மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“என் வாயில் சிதைந்த பல்லொன்று தொல்லை கொடுத்து வந்தது. பகலில் ஏனோ தொந்தரவு தரவில்லை. ஆனால் இரவின் அமைதியில், பல் வைத்தியர் தூங்கும் போது, மருந்துக் கடையை மூடிய பிறகு அது வலி கொடுக்க ஆரம்பித்தது !”
கலில் கிப்ரான். (Decayed Teeth)
++++++++++++++
காதல் தீப்பொறி
++++++++++++++
அந்தக் கணத்தில் தான்
வாழ்க்கையின் போதை ஊட்டம்
விழிப் புணர்வி லிருந்து
பிரிக்கிறது !
முதல் எழும் அத்தீப்பொறி தான்
இதய அரங்கில் பற்றி
ஏற்று கிறது ஒளி !
அதுதான்
முதல் மந்திரக் கீதமாய்
இதய வெள்ளி நாண்களில்
மீட்டுகிறது !
அந்தக் கணப் பொழுதில் தான்
ஆத்மாவின் முன்னே
கண்மலரும்
காலத்தின் அணிவகுப்புத் தடங்கள் !
கண்களுக் குள் காட்டும்
காரிருளின் காட்சிகளை,
மனச் சாட்சி யின்
வினைகளை !
அந்தக் கணம் தான்
திறந்திடும் எதிர் காலத்தின்
நிரந்தர ரகசியத்தை !
அவையே மன்மதன் —
காதல் தேவன் தூவிடும்
மோக வித்துக்கள் !
காதல் நிலத்தில் பயிரிட
விதைப்பவை
காதலியின் கண்கள்
அன்புப் பார்வையால் ! பலனை
அறுவடை செய்வது
ஆத்மா !
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 1 2011)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26
- வளரும் பயிர்…
- தமிழ்க் கணிமைக்கான சு.ரா. விருது: ஒரு கேள்வி
- அலைபேசியும் ஆடை அலங்காரமும்!
- சிவன்கோவில் கவியரங்கம்
- இவர்களது எழுத்துமுறை – 25 அனுத்தமா
- ‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’
- அயலகத் தமிழ்க் கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வரங்கு
- அறிமுகம் உயிர்நிழல், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’
- சமையல் யாகத்தின் பலியாடு , ஸ்ரீஜா கதை பற்றி
- சத்தமில்லா பூகம்பம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -3)
- காகிதச்செடிகள்
- ஆயிரம் நிலவே வா ! (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை)
- சகுனம் பற்றி…
- பிறருக்காக வாழ்பவன்
- ப மதியழகன் கவிதைகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- வாண்டு பருவமும் வயதான கிழவியும்
- ராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க மேதை ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)
- ரசிகன் கவிதைகள்
- நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல
- நினைவுகளின் சுவட்டில் – (62)
- பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -16
- கரு
- கடம்
- விடிவெள்ளி
- கத்தியின்றி..ரத்தமின்றி..
- நீதியும் சமூக நீதியும்
- இந்தியாவின் தேவை சன்னமான கோவை
- அம்மாவின் இசை
- இரு பிரம்மப் படிமங்கள்
- சாதிகள் உண்டடி பாப்பா
- இரவுக்காதல்
- இரண்டு கவிதைகள்
- சிறுமியிடம் மாட்டிக்கொண்ட வறுமையும், மனிதாபிமானமும்
- நட்சத்திரங்களோடு பேசாதீர்கள்…
- எது என் பட்டம் ?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு கவிதை -41 பாகம் -1)