மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++
இயற்கையும், மனிதனும்
++++++++++++++
“நேற்று காலத்தைப் பற்றிப் புகார் செய்தோம். அது விளைவித்த கொடுஞ் செயல்களை எண்ணி நாம் நடுநடுங்கினோம். ஆனால் இன்று நாமதை விரும்பி மதிக்கக் கற்றுக் கொண்டு விட்டோம். ஏனெனில் இப்போது அதன் நோக்கம், இயற்கைப் பண்பாடு, ரகசியம், மர்மம் அனைத்தும் நமக்குப் புரிகின்றன.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
+++++++++++++++++++
இயற்கையும், மனிதனும்
+++++++++++++++++++
பொழுது புலர்ந்ததும்
புல்வெளியில் அமர்ந்தேன்
இயற்கை யோடு உரையாட !
மனிதன் அமைதி யாய்த்
தூக்க
மயக்கத்தில் கிடந்தான் !
மனத்தை ஒருமைப் படுத்திச்
சிந்தித்ததில்
வினா ஒன்று எழுந்தது :
“சத்தியம் என்பது
அழகுத் துவமா ? அல்லது
அழகுத்துவம் என்பது
சத்தியமா ?”
+++++++++
சிந்தனை எனைத் தூக்கிச்
சென்றது
மனித இனத்துக் கப்பால் !
என் தனித்துவ உள் ஒளியைப்
போர்த்தி யுள்ள துணியை
நீக்கியது என்
கற்பனை !
என் ஆத்மா விரிந்தது !
இயற்கையின் நெருக்கத்தில் நான்
பெயர்ந்தேன் ! அதன்
மர்மத்தில் மலர்ந்தேன் !
செவிகள் திறந்தன
இயற்கையின்
வியப்புக்களை வரவேற்க !
+++++++++++
சிந்தனையில் ஆழ்ந்திருந்த
தருணம்
மரக் கிளைகள் ஊடே
தென்றல் வீசியதை
உணர்ந்தேன் !
காதில் விழுந்தது
திரியுமோர் அனாதை விடும்
வேதனை மூச்சு !
“பெரு மூச்சு விடுவதேன்
தென்றலே”
என்று நான் வினவினேன் !
தென்றல் சொன்னது :
“பரிதிக் கனல் மிகுந்த
நகரை விட்டு
நான் வருகிறேன்;
நோயும் நாற்றமும் தீண்டிய
வாயுக்கள்
ஒட்டுமென் ஆடையில் !
அதனால்
அழுதிடும் என்மேல் நீ
பழி சுமத்து வாயா ?”
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 18 2010)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -1
- ஹப்பிள் தொலைநோக்கி புரிந்த ஐம்பெரும் சாதனைகள் !(கட்டுரை -2)
- புளியன்கொம்புகளின் முள்ளங்கிகள்! அறுவடை செய்யுமா அமுக்கி வாசிக்குமா, காங்கிரஸ் அரசு?
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி
- sanskrit lessons
- தரிசனம் எஸ் ஜெயலட்சுமி
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்
- முள்பாதை 52
- பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா
- ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் —- நான் நிழலானால்
- அரும்புகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -2
- நூல் எரிப்பு
- மழையின் மொழி
- திமிர்க் காற்றும், விளை நிலமும்
- தந்தையாதல்
- யாரும் சொல்லிக் கேட்டிராத கதை..
- சுழல்
- இவர்களது எழுத்துமுறை – 12 ஜெயகாந்தன்
- தில்லையில் மீண்டும் பெரியபுராணம்
- பரிமளவல்லி – 17. ப்ரூவர் பாட்ஸ்
- போதாத காலம்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 3யார் மனிதர்?( Who Is Human? )
- “ஒரு தீரரின் பயணம்“
- தன் விரல்களை துண்டித்த சூபி
- முழுமை
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- துப்பாக்கியே அழிந்துவிடு
- பழகும் நாட்களின் பரிவர்த்தனை..
- மொழியாள்
- செல்வராஜ் ஜெகதீசன்.கவிதைகள்
- வினையிலி – இல்லாத ஒன்று
- ஏமாற்றங்களின் அத்திவாரம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 14
- மலையாளக் கவிஞர் அய்யப்பனின் மரணம்
- உறக்கம்