M.ராஜா கவிதைகள்

author
0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

M.ராஜா


1.விழியருகில் வானம்

இழுத்து
போர்த்திக்கொள்ளமுடியாத தூரத்தில்
விரிந்திருக்கிறது வானம்
தூரங்களைக் கரைக்கும் கற்பனைகள்
தோற்றுப்போய்த் தூங்கிவிடும் இரவுகளில்
என்மேல் கவிழ்ந்து
என்னை இறுக்கி
அணைத்துக் கொண்டுவிடுகிறது.
______________________________________________________________________________________________
2.இலவச இணைப்பு

பன்னெண்டு ரூபாயா ஏறிப்போச்சு
ஒருகப் ஹார்லிக்ஸ் விலை.

“சக்கரை ஜாஸ்தியா சின்னகப்ல ஹார்லிக்ஸ்”
சொல்லிட்டு ஓரச்சேரா பார்த்து உக்கார்ந்தேன்.

ஆவிபறக்க
நங்கென்று டேபிளில் வச்சிட்டு போனான்
நாயர்கடைப் பையன்.

ஆஸ்பிடல் போகணும்.
சட்டையில் ஒழுகினால் பிசுபிசுப்பாய் ஒட்டிக்கும்.

கைப்பிடி பற்றி
விரலில் சூடு படாமல் எடை ஏந்தி
ஒரு கப்புக்கும் ஒரு லிப்புக்கும் இடையிலான
பல ஒழுகல்களைத் தவிர்க்க
தலை குனிந்து கழுத்து நீட்டி உதடு குவித்து
ஒருவாய் உறிவதர்க்குள்-

விளிம்பிலிருந்து வழிந்தது
சக்கரைப்பாகா இனிச்ச ஹார்லிக்ஸ்.

பன்னெண்டு ரூபாயில் ரெண்டு ரூபாய் நஷ்டம்.

பாதிகப் பருகும்வரைக்கும்
பறந்துகொண்டுதான் இருந்தது
இலவச இணைப்பாய்
அஞ்சுரூபாய் பெறுமானமுள்ள ஆவி.

நானும் குடிக்காமல்
நாயருக்கும் நஷ்டமில்லாமல்
காற்றில் கலந்து காணாமல் போனது.

___________________________________________________________________________________________________

3.இரத்தலினும் இறத்தல் நன்று

முன்னைப்போல் ஓடித்திரிய
என்னால் முடியவில்லை.

வயோதிகம் வந்ததில்
சுருங்கிவிட்டது எல்லை.

அடுத்தவரின் நிராகரிப்பும்
சுய இயலாமையும்
மரணம் வரைக்கும் நரகம்.

சுயமாய்ப்பு செய்து கொள்ளவும்
சமாதானம் இல்லாமல்
வந்துவிழும் பண்டங்களுக்காக
படியோரம் படுத்திருக்கிறேன் –

ஆறாத புண்களை நக்கியபடியும்
ஈனக்குரலில் குரைத்தபடியும்.

______________________________________________________________________________________________________________

4.ஹிம்சை

இடதும் வலதுமாய் புரண்டு படுத்தாகிவிட்டது.
இன்னு மொருமுறை கலைத்தால்
ஓரிரு மயிர்கள் உதிரக்கூடும்.
நான்கைந்து நகங்கள் மிச்சமிருக்கின்றன.
ஓரச்சதையோடு மென்று துப்புவதற்குள்
வந்துவிடவேண்டும்-

உனது குறுஞ்செய்தி
அல்லது
ஒரு குட்டித் தூக்கம்.

______________________________________________________________________________________________________________________

5.கடவுளின் காலடித் தடயங்கள்

உயிரின் மூலாதாரங்களை
அகழ்ந்தாய்ந்திருந்தபோது தென்பட்டன
கடவுளின் காலடித் தடயங்கள்.
அடியொற்றியே தொடர்ந்தேன்.

கால வெளி எல்லைகள் தூர்ந்து
ஆதியும் அந்தமுமான பிராந்தியம்.
வெளியெங்கும் விரவிக்கிடந்தேன் நான்;
என்னெங்கிலும் பரவிக்கிடந்தது வெளி.
விழித்தெழுந்த உடலணுக்கள் யாவிலும்
வெடித்துக் கிளம்பியது பேரானந்தக் கிளர்ச்சி.
கருமக் கயிறுகள் அறுந்து
ஞான ஒளியூட்டம் நிகழ்ந்தது.
சூன்ய பெருஞ்சூட்சமங்கள் தெரிந்து தெளிந்தும்
கண்ணெட்டியவரையில் காணக்கிடைக்கவில்லை
கடவுள் மட்டும்.

வந்த வழி வியந்தேன்.

இரண்டு சுவடுகளன்றி
இன்னொன்று ஏதுமில்லை.
இருந்த சுவடுகள் மீது
நின்றுகொண்டிருக்கின்றேன்
நான்; கடவுள்.

