மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“நேற்று நாம் வேந்தருக்கு மண்டியிட்டு வந்தனம் செய்தோம் ! சுல்தான்களுக்குத் தலை குனிந்து வணக்கம் தெரிவித்தோம் ! இப்போது நாம் நற்பணியாளர் தவிர வேறு எவருக்கும் மதிப்பு அளிப்பதில்லை. மனித நேயத்துக்கும், அழகுத்துவம் தவிர வேறு எதனையும் நாம் வணங்குவதில்லை.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
+++++++++++++++++++
ஓடிப் போன என் காதலி
+++++++++++++++++++
(முன்வாரத் தொடர்ச்சி)
+++++++++
வாழ்க்கை என்பதோர் கவர்ச்சி மாது !
வீழ்த்தி விடுவாள் தன் எழிலைக் காட்டி !
விளையாட்டுத் தனத்தைத் தெரிந்தவன்
விலகிச் செல்வான் கவர்ச்சியை உதறி !
+++++++++++
என்னிதயம் நேசித்த
அந்த மாது
ஓடிப் போய் விட்டாள் !
ஏதோ ஓரிடத்துக்கு
குளிர்ப் பிரதேசம் அது !
எவரும் வசிக்க முடியாத
இடம் அது !
வெகு தூரத்தில் உள்ளது !
++++++++
என்னிதயம் காதலித்த
அந்த மாது
“இல்வாழ்க்கை” எனப்படுவது !
எழிலானவள் அவள்
எவரையும்
கவர்ந்து தன்வசம் இழுப்பவள் !
நமது உயிரைப்
பகடை ஆடுபவள் அவள் !
வாக்குறுதி களைப்
காக்காமல்
நழுவிச் செல்பவள் அவள் !
++++++++++
“இல்வாழ்க்கை” என்பது
காதலர் சொட்டும்
கண்ணீரில் குளிக்கும்
ஒரு வனிதை !
அவளது மாயத் துக்குப்
பலியாவோர்
சிந்தும் குருதியில்
ஞானக் குளிப்பு செய்பவள் !
இரவெனும் கரை பூண்ட
வெண்ணிறப் பகல் ஆடை
உடுத்தியள் அவள் !
மனித இதயத்தைக்
காதலனுக்குப்
பணிய வைப்பவள் அவள் !
ஆனால்
தனக்கு மட்டும்
திருமணம் முடிய
மறுப்பளிப் பவள் அவள் !
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 22 2010)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 18
- விடாது நெருப்பு
- முதல்மழை
- நறுமணமான பாடலொன்று
- அகிலத் தூசியும், வாயு முகிலும் உருவாக்கும் கேலக்ஸி ஒளிமந்தைகள் (கட்டுரை: 4)
- இவர்களது எழுத்துமுறை – 17 தி.ஜானகிராமன்
- முகமூடி!
- வல்லரசு!
- நகைப்பின் ஒற்றைத் தீக்கீற்று மௌனத்தில் உருகி வழிகிறது…!!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) “என்னை மயக்கியவள்” )(கவிதை -37 பாகம் -3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதீர் கவிதை -26 பாகம் -1
- தாழ்ப்பாள் இல்லா கதவுகள்!
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- ரகசியங்கள்
- சரியாய் உலகில் வாழ்ந்துவிடு
- சாட்சிகளேதுமற்ற மழை
- ஓயாத கடலொன்று..
- கொசு
- முடிச்சு -குறுநாவல்
- ‘கண்கள் இரண்டும்…..’
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -6
- வாரிசு
- வன்முறை
- பரிமளவல்லி 22. தேறுதல்
- முள்பாதை 57
- நினைவுகளின் சுவட்டில் – (57)
- அறமே சிவம்! சிவன் சொத்து…? அலைக்கற்றை மற்றும் தொலை தொடர்பு துறை ஊழல் தொடர்பாக – ஒரு முழுகவிதையே இடக்கரடக்கலாக!
- வாங்க, மரபணு சாப்பிடுவோம்!!
- தன்னம்பிக்கை
- சருகுகள்
- எதிர்ப்படும் கையகல நீர்மை…
- ’ரிஷி’யின் கவிதைகள்
- சிங்கப்பூர் எழுத்தாளர் தக்கலை எச்.முகமது சலீமின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஹெச்.ஜி.ரசூல் கவிதை
- இருட்டும் தேடலும்