முழுமை

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

காளி நேசன்



உலகில் எதுவும் முழுமையற்றது என்று
உன்னிடத்தில் உரைத்த கணத்தில் உதித்த
ஒரு பறவையின் பாடல் கேட்ட
நினவுடன் பதித்த மரக்கன்று
ஓங்கி உயர்ந்து நிற்க்கிறது உயர் காதலை போல!
எதையோ எதிர்பார்த்து உறைந்து நிற்க்கிறது
மரமாக எங்கும் நகராமல்
ஒரு காதல் நினைவை போல!
அதில் வந்தமரும் பறவைகள் கீதமாக இசைக்கும்
காலத்தில் உறைந்து நிற்க்கும் ஒரு காதலை!
காற்றில் மிதந்து வரும் அக்கீதத்தில்
உயிர்த்தெழும் ஒரு முழுமையான இன்மை!

Series Navigation

author

காளி நேசன்

காளி நேசன்

Similar Posts