ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++
புல்லும் கிளையும்
++++++++++++++
++++++++++++++
படைப்பின் அடுக்குகள்
++++++++++++++
ஒரே காற்றுதான்
வேரோடு மரங்களை வீழ்த்திப்
புல்லின் இலைகளை
வில்லாய் வளைத்து
மின்னிடச் செய்யுது !
தெய்வீகக் காற்று
இலைகளின்
பலவீனத்தை நேசிக்கும் !
பணிவையும் விரும்பும் !
பராக்கிரமம் தன்னிடம் உள்ளதைப்
பீற்றிக் கொள்வ தில்லை
காற்று
ஒரு போதும் !
+++++++++++
வெட்டித் துண்டாக்கும்
கோடரி
கிளைகளின் தடிப்பைக்
கண்டு
கவலைப் படாது !
இலைகளின் விதி வேறு
அவற்றை விட்டு
விலகிச் செல்லும்
கோடரி !
கட்டுமரத்தின் குவியலைக்
கண்டு கொள்ளாது
கனல் பொறி !
ஆட்டு மந்தைக்கு
அஞ்சி
ஓடிப் போக மாட்டான்
கசாப்புக் கடையாளி !
+++++++++++++
மெய்த்து வத்தின்
முற்றத்தில்
வையகத்தின் வடிவென்ன ?
மிக மங்கிய தோற்றம் !
சுற்றிடும் ஒரு
கும்பா போல் வானை
நம்மீது
குப்புறக் கவிழ்த்துவது
மெய்ப்பாடு !
விண்வெளியில் ஆழியைச்
சுழற்றி விடுவது யார் ?
பிரபஞ் சத்தின்
பேரறிஞன் !
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 12 2010)
- உலகெங்கும் “சுதேசி”
- பெரிய புராணம் புதுக்கவிதை வடிவில் வெளியீடு
- முள்பாதை 51
- வெட்சி – மறுப்புரை
- இவர்களது எழுத்துமுறை – 11 சுந்தரராமசாமி
- ஹப்பிள் தொலைநோக்கி புரிந்த அரும்பெரும் சாதனைகள் ! (கட்டுரை -1)
- பொம்மை தேசம்…
- கடவுள் ஆடிடும் ஆட்டம்
- யாராவது காப்பாற்றுங்கள்
- தமிழ் பண்பாட்டுக் கழகம், ஹாங்காங், அக்டோபர் 10ஆம் தேதி, இலக்கிய இன்பம்
- வடக்குவாசல் – யமுனா அறிவிப்பு
- சவுதி அரேபியா ரியாத்தில் இலக்குவனார்,வ.உ.சி விழா
- காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை
- பொய்யான பதில்கள்
- மரணம் ஒத்த நிகழ்வு !
- மஞ்சள் வெளிச்சத்தில் நான் ஒழிந்து கொள்வேன்
- வலுவிழந்த எந்திரங்கள்..
- கல்லறைப் பூக்கள்
- தீபாவளி ஹைக்கூ
- பரிமளவல்லி – 16. ஏ.டி.எம்.
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -17
- பின்குறிப்பு
- தரிசனம்
- நினைவுகளின் சுவட்டில் – (55)
- இருப்பின் தகர்வு மைலாஞ்சிக்குப் பின்
- மொழிவது சுகம்: லீ-சியாபொவும்- ஏழு சமுராய்களும்
- அயோத்தி: ஆலயம் அமைவதை ஆதரிக்கும் ஷியாக்கள்
- சமுகத் தளங்களின் வளர்ச்சியும், பங்கேற்போரினன் உளவியலும், தமிழ்ப் பயன்பாட்டின் தரமும்
- விடுதலைப்போரில் நேதாஜி
- விதியா? மதியா?
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 2) யாரை கொல்லக்கூடாது?
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -1
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நேற்று, இன்று, நாளை கவிதை -35
- வட்டங்கள் இறக்கிய கிணறு….
- நான் இறந்து போயிருந்தேன் . . .
- கிருகஸ்தம்