கோநா
கோநா.
கவிதை 1.
தலைப்பு: சற்றுமுன் பெய்தமழை.
தெருவெங்கும் குழிகளை
தெளிந்த வானத்தையும்
கொஞ்சம் மேகத்தையும்
நிரப்பி
சாலையை சீர்செய்துள்ளது
சற்றுமுன் பெய்தமழை.
பாதசாரிகள்
வாகன ஓட்டிகள்
பார்த்துச் செல்லுங்கள்
பறந்து கடந்திடும்
பறவைகளை மிதித்துவிடாமல்
விமானங்களில் மோதிவிடாமல்
தவிர…
நீங்கள்
தவறிவிழுந்துவிடவும் கூடும்
தரையில்லா
பிரபஞ்சப்பெருவெளிக்குள்
பூமியைச் சுற்ற
இன்னொரு நிலவாய்.
கவிதை.2
தலைப்பு; சிலதேநீர்த் துளிகளும் பல சூரியன்களும்
கைதவறி
விழுந்து
த ய றிது சி
உண்மையுடன்
கண்ணாடி டம்ளர்.
ஒளியில் மின்னிய
ஒவ்வொரு சில்லிலும்
இன்னும்
ஒட்டியிருக்கிறது
எனக்கான
சில தேநீர்துளிகளும்
பல சூரியன்களும்.
கவிதை.3
தலைப்பு; கடவுள் பைத்தியம்
சுருண்டு படுத்து
கடிக்கும் கொசுக்களுடன்,
அடிக்கும் குளிர்மழையுடன்
போராடி
உறங்க முயன்று…
பின்னிரவில் கண்ணசந்தவனை
தட்டியெழுப்பிப் போகிறது
ரோந்து வாகன சைரன் ஒலி.
துணி மூட்டையில்
தலைவைத்துப் படுத்திருந்த
வீதியோரத்து பைத்தியம்
காறிக் காறி
வானத்துள் துப்புகிறான்
தூக்கங்கெட்டு.
நரகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு
வேர்த்துக் களைத்து
சொர்க்கத்துள் நுழைந்த கடவுள்
கைக்குட்டை தேடுகிறான்
முகந்துடைக்க.
கவிதை.4
தலைப்பு; அலகு முளைத்த அல்லிகள்
பருவ நீர்க் குளத்துள்
பட்டுப்போன மரத்தின் கிளைகள்,
அடர்த்தியாய் பூத்திருக்கின்றன
அலகு முளைத்த அல்லிகள்
நிலாக் கண்களில் மலர்ந்திடும்
பறிக்க நினைத்தால் பறந்திடும்.
கவிதை.5
தலைப்பு: எ(அ)து.
உருவான(அ)து
சேர்ந்த(அ)து
வளர்ந்த(அ)து
மகிழ்ந்த(அ)து
இருந்த(அ)து
அறிந்த(அ)து
பெருகிய(அ)து
ம௫கிய(அ)து
உ௫கிய(அ)து
பிரிந்த(அ)து
கரைந்த(அ)து
குறைந்த(அ)து
மறைந்த(அ)து
அருவான(அ)து
பொதுவான(அ)து.
- ராகுல் காந்திக்கு சில கேள்விகள் – நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்
- தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீடு
- பணம் காய்க்கும் இளஞ்செடிகள்
- அகிலவியல் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த ஆங்கில மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 21
- வரலாற்றின் சாட்சியமாய் ஈழத்திரைப்படங்கள்
- இவர்களது எழுத்துமுறை – 21 நீல.பத்மநாபன்
- பல்வலி என்பது யாதெனில்…!
- திருமதி ரேவதி சங்கரன் மிக அழகாக சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுக்கிறார்
- மக்கள் கலை இலக்கிய விழா
- கோநா கவிதைகள்
- சிலை பேசினால்
- மௌனம்
- முதிர் இளைஞா…
- ரசிப்பு
- தொலைவின் தூரம்
- ஆங் சான் சூ கீ
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -4
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -3)
- பந்தயங்கள்
- எஸ்தரும் கருப்பண்ணசாமியும்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -9
- பூவா…தலையா…
- முள்பாதை 60
- பரிமளவல்லி 25. திருத்தங்கள்
- இளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்
- ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது.
- பேச மறந்த குறிப்புகள்
- தேனீர் விடுதியின் காலி இருக்கைகள்..
- மீண்டுமொரு மழைக்காலம்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- இன்னுமொரு முறை
- சத்யானந்தன் கவிதைகள்
- மூன்றாம் எண் மதுக்கடையிலிருந்து!
- அருவி