ராஜா
1.காலங் கடத்த காதல்
குறும்புப் பார்வைகளும்
சில்மிஷ தீண்டல்களும்
சின்ன சண்டைகளும்
தேனொழுகும் வார்த்தைகளுமாய்
நீ எழுதிய
பொழுதுபோக்குக் கவிதைகளுக்கு
காதல் என்று பெயரிட்டிருந்தேன்.
____________________________________________________________
2.ரஹசியம்
இரயில் கதவின் இருபுறக் கதவுகளை
இறுகப் பற்றியபடி
படியோரம் நின்று பயணித்திருந்தேன்
நழுவியோடிய இருட்டுப் பள்ளத்தில்
பெரும்புதிருக்கான தீர்வொன்று பொதிந்திருப்பதாய்
ஈரக்காற்று முகத்தில் அறைந்து அழைத்ததில்
குதித்துவிடலாம் என்றுதான் நினைத்தேன்.
__________________________________________________________
3.நண்பர்களைப் பிரிந்த இரவு
மூடிய புத்தகத்தின் மௌனம்
போர்த்திய அறையில்
சிநேஹித்திருந்த தருணங்களை
மீட்டிக் கொண்டிருக்கிறேன்
உச்சுக்கொட்டி கேட்கிறது சுவர்க் கடிகாரம்.
_______________________________________________________
4.சாகாவரம்
கண நேரத்தில்
நிகழ்ந்துவிட்டது அந்த மனஸ்தாபம்
இனி அடிக்கடி நிகழும்
நினைவு மீட்டல்களிலும்
தன்னிலை நியாயப்படுத்தலிலும்
இன்னும் சிலகாலம்
உயிரோடிருக்கக் கூடும்
இறந்துபோன அந்த கணம்.
_____________________________________________________________
நன்றி,
- பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25
- புத்தனின் இரண்டாம்வருகை
- ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு
- நீங்கதான் சாவி..:-
- தோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா
- அறிவோர் கூடல் – பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு
- ” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்
- தமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்
- ராஜநீதி.
- உடைகிறக் கோப்பைக்குள்
- நேற்றைய நள்ளிரவு என்பது..
- தொலைந்த நான் …
- கண்ணாமூச்சி
- நட்ட நடு இரவு!
- இருந்து
- பயணி கவனிக்கிறாள்.
- வாழ்வு
- வாழ்க்கைச் சக்கரம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -14
- கணினி மேகம் Cloud Computing – Part 3
- ஆனந்தக் கூண்டு
- கேமராவிலிருந்து….
- அவள்..அவன்..அது..
- பூதம் பிடிப்பவர் (சீன பழங்கதை)
- வேண்டுதல்
- விதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:
- இந்தியாவின் 50 அடி பிளவு
- சோனியாஜி அவர்களே! – நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்
- ஒரு குழந்தை மழை.
- அந்த முத்துக்களை
- வலியொன்று…!
- நிலவும் அந்த நினைவும் மட்டும்..
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -2)
- ராஜா கவிதைகள்
- ஒரு சோகம்…..!
- பறவைகளைப் போல வாழ்வோம்