யூசுப் ராவுத்தர் ரஜித்
தலையிலே மல்லிகை
முகத்திலே புன்னகை
அவர்தான் ஆங் சான் சூ கீ
நவ 13, 2010
வீட்டுக் காவலிலிருந்து விடுதலை
நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
மியான்மார் இன்று
மழையால் மணக்கிறது
ஆரம்பக் கல்வி புதுடில்லியில்
அடுத்த கல்வி ஆக்ஸ்ஃபோர்டில்
அவரிடம் சில கேள்விகள்
உயிராக மதிக்கும் தலைவர்?
மகாத்மா காந்தி
பொதுவாழ்வில் உங்களை
பொத்திக் கொண்ட சக்தி எது?
மகாத்மா காந்தி
உயிர்க் கொள்கை?
அகிம்சை
வேறு வழியே இல்லாத போது
ஒத்துழையாமை
நீங்கள் எழுதிய புத்தகங்கள்?
‘பர்மாவைச் சுற்றிப் பார்ப்போம்’
‘பர்மிய இலக்கியங்களில்
அரசியல் சமுதாய தாக்கங்கள்’
‘அச்சத்திலிருந்து விடுதலை’
தாங்கள் வாங்கிய விருதுகள்
1990 ரப்லோ மனித உரிமை விருது
1991 சக்ரோவ் விருது
1991 அமைதிக்கான நோபல் விருது
நோபல் பரிசை நேரில் பெற்றீர்களா?
தனிமைச் சிறையில் இருந்தேன்
என் சார்பில் என் மகன்கள்
நீங்கள் வழங்கிய கொடை?
நோபல் பரிசு 1.3 மில்லியன்
பர்மியர் வளர்ச்சிக்கான அறநிதிக்கு
வீரத்திருமகளை
வீட்டுக் காவலில் வைத்ததேன்?
வார்த்தைகள் சொல்ல முடியாததை
வலைத் தளங்கள் சொல்லும்
தங்களால் மறக்க முடியாதது?
எல்லை வரை வந்தும்
என்னைப் பார்க்க முடியாமல்
என் கணவர் துடித்தது
பின் மடிந்தது
உங்கள் விடுதலை பற்றி?
என்னோடு சிறைப்பட்ட
2100 பேர் இன்னும் உள்ளேதான்
என்னைப் பொருத்தவரை
இது விடுதலை அல்ல
நீங்கள் பர்மிய மக்களுக்குச்
சொல்ல விரும்புவது?
அகிம்சை
பொறுமை
உண்மை
யூசுப் ராவுத்தர் ரஜித்
- ராகுல் காந்திக்கு சில கேள்விகள் – நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்
- தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீடு
- பணம் காய்க்கும் இளஞ்செடிகள்
- அகிலவியல் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த ஆங்கில மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 21
- வரலாற்றின் சாட்சியமாய் ஈழத்திரைப்படங்கள்
- இவர்களது எழுத்துமுறை – 21 நீல.பத்மநாபன்
- பல்வலி என்பது யாதெனில்…!
- திருமதி ரேவதி சங்கரன் மிக அழகாக சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுக்கிறார்
- மக்கள் கலை இலக்கிய விழா
- கோநா கவிதைகள்
- சிலை பேசினால்
- மௌனம்
- முதிர் இளைஞா…
- ரசிப்பு
- தொலைவின் தூரம்
- ஆங் சான் சூ கீ
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -4
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -3)
- பந்தயங்கள்
- எஸ்தரும் கருப்பண்ணசாமியும்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -9
- பூவா…தலையா…
- முள்பாதை 60
- பரிமளவல்லி 25. திருத்தங்கள்
- இளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்
- ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது.
- பேச மறந்த குறிப்புகள்
- தேனீர் விடுதியின் காலி இருக்கைகள்..
- மீண்டுமொரு மழைக்காலம்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- இன்னுமொரு முறை
- சத்யானந்தன் கவிதைகள்
- மூன்றாம் எண் மதுக்கடையிலிருந்து!
- அருவி