M. ராஜா
சனிக்கிழமை இரவுகள்
—
மண் துகள்களோடு சிகரெட் சாம்பல்
கசங்கிய துணிகள் தாறுமாறாய் சாமான்கள்
பகலில் திருடன் நுழைந்திருப்பனோ?
கதவு வழியாய் நுழைந்த காற்றில்
ஈரப்பசையோடு தாவர வாசனை.
கோடை மழை பெய்திருக்கக்கூடும். எங்கே? எப்போது?
ஜன்னலுக்கு வெளியே-
வேட்டைக்கு செல்லும் வேகத்தில் வாகனங்கள்.
ஒன்றிரெண்டு இரையாகவும் நேரலாம்.
நாட்டு மரங்களை பிடுங்கி
நடப்பட்ட அலங்காரச் செடிகளுக்கு
கோடையிலும் சிரத்தையோடு நீர் பாய்ச்சும்
கார்பரேஷன் லாரி.
பின்னிரவின் பறக்கும் ரயிலில்
காலியாகவே இருக்கின்றன
பெரும்பான்மையான இருக்கைகள்.
இருளின் வெளிச்சமின்மையும் மீறி பளீரென்றிருந்தது
அவளின் முகமும் புன்னகையும்.
இளஞ்சூட்டில் தேநீர் குடித்தால் நன்றாய்த்தானிருக்கும்.
கட்டாய கடமைகள் ஏதும் நாளைக்கில்லை.
சற்று நீளமாகவே கழிகின்றது சனிக்கிழமை பின்னிரவு.
________
ஒரு கனவும் சிறு நிகழ்வும் பெருங்கொலைகளும்
—
வலிக்காம கொல்லுண்ணா
என்றவளின்
ஆசைப்படியே செய்துமுடித்து
சீக்கிரம் சாகடிச்சிடுப்பா
என்ற பாட்டியின்
வேண்டுதலை வெகு சீக்கிரமாகவே நிறைவேற்றி
மெதுவாடி தங்கம்
என்று பயந்த
அம்மாவின் கழுத்தையும் மெதுவாகவே…
0
மழைக்கு முளைத்த மச்சமாய்
படியோரம் படர்ந்திருந்தது அது.
மாத்திரைக்கு
ஒரு மி.மீ கடந்தது.
புகைதுப்பி
உயர்வானில் நகரும் ஊர்தியாய்
ஈரவாலிழுத்து ஊர்ந்தது.
0
மூவரையும்
என் கைகளால் கொன்ற
கனவிலிருந்து திடுக்கிட்டு விழித்தேன்.
0
ஈரந்தெறிக்க
குதிகாலால் நசுக்கிக் கொன்றேன்.
o0o
_______
திணை மயக்கம்
—
மரத்தினடியில்
மழைக்கு ஒதுங்கியது வாகனம்.
உழைத்து களைத்த பெண்ணுக்கு
பூச்சூடிய ஆண் அரணாகும்.
நகராது நிற்கிறது ஒரு உயிர்
அற்றது ஒன்று நகர்கிறது.
மாலை மழையில் இலக்கணம் மயங்கும்.
_______
சந்திர சமுத்திரம்
—
கரித்தொண்டை
விழுங்கிய மெர்க்குரி முட்டை
முழுதாய் கரையவில்லை.
அள்ளி எறிய
நீண்டு நெளியும்
கரங்கள்.
விடமேறி நீலம் பரவும்.
வாயில்
நுரை தள்ளி புரள்கிறது
ஒரு கறுப்பு அமீபா.
ஆணவ உயரத்தில்
அமைதி முறுவலிக்கும்.
________
- ரகசியம் பரம ரகசியம்
- இவர்களது எழுத்துமுறை -19 -வல்லிக்கண்ணன்
- ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடல்களில் தொல்காப்பிய களவியற் கூறுகள்
- இலக்கியவாதிகளும் சோளக்காட்டு பொம்மையும்
- கம்பன் காட்டும் விதி
- வே. பிச்சுமணி அவர்கள் எழுதிய ஆங் சான் சூ கீ
- வடக்கு வாசல் இணையதளம் மற்றம் யமுனை
- ஓவியர் V.P. வாசுகன் ,V.P.Vasuhan ஓவிய கண்காட்சி
- வண்ணதாசனின் ஒட்டுதல் படித்தேன்
- ஆபத்து
- கேள்விகளால் வாழும் மரணம்
- கானல் வஞ்சம்
- சடலாய்வு
- புத்தமாவது
- உன்னோடு நீ..
- சலன மழை!
- லதாமகன் கவிதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -1)
- நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’யும்.. ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ தொகுப்பும்..
- மறுபக்கம்-பொன்னீலன் (இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறுகளின் மறுபக்கம்)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 20
- கிட்டிப் புள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -8
- டிசம்பர் 11: பாரதியார் பிறந்த நாள் சிறுகதை – ஸுப்ரபாதம்
- ஆயிரங்கால் மண்டபம்
- முள்பாதை 59
- பரிமளவல்லி 24. சந்தேகங்கள்
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
- ஒரு பாக்டீரியாவின் கனவு..
- ஆதிவண்ணம்
- துடித்தலும் துவள்தலும்
- M. ராஜா கவிதைகள்
- கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது நிழல்..
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கவிதைப் பயிலரங்கின் தொடர் நடவடிக்கையாகப் படைக்கப்பட்ட கவிதைகள்
- கைப் பிடியின் பிடிவாதம்
- அம்மாவின் கேள்வி
- வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] (1625-1712)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3