கோமதி நடராஜன்
—————-
தண்ணீருக்கு இத்தனை பெயரா?
உள்ளிருந்து புறப்பட்டால்
ஊற்று.
விண்ணிலிருந்து வீழ்ந்தால்
மழை.
உயரத்திலிருந்து இறங்கினால்
அருவி.
சமதளத்தில் பயணித்தால்
ஆறு.
தேக்கி வைத்தால்
ஏரி.
பள்ளம் கண்டு பதுங்கினால்
குளம்.
பயணம் முடிந்தபின்
கடல் என்று,
இடம் பொருத்து
காலம் பொருத்து நீ,
பெயர் மாறி உருமாறி ,
உலவும் போது,
நமக்கும்தானே பல பெயர்கள்.
பிள்ளைகளாய்
உறவுகளாய்
பெற்றோராய்
நண்பர்களாய
தொடங்குகிறோம்.
காலப்போக்கில் ,
அடுத்தவர் கண்ணுக்கு,
நேற்று,நல்லவனாய்
இன்று,தீயவனாய்,
தேவைக்கு,நண்பனாய்
அடுத்த நொடி,பகைவனாய்,
காரியத்துக்குவேண்டியவனாய் ,
முடிந்தபின், வேண்டாதவனாய் ,
சரியென்றிருந்தால்புத்திசாலியாய்
ஏனென்று கேட்டால்பைத்தியமாய்
உருண்டு புரண்டு ,
கடலோடு சங்கமிக்கும் வரை ,
பயணிக்கிறோம்.
மீண்டும் மீண்டும்
பிறக்கிறோம்
நதியென ஓடி கலக்கின்றோம்.
இதில் எந்த பெயர் நிலைக்கும்?
ஊனும் உயிருமே நிலையென்றால்
பெயர் மட்டும் எப்படி நிலைக்கும்?
————–
- முள்பாதை 56
- இதமானதொரு நகைப்பு …!
- தண்ணீரும் நாமும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் வடதுருவத்தில் ஆறுகரச் சட்ட அலைமுகில் (Hexagonal Wave) கண்டுபிடிப்பு ! (கட்டுர
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 17
- இவர்களது எழுத்துமுறை – 16 -சா.கந்தசாமி
- “மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை“ (தொடர்ச்சி-3)
- ஈழப்போராட்டம் பற்றிய நாட்குறிப்பு புத்தகம்
- சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி.
- குழந்தை
- இடம்பெயர் முகாமிலிருந்து
- அவள் சொன்ன காதல்!
- விடியாக்கனவு
- தீர்வும்.. தெளிவும்!!!
- சத்யானந்தன் கவிதைகள்
- வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள்
- பரிமளவல்லி 21. க்ளின்டாமைசின்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -5
- கள்வர்க்கு இரவழகு
- பெயர்வு
- இரண்டு சொர்க்கங்கள் விளிம்பின் மொழி
- டாக்கா: பிசாசு நகரம்
- லிவ்விங் டுகெதர் – கலாச்சார புற்றுநோய்.
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 7 The Evolutionary Point பரிணாமவியலின் பார்வையில்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிரிவின் நினைவுகள் கவிதை -25
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -2
- உருத்தலில் உருவாகி
- வினோத மலரொன்றின் இதழ் நுனி..