ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++
கணவன் மனைவிக்குள் தர்க்கம்
+++++++++++++++++++++++++
கணவன் கூறிய பதில் :
++++++++++++++++++++++
எத்தனை நாட்கள் பணமின்மை பற்றி
இப்படிப் புகார் செய்வாய் ?
வக்கில்லாத போக்கைச் சொல்லி
வசை பாடுவாய் ?
வாடிய நாட்கள் பெரும்பாலும்
ஓடிப் போயின !
ஓயப் போகும் இந்த
மாறும் நிலை எண்ணிச்
சீறுவது ஏன் ?
விலங்கினம் எப்படி வாழுதென்று
சிந்தித்துப் பார் !
கிளையில் அமர்ந்து
களிப்போ டுள்ளது புறா !
கான மழை பொழியுது
கருங்குயில் !
மின்மினியும் யானையும்
படைத்தவன் மீது
நம்பிக்கை வைக்கும்
தம் உணவுக்கு !
++++++++++++++
நீ படும் இடர்களே உனக்கு
நெறி கூறும் போதகர் !
கேள் அவற்றைக் கவனமாய் !
இனிமை யாக்கு துயர்களை எல்லாம் !
ஏறக் குறைய
காரிருள் நீங்கி விட்டது !
ஒருமுறை வரும் இளமையின் போது
திருப்தியாய் இருந்தாய் !
அதிருப்தியில் இப்போது
அவதிப் படுகிறாய்
எல்லா வேளையும் !
செல்வத்தில் புரண்டாய்
ஒரு காலத்தில் !
செழித்த முந்திரிப் பழமாய்
மிளிர்ந்தாய் !
அழுகிப் போன பழம் நீ
இப்போது !
இனிமை படிப் படியாய் உயர
வளர வேண்டும் நீ !
தீயவளாய்
நீ மாறி விட்டாய் !
மனைவி யான நீ
இணை யானவள் எனக்கு !
இரட்டைச் செருப்பில்
ஒரு செருப்பு
இறுக்கமாய் இருந்தால் பயனின்றி
இரண்டும் வீணாகும் !
இணையாய்ப் பொருந் தாத
இரு கதவுகள் நாம் !
ஓநாயுடன் புணராது
ஒரு சிங்கம் !
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 30 2010)
- செந்தமிழ் நகர்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- புதிய பூமியின் சூழ்வெளி வாயு மண்டலத்தை முதன்முதல் அளந்த விண்வெளித் தொலைநோக்கி ! (கட்டுரை 55 பாகம் -2)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 19
- இவர்களது எழுத்துமுறை – 18 எம்.டி.வாசுதேவன் நாயர்
- “பழமொழிகளில் வேளாண்மைச் செய்திகள்“
- நட்பாராய்தல்
- பெண்கள் சந்திப்பு 2010
- கடைசி வேட்டை
- நிலா இரவு!
- மகிழ்வின் நிறம்..
- சட்டென ஒரு மழையிரவு:
- மிதித்தலும் மன்னித்தலும்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273)கவிதை -26 பாகம் -2 என்னருகில் வராதே
- எண்ணப்பிழை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)(கவிதை -37 பாகம் -4) வாழ்க்கையைப் பற்றி
- சிவப்பு மின்மினிகள்
- ஆன்மாவின் ஈடேற்றம்
- வைதேகி காத்திருப்பாள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -7
- காலடித் தடங்கள் அற்ற ஓர் உலகம்
- முகடுகள்
- பரிமளவல்லி 23. அகல்விளக்கு
- முள்பாதை 58
- நினைவுகளின் சுவட்டில் – (58)
- ஆங் சான் சூ கீ
- 64 துண்டுகள்..
- உயிர்
- கிளைகளுக்கிடையேயான ஒளிவெளியில் தொங்கும்கனி
- குழி
- நிர்வாண வார்த்தைகள்
- சிந்தனை
- அவனறியா பொழுதில்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 8 மற்ற நாடுகளுக்கு ஒளியாக(A Light Unto The Nations)