துவாரகன்
இந்த உலகமே
பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது.
மனிதர்களை ஆட்டுவிக்கும்
அதிகாரிகளும் ஆயுததாரிகளும்
ஆகச் சிறந்த பைத்தியக்காரர்கள்.
பணத்திற்கும் பகட்டுக்கும்
ஒரு கூட்டம் எப்போதும் பைத்தியமாக அலைகிறது.
இச்சைக்காகக் கட்டிய கச்சையை
இழக்கத் தயாராயிருக்கிறார்கள்
காணுமிடமெல்லாம் பைத்தியங்கள்.
எல்லாம் இழந்தபின்
யாரோ ஒரு நல்லவனிடம்
கடன்வாங்கிக் கொண்டுவந்த
மூவாயிரத்து நானூறு ரூபாவை
பிரயாணத்தில் யாரோ களவாடிவிட்டதாக
நாடி நரம்பு தளர்ந்து போய்
கண்கலக்கிக் கூறினானே ஒரு முதியவன்;
அந்தக் களவாணியும் ஒரு பைத்தியம்தான்.
நான் நடந்து செல்லும்
ஒற்றையடிப்பாதையில்
உடல் தளர்ந்து
ஒட்டடைக் குடிலில் இருந்து
ஆசையாய்க் கதைகேட்கும்
இன்னொரு முதியவளின் கண்களில்
ஒளிந்திருக்கும் அன்பைக் கண்டேன் .
எந்தக் கபடமும் அவளிடமில்லை.
அவளைப் பைத்தியம் என விரட்டும்
என்னைச் சுற்றிய உலகத்தில் இருக்கும்
எல்லாருமே பைத்தியங்கள்தான்
இப்போ நான் செய்ய வேண்டியதெல்லாம்
இந்தப் பைத்தியக்கார உலகிடம் இருந்து
என் குழந்தைகளைக்
காப்பாற்றிக் கொள்வது மட்டுமே!
- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள்:
- முள்பாதை 49
- அன்புள்ள அய்யனார்—சுந்தர ராமசாமின் கடிதங்கள்
- திருப்பூரில் பதியம் இலக்கியக் கூடல்
- இனிக்கும் கழக இலக்கியம்
- பரிமளவல்லி பற்றி
- வெட்சி (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க கட்டுரைகளை முன்வைத்து…)
- சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)
- மூன்றாவது கவிதைத் தொகுதி –
- அம்ஷன் குமார் நடத்தும் குறும்பட ஆவணப்படங்களுக்கான இருதின பயிற்சிப்பட்டறை
- படைப்பாளி
- கடந்து செல்லும் கணங்கள்…
- குடைக் கம்பிகள் எழுதும் கதைகள் …
- அதிகாரப்பூர்வமாக!
- நீர்க்குமிழி
- நிராகரிப்பு
- சங்கத் தேய்வு இலக்கியம் – திணைமாலை நூற்றைம்பது.
- இவர்களது எழுத்துமுறை – 9. –இந்திராபார்த்தசாரதி
- பரிமளவல்லி – 14. மஞ்சள் கேக்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -15
- மொழிவது சுகம்:- தலைவர்களும் மனிதர்களும்
- நினைவுகளின் சுவட்டில் – (54)
- சூடாமணி, இலக்கிய மகுடம் சூடிக்கொண்ட மணி
- ராமச்சந்திர குஹாவின் “இந்திய வரலாறு காந்திக்கு பிறகு ”- விமர்சனம்
- முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”
- சமுதாய மேம்பாடும் பக்தி உணர்வும்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -21 நடனம் ஆடப் புல்லாங்குழலிசை
- பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பூரணம் அடைவது கவிதை -34 பாகம் -1
- பெயெரெச்சம்..
- ஏதோவொரு நாள்
- அவன் இவள்…
- அவனும், அவளும்
- பைத்தியக்காரர்களின் உலகம்
- இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்
- மழை வரப்போகிறது இப்போது !