மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“நேற்று காணப்பட்டது போல் இன்று நீ தோன்றுகிறாய். நாளையும் தோன்றுவாய், அடுத்த நாளும் தோன்றுவாய். முதன்முதலில் நான் காண்டது போலிருக்கிறாய் நீ. நேற்று நாம் வாழ்ந்தோம். இன்று நாம் வசிக்கிறோம். இதுவே தெய்வத்தின் நியதி. வானரங்களின் வாரிசுகளே ! உங்கள் உறுதி வாக்கு என்ன ?”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
++++++++++++++
விடுதலைத் தாகம்
++++++++++++++
மனித இதயம் தவித்துக்
கூக்குர லிடும் உதவி நாடி !
மனித ஆத்மா தினமும்
மன்றாடும்
விடுதலைக்குப் போராடி !
ஆயினும்
புரிந்து கொள்வ தில்லை !
கவனிப்ப தில்லை
செவி சாய்ப்ப தில்லை
அவலக் குரலுக் கெல்லாம் !
புறக்கணிப்போம்
புரிந்து கொள் வோனைப்
பைத்தியம் என்று !
விரைந் தோடுவோம்
அவனை விட்டு !
+++++++++++
இரவுகள் கழிகின்றன !
இப்படி நாம் வாழ்கிறோம்
அறியா மையில் !
அடுத்தெடுத்துப்
பகற் பொழுதுகள் புலர்ந்து
அணைத்துக் கொள்ளும்
வரவேற்று நம்மை !
ஆயினும்
இரவுக்கும் பகலுக்கும்
அஞ்சி அஞ்சித் தவிப்போம்
நிரந்தரமாய் !
+++++++++++
இணைந்து கொண்டோம்
இந்தப் புவியோடு
இறைவனின் இதய வாசல்
திறந்துள்ள போது !
மிதிப்போம் காலால் நமது
வாழ்க்கை உணவை
வயிற்றுப் பசி நம்மை
வாட்டும் போது !
எப்படி இனிக்கிறது இவ்வாழ்வு !
ஆயினும் வாழ்வுக்கு
அப்பால் ஒதுங்குவான்
அற்ப மனிதன் !
(முற்றும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 26 2011)
- புளித்துப் போகிறது நாற்றம்
- சில்லறை கவிஞர்கள்
- நம்பிக்கையோடு
- என்னுள் ஒருவன்
- ஒரு கவிதை உருவாகிறாள்
- என்னவாயிற்று மல்லிகாவிற்கு
- குட்டிக்கதைகள்
- வானங்கள்
- மேகலை இலக்கிய கூடல்
- எச்.பீர்முஹம்மதின் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” நூல் வெளியீடு
- அசைவத் தீ?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -3)
- உலகம் சுற்றும் குழந்தைகள்
- “பாராண்ட இனமென்று பகர்வோம் நன்கு…….!“
- இழந்த தருணங்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -2)
- 5 கவிதைகள்
- சுயநலம் !
- தெரு பார்த்தல்
- நாச்சியாதீவு பர்வீன் கவிதைகள் இரண்டு.
- கடற்கரை காதல்
- தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு
- இவர்களது எழுத்துமுறை – 24 ஆர்வி
- வெகுசனத் தளத்தை நோக்கி சிறுபத்திரிக்கை
- விதுரநீதி விளக்கங்கள் – 4 இறுதிப் பகுதி:
- நினைவுகளின் சுவட்டில் – (61)
- மேளா
- சிறகு முளைச்சுட்டா
- யாதெனின்…யாதெனின்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -15
- சமையல் யாகத்தின் பலியாடு
- குழந்தைமை..
- மூடிக்கோ
- கடல் வற்றிய வேளை
- ஒற்றைத் தகவலின் தூது..
- சங்கமம் நானூறு
- வால்மீனின் போக்கை வகுத்த எட்மண்ட் ஹாலி [Edmond Halley] (1656-1742)
- காலமும் கடிகாரங்களும்
- ஹைக்கூ கொத்து
- தேனம்மைலெக்ஷ்மணன் கவிதைகள்..
- நாதப்பிரம்மம்
- கரன்சிகளில் காந்தி சிரிப்பதற்கான காரணங்கள்
- சொல்பேச்சுக் கேளா பேனாக்கள்
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- எல்லாம் மாயா