திரை

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

சத்யானந்தன்


மந்திரகாரன் காலிப் பெட்டியை
மூடியிருந்த துணியை எடுத்ததும்
இரண்டு புறாக்கள் பறந்தன

அவனால் ஒருவரை அந்தரத்தில்
தூங்க வைக்க இயன்றது

அவன் கையிலிருந்த கோலில்
மந்திர சக்தி இருக்கலாம்
அவன் சொற்களாலோ வேறு
வழியிலோ நம்மை வசியம்
செய்து விடுகிறானாம்

அவன் எதை ஒளித்து வைக்கிறான்
எதைக் காட்டுகிறான் வித்தையைத்
துவங்கும் போது
ஒருவர் கேள்வி

அதற்கான பதிலை நான் தேடவில்லை
யாரிடமும் அதைப் பற்றிப் பேசவில்லை
கனவு பற்றியும்����

Series Navigation

author

சத்யானந்தன்

சத்யானந்தன்

Similar Posts