ப மதியழகன்
விளிம்பில்
கன்று ஈனுகிறது
பசு
சித்திரை வெயில்
உடலை வாட்டுகிறது
பருவம் தப்பி
பெய்கிறது மழை
விளைநிலங்களெல்லாம்
மனைகளாகிறது
கலியுகத்தில்
கடவுள் வீதியில்
அனாதையாகத் திரிகிறார்
வானம் போதுமா என்கிறது
பூமி போதுமே என்கிறது
இது சரியில்லை என்கிறது
கடல்
முக்காலமும் உணர்ந்த ஞானி
பிச்சை கேட்கிறான்.
மெளனத்தின் காலடித்தடம்
அவர்கள்
பேசிக் கொள்வதில்லை
ஒரே வீட்டில் தான்
இருக்கிறார்கள்
சைகைகளால் கூட
வார்த்தைகளை
பரிமாறிக் கொள்வதில்லை
அந்த வீட்டின் கதவுகளுக்கு
பூட்டு இல்லை
வீடெங்கும் விலையுயர்ந்த
பொருட்கள் இருக்கின்றன
அவைகளை அவர்கள்
உபயோகிப்பதில்லை
திருடன் புகுந்துவிடுவானோ
என்ற பயமுமில்லை
தாமரை இலை தண்ணீர்
போன்றது
அவர்களுக்கும் அந்த வீட்டிற்குமான
உறவு
வாழ்வின் அநித்யத்தை
உணர்ந்து வாழும்
அந்தர ஆன்மா அவர்கள்.
தீர்ப்பு
கேட்காமலே பதில் வரும்
மனைவியிடமிருந்து
அன்பு பகிர்ந்தளிக்கப்படும்
தாயிடமிருந்து
நேசம் பரிசோதிக்கப்படும்
காதலியிடமிருந்து
பாசம் பரிமாறப்படும்
குழந்தைகளிடமிருந்து
அக்கறை விநியோகப்படும்
கடன் கொடுத்தவர்களிடமிருந்து
நலமாய் வாழ வாழ்த்து வரும்
நண்பர்களிடமிருந்து
போகும் போது வருவதும்
வரும் போது போவதும்
இருக்கும் போது இறப்பதும்
இறந்த பின்னும் இருப்பதும்
கடைசி தருணங்களில்
கபளீகரமாவது
சிங்கத்தின் வாயினிலா
இல்லை
முதலையின் விழுங்கலிலா
யாருக்கும் விதிவிலக்கில்லை
தண்டணையிலிருந்து
மரணம் பீடு நடை போடும்
இப்புவனத்தில்.
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26
- வளரும் பயிர்…
- தமிழ்க் கணிமைக்கான சு.ரா. விருது: ஒரு கேள்வி
- அலைபேசியும் ஆடை அலங்காரமும்!
- சிவன்கோவில் கவியரங்கம்
- இவர்களது எழுத்துமுறை – 25 அனுத்தமா
- ‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’
- அயலகத் தமிழ்க் கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வரங்கு
- அறிமுகம் உயிர்நிழல், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’
- சமையல் யாகத்தின் பலியாடு , ஸ்ரீஜா கதை பற்றி
- சத்தமில்லா பூகம்பம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -3)
- காகிதச்செடிகள்
- ஆயிரம் நிலவே வா ! (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை)
- சகுனம் பற்றி…
- பிறருக்காக வாழ்பவன்
- ப மதியழகன் கவிதைகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- வாண்டு பருவமும் வயதான கிழவியும்
- ராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க மேதை ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)
- ரசிகன் கவிதைகள்
- நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல
- நினைவுகளின் சுவட்டில் – (62)
- பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -16
- கரு
- கடம்
- விடிவெள்ளி
- கத்தியின்றி..ரத்தமின்றி..
- நீதியும் சமூக நீதியும்
- இந்தியாவின் தேவை சன்னமான கோவை
- அம்மாவின் இசை
- இரு பிரம்மப் படிமங்கள்
- சாதிகள் உண்டடி பாப்பா
- இரவுக்காதல்
- இரண்டு கவிதைகள்
- சிறுமியிடம் மாட்டிக்கொண்ட வறுமையும், மனிதாபிமானமும்
- நட்சத்திரங்களோடு பேசாதீர்கள்…
- எது என் பட்டம் ?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு கவிதை -41 பாகம் -1)