ப.மதியழகன்
சாயை
வெறுமை குடியிருக்கும்
கூடுகள்
அணுவுக்குள் ஒளிந்திருக்கும்
அண்டப்பேரண்ட ரகசியம்
கடலின் நீர்த்திவலைகளும்
கடல் தானா
அக்குரோணி படைகள்
மோதிக் கொள்வதைப் போல
வானத்தில் இடி
சோபிதத்தை
சொந்தம் கொண்டாடும்
பெண்ணினம்
பாதசாரிகள் நடக்கின்றனர்
வாகனங்கள் விரைகின்றன
இருளைக் கிழித்து ஒளியை பரப்பும்
மின்விளக்கு
குழந்தைகள் மிரளுகின்றன
பெரிய ஆகிருதி கொண்டவர்களெல்லாம்
பூச்சாண்டிகளென்று நினைத்து
பரிதி மறைந்தது
இருள் கவிந்தது
தூரத்துச் சந்திரன் ஏக்கத்தைக் கொடுத்தது
நிழலின் அளவு
ஒரே மாதிரி இருப்பதில்லை
எல்லா நேரங்களிலும்.
சாளரம்
ஜன்னல் கம்பிகள்
சிறைச்சாலையினுள்
இருப்பதைப் போன்று
தோற்றம் தருகின்றன
தென்றல் காற்று
தேடி வந்து தேகத்தில்
மோதும்
மழை வந்து
இருக்கின்றேனா என
எட்டிப் பார்க்கும்
சூரிய ஒளி
அனுமதியில்லாமல்
உள்ளே நுழையும்
தெருவில்
தள்ளுவண்டியில்
வந்து போகும்
கடலை, சுண்டல்
போன்ற தின்பண்டங்கள்
வாங்குவதற்கு
என்னை அழைக்கும்
மாலையில் கேட்கும்
குழந்தைகளின்
மழலைச் சத்தம் தான்
என்னை உயிர்ப்பிக்கும்.
குறளி வித்தை
உடுக்கை சத்தம்
காதடைக்க
உரக்க உரக்க கூவுகிறான்
காகிதங்களை
கரன்சி நோட்டுக்களாய்
மாற்றுவதாகவும்
செத்தவனை உயிர் பிழைக்க
வைப்பதாகவும்
பாம்பின் விஷத்தை
அரை நொடியில்
முறிப்பதாகவும்
சொல்லிக் கொண்டே
சட்டைப் பையின் கனத்தை
கண்களாலேயே அளக்கின்றான்
காசு போடாதவர்கள்
இரத்தம் கக்கப்போவதாய்
ஜக்கம்மா சொன்னதாய்
சொல்கின்றான்
பயந்து கொண்டு போட்டவர்கள்
பணத்தை இழந்து போனார்கள்
குறளி வித்தைக்காரனோ
கைப்பிடி திருநீற்றை
வைத்துக்கொண்டு
மாயாஜாலம் ஏதுமில்லாமல்
சில்லறைகளை குவித்துவிட்டான்
சற்றும் தாமதிக்காமல்
இன்னொரு ஊர்நோக்கி விரைகின்றான்
ஏமாறும் கூட்டம்
எல்லா ஊர்களிலும் இருக்கும்
என்றறிந்தவனாய்
உடுக்கை அடித்து
ஜக்கம்மாவை கூவி அழைத்துக் கொண்டே
தன் பயணத்தை தொடர்கின்றான்.
ப.மதியழகன்,
- திரைகள்
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதை௧ள்
- தேனு கவிதைகள்
- கம்பன் கழகம் பிரான்சு – பொங்கல் விழா 2011 அழைப்பிதழ்
- கர்நாடக இசை கற்போருக்கு ஓர் அறிவிப்பு
- பரீக்ஷா (1978லிருந்து அரங்கில்…..) வழங்கும் இரண்டு தமிழ் நாடகங்கள்
- உலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு
- மனித வாழ்க்கை
- பின் துரத்துதலின் அரசியல்
- காதல் – கனவுகள்- சிதைவுகள் பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”
- அனுதாபத்திற்குரிய அவன்
- ட்ரோஜனின் உரையாடலொன்று
- பல்லுயிர் ஓம்புதல் தலை
- வயிற்றால் வந்தது
- “பண்பின் வழியில்……………..“
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -6)
- போதைப்பழங்கள் உண்ணுபவர்களின் தீவு
- மரண ஒத்திகை!
- உரோம இழை!
- எதோவொன்று
- ‘’சங்க கால மகளிர் விளையாட்டுக்கள்’’
- இவர்களது எழுத்துமுறை – 28 வாசந்தி
- முன்னேற்றம்
- வாதத்தின் இறுதிச் சொல்..
- (2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- எஸ்.பொவுக்கு இயல் விருது
- மீண்டும் மனு ஸ்மிருதி: மேலோட்டமாக ஒரு பார்வை
- கச்சத் தீவு: விவரம் அறியாத வெளியுறவு அமைச்சர் மீண்டும் கைகழுவுகிறார்!
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -19
- இடமாற்றம்
- புதுமைகள் என்றும் அதிசயமே…
- சமத்துவங்களின் மீதான துரத்தல்கள்
- பொறித்துளி வளர்கிறது
- தமிழ் தாத்தாவிற்காக ஒரு இரங்கல்
- திருக்குறளின் செம்மொழிக் கூறுகள்
- அவதார புருஷர்களின் அக உலகம் அருங்கூத்து- கூத்துக்கலைஞர்களின் தொகைநூல்)
- பூஜ்யத்துக்குள்ளே ஒரு பூதம் (HIGG’S BOSON)
- ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -4)
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- ப.மதியழகன் கவிதைகள்
- தன்னிலை
- பக்கங்கள்
- அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962)