ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++++++++++
என்னருகில் வராதீர்
++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++
கணவன் மனைவிக்குள் தர்க்கம்
+++++++++++++++++++++++++
மனைவியின் புகார் :
++++++++++++++++++++
பாலைவன நாடோடி களின்
குடிசை ஒன்றில்
பதியிடம் கேட்பாள் பத்தினி :
“எல்லோரும்
வளமொடு வாழ்கிறார்
களிப்புடன் நம்மைத் தவிர !
உண்ண உணவில்லை !
உப்பு மிளகாய் ஒன்று மில்லை !
குடிலில் நீர்க்குடம் இல்லை
தேவைக்கு உடுப்பில்லை
போர்த்திக் கொள்ளப்
போர்வை இல்லை இரவில் !
முழு நிலவே அப்பம் என்று
கற்பனை
செய்து கொள்வோம் !
தேடிச் செல்வோம் நாம்
ஓடிப் பெற்றிட !
பிச்சைக் காரரும் திகைப்புறுவார்
நம்மைத்
துச்சமாய் எண்ணி !
நம்மை விட் டெல்லோரும்
விலகிச் செல்வார் !
பரிவு நிரம்பிய போராளியாய்
அறியப் படுவர்
அரேபியர்.
பார் உன்னை நீயே
படி தடுமாறி விழுகிறாய் !
வீட்டுக்கு விருந்தாளி வந்தால்
கிழிந்த அவனது
வேட்டியைத் திருடுவோம்
தூக்கத்தில் அவன்
விழுந்து கிடக்கையில் !
இந்த வழியில் உம்மைத் தள்ளும்
விந்தை வழிகாட்டி யார் ?
கைப்பிடி அளவுப் பருப்பும்
கைவச மில்லை !
பத்தாண்டு தாம்பத்திய வாழ்வின்
மெத்த விளைவுகள் இவை !
கடவுள் எங்கு மிருந்தால் போலிக்
கயவரை நாம் ஏன்
கண்மூடிப் பின்செல வேண்டும் ?
நமக்கு யார்
நல் வாழ்வுக்கு வழி காட்டுவது ?
நாளை ஒளிமய மாகி
வாழ்வில் செல்வம் குவியும்
என்று ஏமாற்றும்
போலிக் குருவா ?
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 23 2010)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 18
- விடாது நெருப்பு
- முதல்மழை
- நறுமணமான பாடலொன்று
- அகிலத் தூசியும், வாயு முகிலும் உருவாக்கும் கேலக்ஸி ஒளிமந்தைகள் (கட்டுரை: 4)
- இவர்களது எழுத்துமுறை – 17 தி.ஜானகிராமன்
- முகமூடி!
- வல்லரசு!
- நகைப்பின் ஒற்றைத் தீக்கீற்று மௌனத்தில் உருகி வழிகிறது…!!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) “என்னை மயக்கியவள்” )(கவிதை -37 பாகம் -3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதீர் கவிதை -26 பாகம் -1
- தாழ்ப்பாள் இல்லா கதவுகள்!
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- ரகசியங்கள்
- சரியாய் உலகில் வாழ்ந்துவிடு
- சாட்சிகளேதுமற்ற மழை
- ஓயாத கடலொன்று..
- கொசு
- முடிச்சு -குறுநாவல்
- ‘கண்கள் இரண்டும்…..’
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -6
- வாரிசு
- வன்முறை
- பரிமளவல்லி 22. தேறுதல்
- முள்பாதை 57
- நினைவுகளின் சுவட்டில் – (57)
- அறமே சிவம்! சிவன் சொத்து…? அலைக்கற்றை மற்றும் தொலை தொடர்பு துறை ஊழல் தொடர்பாக – ஒரு முழுகவிதையே இடக்கரடக்கலாக!
- வாங்க, மரபணு சாப்பிடுவோம்!!
- தன்னம்பிக்கை
- சருகுகள்
- எதிர்ப்படும் கையகல நீர்மை…
- ’ரிஷி’யின் கவிதைகள்
- சிங்கப்பூர் எழுத்தாளர் தக்கலை எச்.முகமது சலீமின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஹெச்.ஜி.ரசூல் கவிதை
- இருட்டும் தேடலும்