ராஜா
விழிமூடாதிருந்தால்
நெகிழ்ந்துபோய் நாயகன் நின்றிருந்தான்.
படியேறி வந்துகொண்டிருந்தது நாயொன்று.
நெருங்கி வந்ததும்-
நாயின் கண்களில்
ஒரு நுண்மாறுதலை கவனித்ததில்
வெளிறிவிட்டது நாயகன் முகம்.
விபரீதம் நிகழப் போகிறது
என்ற அனுமானத்தில்
விழிகளை இறுக்கி மூடிக்கொண்டேன்.
ஆர்வம் மேலிட
வீரம் வரவழைத்து
வெகு பிரயத்தனத்தில்
விழி திறந்தேன்.
அறைக்குள் ஊடுருவிய வெளிச்சத்தில்
கண்கள் கூசின.
விரையும் வாகன இரைச்சல்கள்
செவிப்பறைகளை அறைந்தன.
_____________________________________________________
பெயர் சொல்
அம்மா அப்பா இட்டபெயர் ராஜசேகர்
ஜெயந்தி மிஸ் இடிச்சதில் மிஞ்சியது ராஜா.
அன்றைக்கு பள்ளி நண்பர்களுக்கு ராசுக்குட்டி
இன்றைக்கும் மாமாவுக்கு பாசமாய் ராசு.
தமிழன்னை திருத்தி தமிழாக்கியதில் ராசா
திட்டித் தீர்த்த தோழிக்கு மாவுராசா.
அம்மாவுக்கு அஃறிணையாகி தங்கம்
அப்பாவுக்கு உயர்திணையாகி ராஜாங்க.
வயதொத்த நண்பனும் ராஜா.
வித்தியாசம் வேண்டி நான் இளையராஜா.
வசதிக்கேற்ப கசக்கியதில்
காட்டன் துணியாய் சுருங்கிப் போனேன்.
சுடிதார் காந்தமே! என்னெதிர் அமர்ந்ததில்
இரும்புத் துண்டாய் நெருங்கி வந்தேன்.
பாதிமுகம் திருப்பி என்னைப் பார்த்ததில்
இடது பக்கம் வேகமாய் துடித்ததடி.
பெயர்சொல்லி என்னை அழைத்ததில்
காதுப் பக்கம் வெடி வெடித்ததடி.
உன் உதடு பிரித்த என்பெயர்
கவிதையாய் காதில் விழுந்ததடி
உன் நினைவு சுமந்த என்மனம்
கழுதையாய் நீட்டிப் படுத்ததடி.
குழந்தை பிறந்தபின்னே பேர் வைப்பாங்க
இன்னும் அதானே உலக வழக்கம்
எம்பேர் கேட்டு புதுசா பிறந்தேங்க
ஒண்ணும் புரியல இதென்ன கலக்கம்.
என்னை புதிதாய் படைத்தாயே நீ பிரம்மாவா
பெயர்சொல்லி முதலில் அழைத்தாயே நீயென் அம்மாவா
பேரென்ன? உறவென்ன? ஒத்தி வைப்போம்
ஊரென்ன? உலகென்ன? காதலில் களிப்போம்.
____________________________________________
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26
- வளரும் பயிர்…
- தமிழ்க் கணிமைக்கான சு.ரா. விருது: ஒரு கேள்வி
- அலைபேசியும் ஆடை அலங்காரமும்!
- சிவன்கோவில் கவியரங்கம்
- இவர்களது எழுத்துமுறை – 25 அனுத்தமா
- ‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’
- அயலகத் தமிழ்க் கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வரங்கு
- அறிமுகம் உயிர்நிழல், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’
- சமையல் யாகத்தின் பலியாடு , ஸ்ரீஜா கதை பற்றி
- சத்தமில்லா பூகம்பம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -3)
- காகிதச்செடிகள்
- ஆயிரம் நிலவே வா ! (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை)
- சகுனம் பற்றி…
- பிறருக்காக வாழ்பவன்
- ப மதியழகன் கவிதைகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- வாண்டு பருவமும் வயதான கிழவியும்
- ராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க மேதை ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)
- ரசிகன் கவிதைகள்
- நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல
- நினைவுகளின் சுவட்டில் – (62)
- பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -16
- கரு
- கடம்
- விடிவெள்ளி
- கத்தியின்றி..ரத்தமின்றி..
- நீதியும் சமூக நீதியும்
- இந்தியாவின் தேவை சன்னமான கோவை
- அம்மாவின் இசை
- இரு பிரம்மப் படிமங்கள்
- சாதிகள் உண்டடி பாப்பா
- இரவுக்காதல்
- இரண்டு கவிதைகள்
- சிறுமியிடம் மாட்டிக்கொண்ட வறுமையும், மனிதாபிமானமும்
- நட்சத்திரங்களோடு பேசாதீர்கள்…
- எது என் பட்டம் ?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு கவிதை -41 பாகம் -1)