ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
************************************
பெண்ணின் புன்னகை என்ன செய்யும் ?
************************************
“அப்படிச் செய்வது அவனுக்குச் சிறகுகள் முளைத்து வளர்வதைப் போன்றது. ஒழுக்கமற்ற செயலைச் செய்யாமல் இருக்கிறான் ஒரு சிறுவன் என்பது ஆபத்தானது. அதாவது அச்சிறுவன் சிறகுகளின்றிக் கூட்டை விட்டு வெளியே ஏகுகிறான் ! ஒரே பாய்ச்சலில் விலங்கு ஒன்றுக்குப் பிறகு இரையாகிறான்.”
கவிஞானி ரூமி (ஒழுக்கமற்ற செய்கை புரிந்தவனைப் பற்றி)
+++++++++++++
வயல் நிலம் செழிப்பாக
உயரு தென்று
பயிரை வித்திடுவான்
அந்தத் தளபதி ! அன்றிரவு
கண்ட கனவில்
காதலி தோன்றினாள் !
காம மயக்கத்தில்
போலிப் பெண் காட்சியைப்
புணர்ந்தான் !
விந்தணுக்கள் வெளியேறும் !
++++++++++++++
சிறிது நேரம் கழித்து
விழித் தெழுந்தான் தளபதி !
காதலி
கண்முன் இல்லை யெனக்
கவலை யுற்றான் !
வித்துக்கள்
வீணாகி விட்டதாய்
வேதனை யுற்றான் :
“சோதனை செய்வேன்
சூழ்ச்சி மாதினை” என்று
சூளுரைத்தான் !
+++++++++++++
உடல் இச்சையை
அடக்கு முடியாத
ஒரு தளபதி
தலைவனாய் இருக்கச் சிறிதும்
தகுதி யற்றவன்
நிலத்தில்
வீணாய் விதைத் தவன் !
காலி•புக்கு அஞ்சாது
கட்டுப் பாடும் இல்லாது
சாவ தற்குத் துணிந்து
காதல் வயப் பட்டான்
மோகத் தளபதி !
++++++++++++++
ஆத்திரப் பட்டுச் செய்தலும்
அவசரப் பட்டுச் செய்தலும்
ஒருபோதும் கூடாது !
குருநாதர் ஒருவரிடம்
அறிவு பெறச்
சரண் அடைவாய் !
ஆனால் தளபதி யானவன்
ஏதும் செய்ய
இயலாத நிலை !
++++++++++++++
எழில் பெண்ணிடம்
இதயம் இழந்த
இந்த ஈடுபாட்டு மையல்
சரியில்லை !
உடன் படாத காதலியின்
உருவம் மறுபடியும்
வந்து வந்து தவிக்க வைக்கும் !
இருட் டுருவாய்
எதிர்ப்படும் கிணற்றில் !
சிங்கத் தையும் ஏமாற்றி
குதிக்க வைக்கும் குழியில்
போலிப் பிம்பம் !
++++++++++++++++
மேலும் ஓர் அறிவுரை
உனக்கு !
உன்னரும் காதல் மாதுடன்
உறவு கொள்ள
அடுத்தவர்
ஆழ்ந்து நோக்குவது
ஆபத்தானது !
பஞ்சும் நெருப்பும்
பற்றி எரியும்
பக்கத்தில் இருந்தால் !
எரியும் தீயை அணைப்பது
எளிதன்று !
இயலாத ஒன்று !
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 25, 2011)
- புளித்துப் போகிறது நாற்றம்
- சில்லறை கவிஞர்கள்
- நம்பிக்கையோடு
- என்னுள் ஒருவன்
- ஒரு கவிதை உருவாகிறாள்
- என்னவாயிற்று மல்லிகாவிற்கு
- குட்டிக்கதைகள்
- வானங்கள்
- மேகலை இலக்கிய கூடல்
- எச்.பீர்முஹம்மதின் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” நூல் வெளியீடு
- அசைவத் தீ?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -3)
- உலகம் சுற்றும் குழந்தைகள்
- “பாராண்ட இனமென்று பகர்வோம் நன்கு…….!“
- இழந்த தருணங்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -2)
- 5 கவிதைகள்
- சுயநலம் !
- தெரு பார்த்தல்
- நாச்சியாதீவு பர்வீன் கவிதைகள் இரண்டு.
- கடற்கரை காதல்
- தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு
- இவர்களது எழுத்துமுறை – 24 ஆர்வி
- வெகுசனத் தளத்தை நோக்கி சிறுபத்திரிக்கை
- விதுரநீதி விளக்கங்கள் – 4 இறுதிப் பகுதி:
- நினைவுகளின் சுவட்டில் – (61)
- மேளா
- சிறகு முளைச்சுட்டா
- யாதெனின்…யாதெனின்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -15
- சமையல் யாகத்தின் பலியாடு
- குழந்தைமை..
- மூடிக்கோ
- கடல் வற்றிய வேளை
- ஒற்றைத் தகவலின் தூது..
- சங்கமம் நானூறு
- வால்மீனின் போக்கை வகுத்த எட்மண்ட் ஹாலி [Edmond Halley] (1656-1742)
- காலமும் கடிகாரங்களும்
- ஹைக்கூ கொத்து
- தேனம்மைலெக்ஷ்மணன் கவிதைகள்..
- நாதப்பிரம்மம்
- கரன்சிகளில் காந்தி சிரிப்பதற்கான காரணங்கள்
- சொல்பேச்சுக் கேளா பேனாக்கள்
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- எல்லாம் மாயா