தேனம்மை லெக்ஷ்மணன்
தீட்டு
**************
பாத்ரூம் போனால்
காவலாய் சத்தகம்..
படுக்கை பக்கம்
தடுப்பாய் உலக்கை.
தலைக்குக் குளித்தாலும்
மூன்றுநாள் தீண்டத்தகாதவளாகி
தனித்தட்டு., தனி டம்ளர்..
தனி நாடு கேட்காத
எனக்கு தனியிடம்..
துண்டு நிலம்..
தோல் தலையணை..
கிணறு வற்றிவிடும்.,
செடி பட்டுவிடும்..
ஊறுகாய் கெட்டுவிடும்.
கருப்பை சூல் சுமக்க
மகரந்தம் பக்குவமாக்கும்
பருவத்தின் சுழற்சி இது,..
சாமி படைத்த என்னை
மறைக்க சாமிக்கு
ஏன் திரைச்சீலை..
பின் குழந்தைகளோடு
இருக்கும் கடவுளர்கள் மட்டும்
எப்படி தீட்டுக்களற்று..
——————–
மழை…
****************
* பெயிண்ட் அடிப்பவனைப் போல
ஈரவண்ணம் அடித்துக்
கொண்டிருந்தது மழை….
* மதியம் புகுந்து
மஞ்சள் வண்ணமடித்துக்
கொண்டிருந்தது வெய்யில்..
* இரண்டும் கோர்த்து
பாலமாக்கி ஏழுவர்ணம் அடித்துக்
கொண்டிருந்தது வானம்…
********************************************
மழை தொல்லை தாங்கலை
புலம்பிக் கொண்டிருந்தார்கள் இளைஞர்கள்..
மெசெஜ் மழை பொழியும் காதலி பார்த்து..
************************************************
குடையோடு நடந்து
கொண்டிருந்தார்கள் மனிதர்கள்..
மழையும் நடந்து
கொண்டிருந்தது அவர்களோடு..
***********************************************
பால்கனியிலிருந்து சிதறிய
அவள் கூந்தல் ரோஜாக்கள்
மழை நதியில் பாய்மரக் கப்பலாய்
மிதந்து வந்து கொண்டிருந்தது
என் வீடு நோக்கி..
———————————————————————-
கல்யாணமுருங்கை:-
***********************************
கோலமாவில் தோய்ந்த முஷ்டிகளால்
உன் பாதங்கள் வரைகிறேன்…
சீடைகள் செய்யத் தெரியாததால்
வெண்ணை கடைந்து வைத்திருக்கிறேன்..
நீ பிடிப்பிடியாய் உண்ணும் அவலும் கூட..
விஷம் கக்கும் பூதனை., காளிங்கன்
இல்லை இங்கு..
அன்பைக் கக்கும் நான் மட்டுமே..
வருடம் ஒரு முறை
வருகிறாய் வீட்டுக்குள்..
என் வயிற்றில் ஒருமுறையாவது வாயேன்..
உறைபனியிலிருந்து
குழாய் வழிப் பயணத்திலோ…
தொட்டிலில் இருந்து தத்தாகவோ…
————————————————————————–
நசிகேதன் அக்னி..:-
************************
முன்னையிட்டதும்.,
பின்னையிட்டதும்.,
அன்னையிட்டதும்.,
என்னையிட்டதும்…
மண்ணில் பிறந்ததும்.,
மண்ணை பேர்த்ததும்..
தீக்குள் நுழைந்ததும்..
மண்ணில் புதைந்ததும்..
எந்தன் செயலல்ல..
மந்தன் செயலதோ..
சந்தேகங்களை
தேகம் சுமப்பதோ..
மண்ணை ஆளவும்.,
விண்ணை ஆளவும்
அஸ்வமேத யாகப்
பெண் பொம்மை போதுமே..
உந்தன் யாகத் தீ..
என்னை ஆ(க்)குதீ…
நீ நிறை சொர்க்கம் ஏக
நான் நசிகேதன் அக்னி..
- செந்தமிழ் நகர்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- புதிய பூமியின் சூழ்வெளி வாயு மண்டலத்தை முதன்முதல் அளந்த விண்வெளித் தொலைநோக்கி ! (கட்டுரை 55 பாகம் -2)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 19
- இவர்களது எழுத்துமுறை – 18 எம்.டி.வாசுதேவன் நாயர்
- “பழமொழிகளில் வேளாண்மைச் செய்திகள்“
- நட்பாராய்தல்
- பெண்கள் சந்திப்பு 2010
- கடைசி வேட்டை
- நிலா இரவு!
- மகிழ்வின் நிறம்..
- சட்டென ஒரு மழையிரவு:
- மிதித்தலும் மன்னித்தலும்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273)கவிதை -26 பாகம் -2 என்னருகில் வராதே
- எண்ணப்பிழை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)(கவிதை -37 பாகம் -4) வாழ்க்கையைப் பற்றி
- சிவப்பு மின்மினிகள்
- ஆன்மாவின் ஈடேற்றம்
- வைதேகி காத்திருப்பாள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -7
- காலடித் தடங்கள் அற்ற ஓர் உலகம்
- முகடுகள்
- பரிமளவல்லி 23. அகல்விளக்கு
- முள்பாதை 58
- நினைவுகளின் சுவட்டில் – (58)
- ஆங் சான் சூ கீ
- 64 துண்டுகள்..
- உயிர்
- கிளைகளுக்கிடையேயான ஒளிவெளியில் தொங்கும்கனி
- குழி
- நிர்வாண வார்த்தைகள்
- சிந்தனை
- அவனறியா பொழுதில்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 8 மற்ற நாடுகளுக்கு ஒளியாக(A Light Unto The Nations)