தேனம்மை லெக்ஷ்மணன்
விட்டுப் போனவை:-
******************************
ஒரு கோப்பைக்குள் பாதரசமாய்
ஏந்தி இருந்தாய் உன் கனவை..
காலம் தீர்ந்த அவகாசத்தில்
கையளித்துச் சென்றாய் என்னிடம்..
குழியாடிக் குவியாடிக்
கண்களாடிக் கலந்தேன்…
நகரும் வெள்ளிக் கண்ணாடியில்..
அதிகமசைந்து
தங்கம் துளைந்தாடியது அது..
இன்ப அதிர்ச்சியோ என்னவோ..
கை தவறிப் போட்டுடைத்தேன்..
குன்றிமணிகளாய்த் தரையில் சிதறி..
அமில ஓட்டைகள்
கத்தரித்திருந்த
சோதனைச்சாலை அங்கியோடு.,
தவழ்ந்தேன் தரை முழுதும்..
ஒன்று சேர்த்துக் கோர்த்துவிடலாமென..
—
வெறுப்பு..:-
******************
கொலைக்கத்திகளும்
கொம்பின் முனைகளும்
முத்தமிடும் உலகில்
தாவரமாகவோ
காய்கறியாகவோ வாழ்வது..
கத்திரிக்கோல்களால்
நறுக்கப்படவே தினம்
செய்வதறியாது சிரிக்கும்
செந்நிற ரோஜாவாய் பூத்திருப்பது..
வீட்டின் மேல் பழையதும்
வேண்டாததும் போட்டு
அடைக்கும் பரணாயும்.,
ட்ரங்குப் பெட்டியாயும் இருப்பது..
காலடி எடுத்து
வாசலில் வைத்தாலே
திருவிழாவோ., தெப்பமோ,
தேரோ., உலாவோ செல்லும்
அம்மனாய்த் தோன்றுவது..
பூப்பல்லக்குகளும்., வாகனங்களும்.,
கோமடங்களும்., செங்காவியும் சூழ.,
வணக்கத்திற்குரிய சிலையாய்
சிறையுண்டிருப்பது..
===
கனவு..:-
*************
ஓவிய வகுப்பில்
ஓயாமல் பென்சில் திருகி
முனை ஒடித்துக்
குட்டு வாங்கிய
குழந்தையின் இரவில்….
சாபமிட்டு விரலமுறிக்கும்
கொடுந்தேவதைகள்
முளைத்துக் கிடந்தார்கள்
கனவெங்கும்..
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 18
- விடாது நெருப்பு
- முதல்மழை
- நறுமணமான பாடலொன்று
- அகிலத் தூசியும், வாயு முகிலும் உருவாக்கும் கேலக்ஸி ஒளிமந்தைகள் (கட்டுரை: 4)
- இவர்களது எழுத்துமுறை – 17 தி.ஜானகிராமன்
- முகமூடி!
- வல்லரசு!
- நகைப்பின் ஒற்றைத் தீக்கீற்று மௌனத்தில் உருகி வழிகிறது…!!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) “என்னை மயக்கியவள்” )(கவிதை -37 பாகம் -3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதீர் கவிதை -26 பாகம் -1
- தாழ்ப்பாள் இல்லா கதவுகள்!
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- ரகசியங்கள்
- சரியாய் உலகில் வாழ்ந்துவிடு
- சாட்சிகளேதுமற்ற மழை
- ஓயாத கடலொன்று..
- கொசு
- முடிச்சு -குறுநாவல்
- ‘கண்கள் இரண்டும்…..’
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -6
- வாரிசு
- வன்முறை
- பரிமளவல்லி 22. தேறுதல்
- முள்பாதை 57
- நினைவுகளின் சுவட்டில் – (57)
- அறமே சிவம்! சிவன் சொத்து…? அலைக்கற்றை மற்றும் தொலை தொடர்பு துறை ஊழல் தொடர்பாக – ஒரு முழுகவிதையே இடக்கரடக்கலாக!
- வாங்க, மரபணு சாப்பிடுவோம்!!
- தன்னம்பிக்கை
- சருகுகள்
- எதிர்ப்படும் கையகல நீர்மை…
- ’ரிஷி’யின் கவிதைகள்
- சிங்கப்பூர் எழுத்தாளர் தக்கலை எச்.முகமது சலீமின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஹெச்.ஜி.ரசூல் கவிதை
- இருட்டும் தேடலும்