____________________________________________________________________________________________________________________

நன்றி

1.விழியருகில் வானம்

இழுத்து
போர்த்திக்கொள்ளமுடியாத தூரத்தில்
விரிந்திருக்கிறது வானம்
தூரங்களைக் கரைக்கும் கற்பனைகள்
தோற்றுப்போய்த் தூங்கிவிடும் இரவுகளில்
என்மேல் கவிழ்ந்து
என்னை இறுக்கி
அணைத்துக் கொண்டுவிடுகிறது.
______________________________________________________________________________________________
2.இலவச இணைப்பு

பன்னெண்டு ரூபாயா ஏறிப்போச்சு
ஒருகப் ஹார்லிக்ஸ் விலை.

“சக்கரை ஜாஸ்தியா சின்னகப்ல ஹார்லிக்ஸ்”
சொல்லிட்டு ஓரச்சேரா பார்த்து உக்கார்ந்தேன்.

ஆவிபறக்க
நங்கென்று டேபிளில் வச்சிட்டு போனான்
நாயர்கடைப் பையன்.

ஆஸ்பிடல் போகணும்.
சட்டையில் ஒழுகினால் பிசுபிசுப்பாய் ஒட்டிக்கும்.

கைப்பிடி பற்றி
விரலில் சூடு படாமல் எடை ஏந்தி
ஒரு கப்புக்கும் ஒரு லிப்புக்கும் இடையிலான
பல ஒழுகல்களைத் தவிர்க்க
தலை குனிந்து கழுத்து நீட்டி உதடு குவித்து
ஒருவாய் உறிவதர்க்குள்-

விளிம்பிலிருந்து வழிந்தது
சக்கரைப்பாகா இனிச்ச ஹார்லிக்ஸ்.

பன்னெண்டு ரூபாயில் ரெண்டு ரூபாய் நஷ்டம்.

பாதிகப் பருகும்வரைக்கும்
பறந்துகொண்டுதான் இருந்தது
இலவச இணைப்பாய்
அஞ்சுரூபாய் பெறுமானமுள்ள ஆவி.

நானும் குடிக்காமல்
நாயருக்கும் நஷ்டமில்லாமல்
காற்றில் கலந்து காணாமல் போனது.

___________________________________________________________________________________________________

3.இரத்தலினும் இறத்தல் நன்று

முன்னைப்போல் ஓடித்திரிய
என்னால் முடியவில்லை.

வயோதிகம் வந்ததில்
சுருங்கிவிட்டது எல்லை.

அடுத்தவரின் நிராகரிப்பும்
சுய இயலாமையும்
மரணம் வரைக்கும் நரகம்.

சுயமாய்ப்பு செய்து கொள்ளவும்
சமாதானம் இல்லாமல்
வந்துவிழும் பண்டங்களுக்காக
படியோரம் படுத்திருக்கிறேன் –

ஆறாத புண்களை நக்கியபடியும்
ஈனக்குரலில் குரைத்தபடியும்.

______________________________________________________________________________________________________________

4.ஹிம்சை

இடதும் வலதுமாய் புரண்டு படுத்தாகிவிட்டது.
இன்னு மொருமுறை கலைத்தால்
ஓரிரு மயிர்கள் உதிரக்கூடும்.
நான்கைந்து நகங்கள் மிச்சமிருக்கின்றன.
ஓரச்சதையோடு மென்று துப்புவதற்குள்
வந்துவிடவேண்டும்-

உனது குறுஞ்செய்தி
அல்லது
ஒரு குட்டித் தூக்கம்.

______________________________________________________________________________________________________________________

5.கடவுளின் காலடித் தடயங்கள்

உயிரின் மூலாதாரங்களை
அகழ்ந்தாய்ந்திருந்தபோது தென்பட்டன
கடவுளின் காலடித் தடயங்கள்.
அடியொற்றியே தொடர்ந்தேன்.

கால வெளி எல்லைகள் தூர்ந்து
ஆதியும் அந்தமுமான பிராந்தியம்.
வெளியெங்கும் விரவிக்கிடந்தேன் நான்;
என்னெங்கிலும் பரவிக்கிடந்தது வெளி.
விழித்தெழுந்த உடலணுக்கள் யாவிலும்
வெடித்துக் கிளம்பியது பேரானந்தக் கிளர்ச்சி.
கருமக் கயிறுகள் அறுந்து
ஞான ஒளியூட்டம் நிகழ்ந்தது.
சூன்ய பெருஞ்சூட்சமங்கள் தெரிந்து தெளிந்தும்
கண்ணெட்டியவரையில் காணக்கிடைக்கவில்லை
கடவுள் மட்டும்.

வந்த வழி வியந்தேன்.

இரண்டு சுவடுகளன்றி
இன்னொன்று ஏதுமில்லை.
இருந்த சுவடுகள் மீது
நின்றுகொண்டிருக்கின்றேன்
நான்; கடவுள்.

____________________________________________________________________________________________________________________

நன்றி

ராஜா

Series Navigation

Similar Posts