ராஜா கவிதைகள்

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

ராஜா


1.காலங் கடத்த காதல்

குறும்புப் பார்வைகளும்
சில்மிஷ தீண்டல்களும்
சின்ன சண்டைகளும்
தேனொழுகும் வார்த்தைகளுமாய்
நீ எழுதிய
பொழுதுபோக்குக் கவிதைகளுக்கு
காதல் என்று பெயரிட்டிருந்தேன்.

____________________________________________________________

2.ரஹசியம்

இரயில் கதவின் இருபுறக் கதவுகளை
இறுகப் பற்றியபடி
படியோரம் நின்று பயணித்திருந்தேன்
நழுவியோடிய இருட்டுப் பள்ளத்தில்
பெரும்புதிருக்கான தீர்வொன்று பொதிந்திருப்பதாய்
ஈரக்காற்று முகத்தில் அறைந்து அழைத்ததில்
குதித்துவிடலாம் என்றுதான் நினைத்தேன்.

__________________________________________________________

3.நண்பர்களைப் பிரிந்த இரவு

மூடிய புத்தகத்தின் மௌனம்
போர்த்திய அறையில்
சிநேஹித்திருந்த தருணங்களை
மீட்டிக் கொண்டிருக்கிறேன்
உச்சுக்கொட்டி கேட்கிறது சுவர்க் கடிகாரம்.

_______________________________________________________

4.சாகாவரம்

கண நேரத்தில்
நிகழ்ந்துவிட்டது அந்த மனஸ்தாபம்
இனி அடிக்கடி நிகழும்
நினைவு மீட்டல்களிலும்
தன்னிலை நியாயப்படுத்தலிலும்
இன்னும் சிலகாலம்
உயிரோடிருக்கக் கூடும்
இறந்துபோன அந்த கணம்.

_____________________________________________________________

நன்றி,

Series Navigation

author

ராஜா

ராஜா

Similar Posts