ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
************************************
பெண்ணின் புன்னகை என்ன செய்யும் ?
************************************
காதலர் விரைவாய் ஒருவரை ஒருவர் நாடுவது, முனிவர்கள் உலக மெய்ப்பாடைத் தேடுவது எல்லாம் இறைவனால் வழிகாட்டப் படுபவை. ஒவ்வோர் மனித ஈர்ப்பும் நம்மை அறிவுக் கடலுக்கு இழுத்துச் செல்கிறது. எவ்விதம் வாழ்வு அமைந்து வருகிறதோ அப்பாதையிலே செல்ல வேண்டும். அப்படி முயலாது சிக்கிக் கொண்டு முடங்கிப் போவது இயற்கை நியதி ஆகாது !
கவிஞானி ரூமி
+++++++++++++
எகிப்து நாட்டின் காலி•ப்*
மெய்க் காப்பாளன் கூறுவான் :
“மோசுல் வேந்தருக்கு
மேனி எழிலான
மோகக் கிழத்தி ஒருத்தி
இருக்கிறாள்.
என்னால் எழிலை வர்ணிக்க
இயலாது !
இப்படி இருப்பாள்,” என்றவன்
ஒரு தாளில்
ஓவியம் வரைந்து காட்டினான் !
++++++++++++++
காலி•பின் கைதவறிக் கீழ்விழும்
ஒயின் கிண்ணம் !
தன் தளபதியை மோசுலுக்கு
உடனே அனுப்பினான்
படைவீரர்
பல்லாயிரம் சூழந்து செல்ல !
முற்றுகை இட்டார் ஒருவாரம்
செத்தனர் படைவீரர்
கோட்டைச் சுவர் இடிந்தது !
கோபுரங்கள் சாய்ந்தன !
“ஏனிந்த சாவுகள்,” என்று அலறி
தூதனை அனுப்பினார்
மோசுல் வேந்தர்.
“நகரம் வேண்டு மெனின்
நான் தருவேன்
எடுத்துக் கொள்வீர் !
ஆபரணம் வேண்டு மெனின்
அதுவும் அளிப்பேன் ! போர்
அவசிய மில்லை !”
+++++++++++++
தாளில் வரைந்த எழில்
மாதின் ஓவியத்தைத்
தளபதி காட்டினான்
மோசுல் வேந்தருக்கு !
தயங்க லின்றிக்
“கூட்டிச் செல் அவளை”
என்று உடனே
அனுமதி கொடுத்தார் !
“எழில் மாதை வழிபடுவோன்
தழுவிக் கொள்ளட்டும் !”
மோகினி
மாதைக் கண்டதும்
மயங்கி வீழ்ந்தான் தளபதி !
காதல் வயப் பட்டான்
காலி•பைப் போல் !
++++++++++++++
திடீர்க் கவர்ச்சியும்
முடிவிலாக் காதல் உணர்வின்
ஓர் ஆரம்பக் காட்சியே !
உலகம் வளர்ந்து வாராது இந்த
உணர்ச்சி யின்றி ?
ரசாயன மாற்றம் அடைந்திடும்
அண்டப் பொருட்கள்,
காய்கறிப்
பயிர்களி லிருந்து !
உயிர் பிணையும் உடலோடு
ஒவ்வோர் காதல் உணர்விலும்
மானிடம்
முழுமை அடையத் தான்
விழையும் போது !
+++++++++++++++
*காலி•ப் –> Caliph
+++++++++++++++
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 19, 2011)
- பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25
- புத்தனின் இரண்டாம்வருகை
- ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு
- நீங்கதான் சாவி..:-
- தோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா
- அறிவோர் கூடல் – பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு
- ” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்
- தமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்
- ராஜநீதி.
- உடைகிறக் கோப்பைக்குள்
- நேற்றைய நள்ளிரவு என்பது..
- தொலைந்த நான் …
- கண்ணாமூச்சி
- நட்ட நடு இரவு!
- இருந்து
- பயணி கவனிக்கிறாள்.
- வாழ்வு
- வாழ்க்கைச் சக்கரம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -14
- கணினி மேகம் Cloud Computing – Part 3
- ஆனந்தக் கூண்டு
- கேமராவிலிருந்து….
- அவள்..அவன்..அது..
- பூதம் பிடிப்பவர் (சீன பழங்கதை)
- வேண்டுதல்
- விதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:
- இந்தியாவின் 50 அடி பிளவு
- சோனியாஜி அவர்களே! – நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்
- ஒரு குழந்தை மழை.
- அந்த முத்துக்களை
- வலியொன்று…!
- நிலவும் அந்த நினைவும் மட்டும்..
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -2)
- ராஜா கவிதைகள்
- ஒரு சோகம்…..!
- பறவைகளைப் போல வாழ்வோம்