்..
*****************************************************
குறுங்கவிதைகள்..
******************************
1. மெல்ல திறந்த கதவிடுக்கில்
பாம்பாய் நெளிந்து வந்து
காலைக் கடிக்கிறது குளிர்..
**************************************************
2. கற்கள் நரகல் எல்லாம்
எச்சரிக்கையாய் தாண்டி.,
உனை தேடி வந்து
சொற்களால் மிதிபட்டு..
*****************************************************
3. மதர்போர்டு
————————
ஆயுள்வரை உழைத்து பழுதாகி
கழற்றிக் கோர்க்கப்பட்டு, தொடர்ந்தும்
புனர்ஜென்மப் பணியில் அம்மாவாய்..
*************************************************************
4. குளப்படிகளிலும் பூத்து
ஈரத்தாமரை…
உன் பாதச் சுவடு..
******************************************************
5. வாய் முளைத்த வண்ணத்துப் பூச்சியாய்
வார்த்தை நிறங்களை அப்பிச் செல்கிறது
பேசக் கற்ற குழந்தை..
- திரைகள்
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதை௧ள்
- தேனு கவிதைகள்
- கம்பன் கழகம் பிரான்சு – பொங்கல் விழா 2011 அழைப்பிதழ்
- கர்நாடக இசை கற்போருக்கு ஓர் அறிவிப்பு
- பரீக்ஷா (1978லிருந்து அரங்கில்…..) வழங்கும் இரண்டு தமிழ் நாடகங்கள்
- உலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு
- மனித வாழ்க்கை
- பின் துரத்துதலின் அரசியல்
- காதல் – கனவுகள்- சிதைவுகள் பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”
- அனுதாபத்திற்குரிய அவன்
- ட்ரோஜனின் உரையாடலொன்று
- பல்லுயிர் ஓம்புதல் தலை
- வயிற்றால் வந்தது
- “பண்பின் வழியில்……………..“
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -6)
- போதைப்பழங்கள் உண்ணுபவர்களின் தீவு
- மரண ஒத்திகை!
- உரோம இழை!
- எதோவொன்று
- ‘’சங்க கால மகளிர் விளையாட்டுக்கள்’’
- இவர்களது எழுத்துமுறை – 28 வாசந்தி
- முன்னேற்றம்
- வாதத்தின் இறுதிச் சொல்..
- (2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- எஸ்.பொவுக்கு இயல் விருது
- மீண்டும் மனு ஸ்மிருதி: மேலோட்டமாக ஒரு பார்வை
- கச்சத் தீவு: விவரம் அறியாத வெளியுறவு அமைச்சர் மீண்டும் கைகழுவுகிறார்!
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -19
- இடமாற்றம்
- புதுமைகள் என்றும் அதிசயமே…
- சமத்துவங்களின் மீதான துரத்தல்கள்
- பொறித்துளி வளர்கிறது
- தமிழ் தாத்தாவிற்காக ஒரு இரங்கல்
- திருக்குறளின் செம்மொழிக் கூறுகள்
- அவதார புருஷர்களின் அக உலகம் அருங்கூத்து- கூத்துக்கலைஞர்களின் தொகைநூல்)
- பூஜ்யத்துக்குள்ளே ஒரு பூதம் (HIGG’S BOSON)
- ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -4)
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- ப.மதியழகன் கவிதைகள்
- தன்னிலை
- பக்கங்கள்
- அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962)