கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -2

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
புல்லும் கிளையும்
++++++++++++++
++++++++++++++
படைப்பின் அடுக்குகள்
++++++++++++++

(முன்வாரத் தொடர்ச்சி)

விண்வெளியில் ஆழியைச்
சுழற்றி விடுவது யார் ?
பிரபஞ் சத்தின்
பேரறிஞன் !
நீரோட்டம் சுற்ற வைக்கும்
ஆழிபோல் உடலைச்
சீராக இயக்குவது
ஆன்மா !
மூச்சை உள்ளிழுக்கச் செய்வதும்,
வெளியே தள்ளுவதும்
ஆன்மா புரிவதே !

++++++++++

ஒரு கணத்தில் சினம்
மூட்டுவதும்
அடுத்த கணத்தில்
அமைதி உண்டாக்குவதும்
ஆன்மாவே !
இறைவனைத் தவிர
இல்லை ஓர் மெய்த்துவம்
என்று சொல்கிறார்
தன்னை முழுமை யாக
அர்ப்பணம் செய்த
குருநாதர் !
மனித இனத்துக்குப்
புனிதக் கடல் போன்றவர் !

+++++++++++

படைப்பின் அடுக்குகள் எல்லாம்
கடலின் துடுப்புகள் !
துடுப்பின் அசைவுகள்
கடலில் அலைகள் எழுப்புவதால்
தொடர்பவை !
துடுப்புகளை எல்லாம்
கடல் ஓய வைக்க
துரத்தி விடும் கரையோரம் !
மீண்டும் கொந்தளிப்பில் அவை
வேண்டப் பட்டால்
புயல் அடித்து வளைக்கும்
புல்லிலை போல் !
நில்லாது இந்த நிகழ்ச்சி
ஒருபோதும் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 18 2010)

கவிஞானி ரூமியின் கவிதைகள்
(1207 -1273)

++++++++++++++
புல்லும் கிளையும்
++++++++++++++

கவிதை -23 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
படைப்பின் அடுக்குகள்
++++++++++++++

(முன்வாரத் தொடர்ச்சி)

விண்வெளியில் ஆழியைச்
சுழற்றி விடுவது யார் ?
பிரபஞ் சத்தின்
பேரறிஞன் !
நீரோட்டம் சுற்ற வைக்கும்
ஆழிபோல் உடலைச்
சீராக இயக்குவது
ஆன்மா !
மூச்சை உள்ளிழுக்கச் செய்வதும்,
வெளியே தள்ளுவதும்
ஆன்மா புரிவதே !

++++++++++

ஒரு கணத்தில் சினம்
மூட்டுவதும்
அடுத்த கணத்தில்
அமைதி உண்டாக்குவதும்
ஆன்மாவே !
இறைவனைத் தவிர
இல்லை ஓர் மெய்த்துவம்
என்று சொல்கிறார்
தன்னை முழுமை யாக
அர்ப்பணம் செய்த
குருநாதர் !
மனித இனத்துக்குப்
புனிதக் கடல் போன்றவர் !

+++++++++++

படைப்பின் அடுக்குகள் எல்லாம்
கடலின் துடுப்புகள் !
துடுப்பின் அசைவுகள்
கடலில் அலைகள் எழுப்புவதால்
தொடர்பவை !
துடுப்புகளை எல்லாம்
கடல் ஓய வைக்க
துரத்தி விடும் கரையோரம் !
மீண்டும் கொந்தளிப்பில் அவை
வேண்டப் பட்டால்
புயல் அடித்து வளைக்கும்
புல்லிலை போல் !
நில்லாது இந்த நிகழ்ச்சி
ஒருபோதும் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 18 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts