சில‌ ம‌ழை இர‌வுக‌ள்…

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

சீதா பாரதி



ஒரு மழை இரவில்
எதிரெதிர் திசைகளிலிருந்து
புறப்பட்டு
பயணிக்கிறோம்
தேற்ற விதிகளின்படி
ஏதோ ஒரு புள்ளியில்
சந்திக்க‌ வேண்டிய‌து
நிதர்சனங்களில்
ந‌ட‌க்காமலே
பயணம் தொடர‌
இரவெல்லாம் அடித்து
பெய்து கொண்டிருக்கிறது
மழை

-0-0-0-0-0-0-0-0-0-0-

அந்த‌ ம‌ழை இர‌வில்
ஜன்னல்கள் இல்லாத
‌அறையை
சபித்தபடியே
போர்வைக்குள்
சுருள்கிறேன்
நீ இருந்த‌ இர‌வுக‌ளின்
நினைவுகள் வருடியபடி
மெல்ல‌ தொட‌த்துவ‌ங்குகிற‌து
சாரல்

-0-0-0-0-0-0-0-0-0-0-

எதுவுமில்லை இனி
எனக் கூறி
பிரிந்துசென்ற
அன்றொரு இரவில்
ஜன்னல் வழி
கிழித்தெறிந்த‌
நினைவுத்துண்டங்களை
நனைத்து
புயலாய் முகத்தில்
அறைந்துபோகிறது
முடிவில்லாமல் நீளும்
இந்த இரவின்
மழை

-0-0-0-0-0-0-0-0-0-0-

மழை இரவுகளுக்கும்
உன‌க்கும் சில
‌ஓற்றுமைக‌ள்
உண்டு
அவையும்
பிரத்யேகமாய்
ஒரு நிறம்
ஒரு மணம்
ஒரு இசை
ஒரு மிதமான குளிர்
கொண்டிருக்கின்றன
நீ அருகில் இருக்கும்
சூழல்களைப்
போலவே

Series Navigation

author

சீதா பாரதி

சீதா பாரதி

Similar Posts