கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதீர் கவிதை -26 பாகம் -1

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++
என்னருகில் வராதீர்
++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++
கணவன் மனைவிக்குள் தர்க்கம்
+++++++++++++++++++++++++

மனைவியின் புகார் :
++++++++++++++++++++

பாலைவன நாடோடி களின்
குடிசை ஒன்றில்
பதியிடம் கேட்பாள் பத்தினி :
“எல்லோரும்
வளமொடு வாழ்கிறார்
களிப்புடன் நம்மைத் தவிர !
உண்ண உணவில்லை !
உப்பு மிளகாய் ஒன்று மில்லை !
குடிலில் நீர்க்குடம் இல்லை
தேவைக்கு உடுப்பில்லை
போர்த்திக் கொள்ளப்
போர்வை இல்லை இரவில் !
முழு நிலவே அப்பம் என்று
கற்பனை
செய்து கொள்வோம் !
தேடிச் செல்வோம் நாம்
ஓடிப் பெற்றிட !
பிச்சைக் காரரும் திகைப்புறுவார்
நம்மைத்
துச்சமாய் எண்ணி !
நம்மை விட் டெல்லோரும்
விலகிச் செல்வார் !
பரிவு நிரம்பிய போராளியாய்
அறியப் படுவர்
அரேபியர்.
பார் உன்னை நீயே
படி தடுமாறி விழுகிறாய் !
வீட்டுக்கு விருந்தாளி வந்தால்
கிழிந்த அவனது
வேட்டியைத் திருடுவோம்
தூக்கத்தில் அவன்
விழுந்து கிடக்கையில் !
இந்த வழியில் உம்மைத் தள்ளும்
விந்தை வழிகாட்டி யார் ?
கைப்பிடி அளவுப் பருப்பும்
கைவச மில்லை !
பத்தாண்டு தாம்பத்திய வாழ்வின்
மெத்த விளைவுகள் இவை !
கடவுள் எங்கு மிருந்தால் போலிக்
கயவரை நாம் ஏன்
கண்மூடிப் பின்செல வேண்டும் ?
நமக்கு யார்
நல் வாழ்வுக்கு வழி காட்டுவது ?
நாளை ஒளிமய மாகி
வாழ்வில் செல்வம் குவியும்
என்று ஏமாற்றும்
போலிக் குருவா ?

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 23 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts